حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ إِنَّ أُمَّ الْفَضْلِ سَمِعَتْهُ وَهُوَ يَقْرَأُ {وَالْمُرْسَلاَتِ عُرْفًا} فَقَالَتْ يَا بُنَىَّ وَاللَّهِ لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هَذِهِ السُّورَةَ، إِنَّهَا لآخِرُ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهَا فِي الْمَغْرِبِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ‘வல்முர்சலாத்தி உர்ஃபன்’ எனும் (குர்ஆனின் 77ஆவது) அத்தியாயத்தை ஓதுவதை (என் தாயார்) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். அப் போது அவர்கள், “என்னருமை மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீ இந்த அத்தியாயத்தை ஓதி எனக்கு (ஒன்றை) நினைவுபடுத்திவிட்டாய். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகை யில் இ(ந்த அத்தியாயத்)தை ஓதக் கேட்டதே நான் இறுதியாக அவர்களிட மிருந்து செவியுற்றதாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 764 — Sahih al Bukhari 10:158
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، قَالَ قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ مَا لَكَ تَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارٍ، وَقَدْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ بِطُولِ الطُّولَيَيْنِ
மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது: (மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.50 அத்தியாயம் :
ஹதீஸ் 765 — Sahih al Bukhari 10:159
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ فِي الْمَغْرِبِ بِالطُّورِ.
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘அத்தூர்’ (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதியதை நான் செவியுற்றேன். அத்தியாயம் :
அபூராஃபிஉ (நுஃபைஉ பின் ராஃபிஉ-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் இஷா தொழுகை தொழுதேன். அதில் அவர்கள், ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி (அதில் சஜ்தா (21ஆவது) வசனம் வந்ததும்) சஜ்தா (ஓதலுக்குரிய சிரவணக்கம்) செய்தார்கள். ஆகவே, அது குறித்து நான் அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர்கள், அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் சஜ்தா செய்திருக்கிறேன். நான் அவர்களைச் சந்திக்கும்வரை (அதாவது இறக்கும்வரை) நான் அ(தை ஓதுவ)தற்காக சஜ்தா செய்துகொண்டுதானிருப்பேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 767 — Sahih al Bukhari 10:161
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي سَفَرٍ فَقَرَأَ فِي الْعِشَاءِ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ بِالتِّينِ وَالزَّيْتُونِ.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷா தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (95ஆவது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதினார்கள். அத்தியாயம் :
அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களு டன் இஷா தொழுகையைத் தொழுதேன். அதில் அவர்கள், ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியா யத்தை ஓதி, (ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார் கள். ஆகவே, நான் (அவர்களிடம்), “என்ன இது? (ஏன் இந்த அத்தியாயத் திற்காக சஜ்தா செய்தீர்கள்?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின் னால் (தொழுதபோது) இ(ந்த அத்தி யாயத்தை ஓதிய)தற்காக சஜ்தா செய்திருக்கி றேன். அவர்களை நான் சந்திக்கும் (அதாவது இறக்கும்)வரை அ(தை ஓதிய)தற்காக சஜ்தா செய்துகொண்டுதானிருப்பேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 769 — Sahih al Bukhari 10:163
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنَا عَدِيُّ بْنُ ثَابِتٍ، سَمِعَ الْبَرَاءَ، رضى الله عنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ {وَالتِّينِ وَالزَّيْتُونِ} فِي الْعِشَاءِ، وَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ أَوْ قِرَاءَةً.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களைவிட ‘அழகிய குர-ல்’ அல்லது ‘அழகிய ஓதல் முறையில்’ வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை. அத்தியாயம் :
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் சஅத் (பின் அபீவக்காஸ்-ர-) அவர்களிடம், “(கூஃபா நகர) மக்கள் தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (என்னிடம்) முறையிட்டனர். (இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “நானோ முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதுகிறேன். பிந்திய இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்துக்காட்டிய முறையைப் பின் பற்றுவதில் நான் (எந்தக்) குறையும் செய்யமாட்டேன்” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் உன்மையே கூறினீர்கள். ‘உங்களைப் பற்றி (நமது) எண்ணமும்’ அல்லது ‘உங்களைப் பற்றி எனது எண்ணமும்’ அதுதான்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் சென்று, (கடமையான) தொழுகைகளின் நேரம் குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழு கையை சூரியன் (நடுவானி-ருந்து மேற்கு நோக்கி) சாயும்போது தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். (எங்களில்) ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனா வின் கடைக் கோடி(யிலுள்ள தமது வீட்டு)க்குத் திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குன்றாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும். -மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) குறித்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறி னார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.- இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதிவரைத் தாமதப்படுத்து வதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; (அதை விரும்புவார்கள்.) இஷா தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப்பின் பேசிக்கொண்டிருப்பதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையைத் தொழுவித்து முடிப்பார்கள். அப்போது தொழுகையை முடிக்கும் ஒருவர் தமது அருகில் இருப்பவரை அறிந்துகொள்வார். (அந்த அளவுக்கு வெளிச்சம் வந்துவிட்டிருக்கும்.) நபி (ஸல்) அவர்கள் (சுப்ஹு தொழுகையின்) ‘இரு ரக்அத்களில்’ அல்லது ‘அவற்றில் ஒன்றில்’ அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்.51 அத்தியாயம் :
ஹதீஸ் 772 — Sahih al Bukhari 10:166
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ فِي كُلِّ صَلاَةٍ يُقْرَأُ، فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَسْمَعْنَاكُمْ، وَمَا أَخْفَى عَنَّا أَخْفَيْنَا عَنْكُمْ، وَإِنْ لَمْ تَزِدْ عَلَى أُمِّ الْقُرْآنِ أَجْزَأَتْ، وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை நாங்களும் உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாங்களும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம். (தொழுகையில்) குர்ஆனின் அன்னை (யான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) விடக் கூடுதலாக வேறு எதையும் நீ ஓதாவிட்டாலும் (உமது தொழுகை) நிறைவேறிவிடும். ஆயினும், அதைவிட அதிகமாக நீ ஓதினால், அதுவே சிறந்ததாகும். அத்தியாயம் :