حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " اسْمَعُوا وَأَطِيعُوا، وَإِنِ اسْتُعْمِلَ حَبَشِيٌّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலர்ந்த திராட்சை போன்ற தலை யுடைய அபிசீனிய (கறுப்பு நிற அடிமை யொருவ)ர் உங்களுக்குத் தலைவராக்கப் பட்டாலும் (அவருக்குச்) செவிசாயுங்கள்; கீழ்ப்படியுங்கள். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இமாமாகத் தொழுவிக்கின்ற) அவர்கள் உங்களுக்காகத் தொழுகை நடத்து கிறார்கள். அவர்கள் சரியாகத் தொழுதால், உங்களுக்கும் நன்மை உண்டு; அவர்களுக்கும் நன்மை உண்டு. அவர்கள் தவறு செய்தால், (நீங்கள் சரியாகத் தொழுததற்காக) உங்களுக்கு நன்மை உண்டு; (தவறிழைத்ததற்காக) அவர்களுக்குத் தீமை உண்டு.31 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகை யிடப்பட்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று, “நீங்கள் மக்கள் தலைவர் ஆவீர்கள். நீங்கள் காணும் சோதனை (முற்றுகை) உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் (இன்று) எங்களுக்குக் குழப்பவாதத் தலைவர் தொழுகை நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால் நாங்கள் (பாவத்தில் வீழ்கிறோமோ என்ற அச்சத்தில்) மன வேதனை அடைகிறோம். (எனவே, அவருக்குப் பின்னால் நாங்கள் தொழலாமா?)” என்று கேட்டேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “தொழுகை, மக்கள் செய்கின்ற செயல் களிலேயே மிக நல்ல செயலாகும். மக்கள் நன்மை செய்தால் நீங்களும் நன்மை செய்யுங்கள். அவர்கள் தவறிழைத்தால் அவர்கள் இழைக்கும் தவறுகளி-ருந்து நீங்கள் ஒதுங்கிவிடுங்கள்” என்று சொன்னார்கள். முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தவிர்க்க முடியாத காரணமிருந்தால் தவிர, (ஆணும் பெண்ணும் அல்லாத) அரவானிக்குப் பின்னால் தொழக் கூடாது என்றே நாம் கருதுகிறோம். அத்தியாயம் :
ஹதீஸ் 696 — Sahih al Bukhari 10:91
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي ذَرٍّ " اسْمَعْ وَأَطِعْ، وَلَوْ لِحَبَشِيٍّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ ".
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம், “(உங்களுக்குத் தலைவராக் கப்படுபவர்) உலர்ந்த திராட்சை போன்ற தலையுடைய அபிசீனியராயிருப்பினும், அவருக்கு நீங்கள் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 697 — Sahih al Bukhari 10:92
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعِشَاءَ، ثُمَّ جَاءَ فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ فَجِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ ـ أَوْ قَالَ خَطِيطَهُ ـ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாச-ல்) இஷா தொழுகை தொழுதுவிட்டு (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்துவிட்டு) நின்றார்கள். நான் சென்று (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் என்னைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அவர்களது குறட்டைச் சப்தத்தை நான் கேட்குமளவுக்கு உறங்கினார்கள். பின்னர் (சுப்ஹு) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்33 அத்தியாயம் :
ஹதீஸ் 698 — Sahih al Bukhari 10:93
حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ نِمْتُ عِنْدَ مَيْمُونَةَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ، فَتَوَضَّأَ ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ عَلَى يَسَارِهِ، فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ ـ وَكَانَ إِذَا نَامَ نَفَخَ ـ ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ، فَخَرَجَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. قَالَ عَمْرٌو فَحَدَّثْتُ بِهِ بُكَيْرًا فَقَالَ حَدَّثَنِي كُرَيْبٌ بِذَلِكَ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயாரும், நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் வீட்டில் ஓர் இரவு) உறங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நபியவர்கள் (சிறிது நேரம் உறங்கி எழுந்து) அங்கத் தூய்மை செய்துவிட்டு நின்று தொழுதார்கள். நான் சென்று அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் (தொழுகை யில் இருந்தவாறே) என்னைப் பிடித்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் குறட்டை விடும் அளவுக்கு உறங்கினார்கள். -(பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள்.- பிறகு தொழுகை அறிவிப்பாளர் அவர்களிடம் வந்(து தொழுகை நடத்த அவர்களை அழைத்)தபோது (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டுச் சென்று, (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே (சுப்ஹு தொழுகையைத்) தொழு(வித்)தார்கள். (அவர்களின் கண்கள் உறங்கினாலும் உள்ளம் உறங்குவதில்லை.) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (நான்காவது அறிவிப்பாளரான) அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் புகைர் (பின் அப்துல்லாஹ் பின் அல்அஷஜ்-ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், “இவ்வாறே (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) குரைப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். அந்த இரவில் (உறங்கிக் கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து (அங்கத் தூய்மை செய்துவிட்டுத்) தொழுதார்கள். நானும் எழுந்து அவர்களு டன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் எனது தலையைப் பிடித்து என்னைத் தமக்கு வலப் பக்கம் நிறுத்தினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 700 — Sahih al Bukhari 10:95
حَدَّثَنَا مُسْلِمٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّ قَوْمَهُ.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்குத் தலைமை தாங்கி (அந்தத் தொழுகையையே மீண்டும்) தொழுவிப்பார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 701 — Sahih al Bukhari 10:96
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّ قَوْمَهُ، فَصَلَّى الْعِشَاءَ فَقَرَأَ بِالْبَقَرَةِ، فَانْصَرَفَ الرَّجُلُ، فَكَأَنَّ مُعَاذًا تَنَاوَلَ مِنْهُ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " فَتَّانٌ فَتَّانٌ فَتَّانٌ " ثَلاَثَ مِرَارٍ أَوْ قَالَ " فَاتِنًا فَاتِنًا فَاتِنٌ " وَأَمَرَهُ بِسُورَتَيْنِ مِنْ أَوْسَطِ الْمُفَصَّلِ. قَالَ عَمْرٌو لاَ أَحْفَظُهُمَا.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். (ஒரு முறை மக்க ளுக்கு) முஆத் (ரலி) அவர்கள் இஷா தொழுகை தொழுவித்தபோது, (நீண்ட அத்தியாயமான) ‘அல்பகரா’வை ஓதினார் கள். அப்போது (அவர்களுக்குப் பின்னால் தொழுதுகொண்டிருந்த) ஒரு மனிதர் (தொழுகையி-ருந்து) விலகிச் சென்று விட்டார். எனவே, முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரை ஏசினார்கள் போலும். (இந்தச் செய்தி) நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது (முஆத் (ரலி) அவர்களிடம்) “(நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்ப வாதியா?” என்று மூன்று முறை கேட்டார் கள். மேலும், நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களி-ருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர் களைப் பணித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நபி (ஸல்) அவர்கள் ஓதுமாறு பணித்த) அவ்விரு அத்தியாயங்கள் (எதுவென்பது) என் நினைவில் இல்லை. அத்தியாயம் :
அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னார் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்குச் செல்லாமல் நான் தாமதித்து விடுகிறேன் (ஜமாஅத்திற்குச் செல்வதில்லை.)” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய (தினத்தில் ஆற்றிய) உரையின்போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள், “(மக்களே!) உங்களில் வெறுப்பூட்டுபவர்கள் சிலர் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமா(கத் தொழுவி)க்கட்டும். ஏனெனில், (பின்பற்றித் தொழும்) மக்களில் முதியவர்களும் பலவீனர்களும் அலுவல் உடையவர் களும் உள்ளனர்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :