حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ أَخْبَرَنَا هُشَيْمٌ، قَالَ أَخْبَرَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ اللَّيْثِيُّ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي، فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا.
மா-க் பின் அல்ஹுவைரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தமது தொழு கையின் ஒற்றைப்படையான ரக்அத்களின் போது நிமிர்ந்து உட்காராமல் (அடுத்த ரக்அத்திற்காக) எழமாட்டார்கள். அத்தியாயம் :
அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவி-ருந்த) எங்களிடம் மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, “உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமையான) தொழுகையை (இப்போது தொழுவது) என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுது காட்டுவதே என் நோக்கம்” என்று கூறிவிட்டு, எங்களது இப்பள்ளிவாச-ல் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். இதன் அறிவிப்பாளரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்போது நான் அபூகிலாபா (ரஹ்) அவர்களிடம், “மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அபூகிலாபா (ரஹ்) அவர்கள், “இதோ இந்தப் பெரியவர்-அம்ர் பின் சலிமா அவர்கள் -தொழுவதைப் போன்றிருந்தது” என்று பதிலளித்தார்கள். அய்யூப் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: அந்தப் பெரியவர் தக்பீரை முழுமை யாகக் கூறுவார். இரண்டாவது சஜ்தாவிலி ருந்து எழும்போது அமர்ந்துவிட்டு, பூமியில் (கைகளை) ஊன்றி பின்பு எழுவார். அத்தியாயம் :
சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) எங்களுக்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் சஜ்தாவி-ருந்து தமது தலையை உயர்த்தியபோதும் சஜ்தா செய்யும்போதும் (சஜ்தாவி-ருந்து தமது தலையை) உயர்த்தியபோதும் இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழுந்தபோதும் சப்தமாக ‘தக்பீர்’ கூறினார்கள். (அது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது) “இவ்வாறே நபி (ஸல்) அவர்களை நான் (தொழக்)கண்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 826 — Sahih al Bukhari 10:220
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ مُطَرِّفٍ، قَالَ صَلَّيْتُ أَنَا وَعِمْرَانُ، صَلاَةً خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ، فَلَمَّا سَلَّمَ أَخَذَ عِمْرَانُ بِيَدِي فَقَالَ لَقَدْ صَلَّى بِنَا هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. أَوْ قَالَ لَقَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவில்) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) ஒரு தொழுகை யைத் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தா செய்தபோது ‘தக்பீர்’ கூறினார்கள்; (சஜ்தாவி-ருந்து தலையை) உயர்த்திய போதும் ‘தக்பீர்’ கூறினார்கள்; இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழுந்தபோதும் ‘தக்பீர்’ கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் சலாம் கொடுத்து முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘இவர் நமக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்று தொழுவித்தார்’ அல்லது ‘இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத் அமர்வில்) உட்காரும்போது சம்மணமிட்டு உட்கார்வதை நான் பார்த்துவந்தேன். ஆகவே, நானும் அவ்வாறே செய்வேன். அப்போது நான் வயதில் சிறியவனாக இருந்தேன். இதைக் கண்ட (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அவ்வாறு செய்யக் கூடாதென என்னைத் தடுத்துவிட்டு, “தொழுகையில் உட்காரும் (சுன்னத்தான) முறை என்னவென்றால், உன் வலக் காலை நட்டு வைத்து, இடக் காலை மடித்து (படுக்க) வைப்பதாகும்” என்று கூறினார்கள். “அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(முதுமை யின் காரணத்தால்) என் கால்கள் என்னைத் தாங்காது” என்று பதிலளித் தார்கள். அத்தியாயம் :
முஹம்மத் பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக்கொண்டோம். அங்கிருந்த அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தொழுகை (முறை) பற்றி உங்களில் நானே நன்கு மனனமிட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; அவர்கள் (முதல்) தக்பீர் கூறும்போது தம் கைகளைத் தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூஉ (குனிவு) செய்யும்போது தம் கைகளை முழங்கால்கள்மீது நன்கு ஊன்றிக்கொள்வார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக)ச் சாய்ப்பார்கள். அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தும்போது, முதுகெலும்புகளில் ஒவ்வொன்றும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமிர்ந்து நிற்பார்கள். சஜ்தா செய்யும்போது அவர்கள் தம் கைகளைப் பரப்பி வைக்கவுமாட்டார்கள்; அவற்றை விலா வுடன் ஒடுக்கி வைக்கவுமாட்டார்கள்; கால்விரல் முனைகளைக் கிப்லாவை நோக்கி வைப்பார்கள். இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய் யாத் அமர்வில்) அமரும்போது தமது இடக் கால்மீது அமர்ந்து வலக் காலை நட்டு வைப்பார்கள். இறுதி ரக்அத்தில் (அத்தஹிய்யாத் அமர்வில்) உட்காரும் போது இடக் காலை (குறுக்கு வாட்டில் வலப்புறம்) கொண்டுவந்து, வலக் காலை நட்டு வைத்து, தமது புட்டம் தரையில் படியுமாறு உட்காருவார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 829 — Sahih al Bukhari 10:223
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ، مَوْلَى بَنِي عَبْدِ الْمُطَّلِبِ ـ وَقَالَ مَرَّةً مَوْلَى رَبِيعَةَ بْنِ الْحَارِثِ ـ أَنَّ عَبْدَ اللَّهِ ابْنَ بُحَيْنَةَ ـ وَهْوَ مِنْ أَزْدِ شَنُوءَةَ وَهْوَ حَلِيفٌ لِبَنِي عَبْدِ مَنَافٍ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمُ الظُّهْرَ فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ لَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ حَتَّى إِذَا قَضَى الصَّلاَةَ، وَانْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ، كَبَّرَ وَهْوَ جَالِسٌ، فَسَجَدَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ ثُمَّ سَلَّمَ.
அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை எங்களுக்கு லுஹ்ர் தொழுகை தொழுவித் தார்கள். அப்போது முந்திய இரு ரக் அத்கள் முடிந்ததும் (அத்தஹிய்யாத் அமர்வில்) உட்காராமலேயே எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்துவிட்டனர். நபியவர்கள் தொழுகையை முடித்து, சலாம் கொடுப்பதை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, அமர்ந்தபடியே நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள்; சலாம் கொடுப்பதற்குமுன் (மறதிக்காக) இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் சலாம் கொடுத்தார்கள்.72 இதன் அறிவிப்பாளரான இப்னு புஹைனா (ரலி) அவர்கள், பனூ அப்தி மனாஃப் குலத்தாரின் நட்புக் கூட்டமான அஸ்த் ஷநூஆ குலத்தைச் சேர்ந்த நபித்தோழர் ஆவார். அத்தியாயம் :
அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். (முதலாவது அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார வேண்டிய திருக்க, அவர்கள் அதில் உட்காராமலேயே எழுந்துவிட்டார்கள். தொழுகையின் இறுதியை அடைந்ததும் (சலாமுக்குமுன்) உட்கார்ந்தபடியே (மறதிக்கான) இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.73 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது, ‘அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, வ மீக்காயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலான் வ ஃபுலான்’ (ஜிப்ரீல்மீதும் மீக்காயீல்மீதும் சாந்தி உண்டாகட்டும். இன்னார் மீதும் இன்னார்மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறுபவர்களாக இருந்தோம். (தொழுகை முடிந்ததும்) எங்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி, “நிச்சயமாக அல்லாஹ் தான் ‘சலாம்’ (எனும் சாந்தி அளிப்பவன்) ஆவான். உங்களில் ஒருவர் தொழு(கை யின் அமர்வில் இருக்கு)ம்போது, “அத்தஹிய்யாத்து -ல்லாஹி வஸ்ஸல வாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மத் துல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா, வ அலா இபாதில்லாஹிஸ் ஸா-ஹீன்” என்று கூறட்டும்! (பொருள்: சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்கைகளும் வழிபாடுகளும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் அனைவர்மீதும் சாந்தி உண்டாகட்டும்.) இதை நீங்கள் கூறினால், வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடி யார்கள்மீதும் சலாம் கூறியதாக அமையும். “அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிகூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதிகூறுகிறேன்) என்றும் கூறட்டும்!” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 832 — Sahih al Bukhari #832
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنَا عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ ". فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ الْمَغْرَمِ فَقَالَ " إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ ". وَعَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَعِيذُ فِي صَلاَتِهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنَا عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ ". فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ الْمَغْرَمِ فَقَالَ " إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ ". وَعَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَعِيذُ فِي صَلاَتِهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ