حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنِ الأَعْلَمِ ـ وَهْوَ زِيَادٌ ـ عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " زَادَكَ اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ ".
அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்-ர-) அவர்கள் கூறியதாவது: (தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்துகொண்டிருந்தபோது, நான் சென்று வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்துவிட்டேன். (பின்னர்) இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்து வானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.58 அத்தியாயம் :
ஹதீஸ் 784 — Sahih al Bukhari 10:179
حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلاَءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ صَلَّى مَعَ عَلِيٍّ ـ رضى الله عنه ـ بِالْبَصْرَةِ فَقَالَ ذَكَّرَنَا هَذَا الرَّجُلُ صَلاَةً كُنَّا نُصَلِّيهَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَذَكَرَ أَنَّهُ كَانَ يُكَبِّرُ كُلَّمَا رَفَعَ وَكُلَّمَا وَضَعَ.
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பஸ்ரா நகரில் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். (தொழுது முடித்தபின் அலீ (ரலி) அவர் களைச் சுட்டிக்காட்டி) “இந்த மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழுத தொழுகையை நினைவூட்டு(ம் வகையில் தொழுவிக்)கிறார்” என்று இம்ரான் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் நிமிரும்போதும் தாழும்போதும் தக்பீர் கூறுவார்கள்” என்றும் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துவந்தார்கள். அவர்கள் (ஒவ்வொரு முறை) குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகையை முடித்தபின், “நிச்சயமாக நான் உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகாட்டியதைப் போன்றே (மிகச் சரியாக) தொழுவிப்பவன் ஆவேன்” என்று குறிப்பிடுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 786 — Sahih al Bukhari 10:181
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّيْتُ خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ،، فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ أَخَذَ بِيَدِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ فَقَالَ قَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. أَوْ قَالَ لَقَدْ صَلَّى بِنَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தா செய்யும்போது தக்பீர் கூறினார்கள்; (சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழும்போதும் தக்பீர் கூறினார்கள். தொழுகை முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு, ‘இவர் எனக்கு முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழு கையை நினைவூட்டிவிட்டார்’ அல்லது ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுத முறைப்படி நமக்குத் தொழுவித்தார்’ என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 787 — Sahih al Bukhari 10:182
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ رَأَيْتُ رَجُلاً عِنْدَ الْمَقَامِ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ وَإِذَا قَامَ وَإِذَا وَضَعَ، فَأَخْبَرْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَوَلَيْسَ تِلْكَ صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ أُمَّ لَكَ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இறையில்லம் கஅபாவை ஒட்டியுள்ள) ‘மகாமு இப்ராஹீம்’ அருகில் (தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதரை நான் கண்டேன். அவர் ஒவ்வொரு முறை குனியும் போதும் நிமிரும்போதும் எழும்போதும் தாழும் போதும் தக்பீர் கூறினார். (விளக்கம் கேட்கும் விதமாக இது குறித்து) நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், “தாயற்றுப்போவாய்! அது நபி (ஸல்) அவர்கள் தொழுத தொழுகை (போன்று) இல்லையா?” என்று கேட்டார்கள்.60 அத்தியாயம் :
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மக்காவில் ஒரு பெரியவருக்குப் பின்னால் (லுஹ்ர் தொழுகை) தொழுதேன். (அத்தொழுகையில்) அவர், இருபத்து இரண்டு தக்பீர்கள் கூறினார். இது குறித்து நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறுகையில், “அவர் ஓர் அறிவி-” என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உன் தாய் உன்னை இழக்கட் டும்; (அது) அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களின் வழிமுறைதான்” என்று கூறினார்கள்.61 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால், நின்ற நிலையில் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉ செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூஉவி-ருந்து தமது முதுகை உயர்த் தும்போது சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கி றான்) என்று கூறுவார்கள். பிறகு நின்ற நிலையில் ‘ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியன) என்பார்கள். -(இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘ரப்பனா வல(க்)கல் ஹம்த்’ என்று இடம்பெற்றுள்ளது.- பின்னர் (சஜ்தாவுக்காகக்) தாழும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) சஜ்தா செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (அந்த சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு தொழுகையை முடிக்கும்வரை தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் இவ்வாறே செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத் முதல்) அமர்வை முடித்து எழும்போதும் தக்பீர் கூறுவார்கள். அத்தியாயம் :
முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ்-ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூஉவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் நடுவில் வைத்துக் கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, “நாங்கள் இவ்வாறு (முதலில்) செய்துகொண்டிருந் தோம். பின்னர் அவ்வாறு செய்யக் கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள்மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (தொழுகையில்) தமது ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாக நிறைவேற்றாத ஒரு மனிதரை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள் (அந்த மனிதரிடம்), “நீர் தொழவே இல்லை. (இதே நிலையில்) நீர் இறந்துவிட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் எந்த நெறியில் அமைத்தானோ அந்த நெறிக்கு மாற்றமான ஒன்றிலேயே இறக்கிறீர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 792 — Sahih al Bukhari 10:187
حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي الْحَكَمُ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ، قَالَ كَانَ رُكُوعُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَسُجُودُهُ وَبَيْنَ السَّجْدَتَيْنِ وَإِذَا رَفَعَ مِنَ الرُّكُوعِ، مَا خَلاَ الْقِيَامَ وَالْقُعُودَ، قَرِيبًا مِنَ السَّوَاءِ.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தொழுகையில் நபி (ஸல்) அவர்களது) நிற்றல், (அத்தஹிய்யாத்) அமர்வு ஆகி யவை நீங்கலாக அவர்களின் ருகூஉ, அவர்களது சஜ்தா, இரு சஜ்தாக்களுக் கிடையிலான இடைவெளி, ருகூஉவி-ருந்து அவர்கள் நிமிர்தல் ஆகிய அனைத்தும் ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன. அத்தியாயம் :