இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான்கு மாதம் முடிந்துவிட்டால், கணவன் மணவிலக்குச் செய்யும்வரை (முடிவு) நிறுத்திவைக்கப்படும். கணவனாக மணவிலக்குச் செய்யும்வரை (ஈலாவில்) மணவிலக்கு நிகழாது. இதே கருத்து நபித்தோழர்களில் உஸ்மான், அலீ, அபுத்தர்தா, ஆயிஷா (ரலி) மேலும் பன்னிரண்டு பேரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.48 அத்தியாயம் :
அல்முன்பஇஸ் (ரஹ்) அவர்களின் (முன்னாள்) அடிமையான யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், வழிதவறி வந்துவிட்ட ஆட்டைப் பற்றி வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (வினவியவரிடம்), ‘‘அதை நீ பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரனுக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று பதிலளித்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்களிடம் வழிதவறி வந்துவிட்ட ஒட்டகத்தைப் பற்றி வினவப்பட்டது. (இதைச் செவியுற்ற) உடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந் தார்கள். (எந்த அளவுக்கென்றால்) அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன. பிறகு, ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன்தான் (நடப்பதற்கு) குளம்பும், (நீரைச் சேமிக்கத்) தண்ணீர் பையும் (வயிறும்) உள்ளதே! அதை அதன் உரிமையாளன் சந்திக்கும் வரை தண்ணீர் அருந்தி (தாகம்தணித்து)க்கொள்கிறது. மரத்திலிருந்து அது (இலை தழைகளைத்) தின்கிறது” என்று சொன்னார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களிடம், கண்டெடுக்கப்பட்ட பொருள் குறித்தும் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் தெரிந்து வைத்துக்கொண்டு ஓராண்டுக் காலத்திற்கு அதை அறிவிப்புச் செய்!” ‘‘அதன் (உரிமையாளரான) அடையாளம் அறிந்தவர் வந்தால் சரி! (அதை அவரிடம் கொடுத்துவிடு;) இல்லாவிட்டால் அதை உனது செல்வத்துடன் சேர்த்துக்கொள்!” என்றார்கள்.50 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, இந்த அறிவிப்பைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து (கேட்டு) மனனமிடவில்லை. ‘‘வழிதவறி வந்துவிட்டவை தொடர்பாக யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள (மேற்கண்ட) ஹதீஸ், (நபித்தோழர்) ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப் பட்டதுதானே! எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கேட்டேன். அதற்கு ரபீஆ (ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட ஹதீஸை) ஸைத் பின் காலித் (ரலி) அவர்களிடமிருந்து யஸீத் (ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 5293 — Sahih al Bukhari 68:42
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ طَافَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى بَعِيرِهِ، وَكَانَ كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ، وَكَبَّرَ. وَقَالَتْ زَيْنَبُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " فُتِحَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ ". وَعَقَدَ تِسْعِينَ.
(இப்னு அப்பாஸ் ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதிருந்தபடி (புனித கஅபாவைச்) சுற்றிவந்தார்கள். அந்த (‘ஹஜருல் அஸ்வத்’ கல் இருக்கும்) மூலைக்கு வரும்போதெல்லாம் அதனை நோக்கி (தமது கையிலுள்ள ஒரு பொருளால் முத்தமிடுவதுபோல்) சைகை செய்தபடி ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்வார்கள்.60 ஸைனப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ‘‘யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இதைப் போன்று (சிறிது) திறக்கப்பட்டது” என்று கூறி தமது கையால் 90 என்று (அரபி எண் வடிவில்) மடித்துக் காட்டி னார்கள்.61 அத்தியாயம் :
அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எந்த நன்மையைக் கோரினாலும், அவருக்கு அதை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. இதைக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் தம் விரல்நுனிகளை நடுவிரல் மற்றும் மோதிர விரலின் அடிப் பாகத்தின் மீது வைத்துத் தமது கையால் சைகை செய்தார்கள். ‘‘(இதன் மூலம்) அது குறைந்த நேரம் என்பதை நபியவர்கள் உணர்த்துகிறார்கள்” என நாங்கள் பேசிக் கொண்டோம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.62 அத்தியாயம் :
ஹதீஸ் 5295 — Sahih al Bukhari 68:44
وَقَالَ الأُوَيْسِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ شُعْبَةَ بْنِ الْحَجَّاجِ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ عَدَا يَهُودِيٌّ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى جَارِيَةٍ، فَأَخَذَ أَوْضَاحًا كَانَتْ عَلَيْهَا وَرَضَخَ رَأْسَهَا، فَأَتَى بِهَا أَهْلُهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْىَ فِي آخِرِ رَمَقٍ، وَقَدْ أُصْمِتَتْ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَتَلَكِ فُلاَنٌ ". لِغَيْرِ الَّذِي قَتَلَهَا، فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ لاَ، قَالَ فَقَالَ لِرَجُلٍ آخَرَ غَيْرِ الَّذِي قَتَلَهَا، فَأَشَارَتْ أَنْ لاَ، فَقَالَ " فَفُلاَنٌ ". لِقَاتِلِهَا فَأَشَارَتْ أَنْ نَعَمْ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُضِخَ رَأْسُهُ بَيْنَ حَجَرَيْنِ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்களில் ஒருவன் ஒரு சிறுமியின் (கழுத்தில் கிடந்த) வெள்ளிக் காசு மாலையைப் பறித்துக்கொண்டு அவளது மண்டையை உடைத்துவிட்டான். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அவளை உடனே அவளுடைய குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அவளால் பேச முடியவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘உன்னைத் தாக்கியவன் யார்? இவனா?” என்று அவளைத் தாக்காத வேறொருவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டார்கள். அதற்கு அச்சிறுமி, ‘‘இல்லை” என்று தனது தலையால் சைகை செய்தாள். பிறகு அவளைத் தாக்காத இன்னொரு வரின் பெயரைக் குறிப்பிட்டு (இவரா உன்னைத் தாக்கியவர்? என்று) கேட்டார் கள். அதற்கும் அவள், ‘‘இல்லை” என்று சைகை செய்தாள். இறுதியில் ‘‘இன்னாரா?” என்று அவளைத் தாக்கியவனின் பெயரைச் சொல்லிக் கேட்டதும் அவள், ‘‘ஆம்” என்று சைகை செய்தாள். உடனே அந்த நபருக்குத் தண்டனை வழங்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அவனுடைய தலை இரு கற்களுக்கிடையில் வைத்து நசுக்கப் பட்டது.63 அத்தியாயம் :
ஹதீஸ் 5296 — Sahih al Bukhari 68:45
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " الْفِتْنَةُ مِنْ هَا هُنَا ". وَأَشَارَ إِلَى الْمَشْرِقِ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து, ‘‘இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும்” என்று சொல்லக் கேட்டேன்.64 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மக்கா வெற்றியின்) பயணத்தில் இருந்துகொண்டிருந்தோம். (அப்போது அவர்கள் ரமளான் நோன்பு நோற்றி ருந்தார்கள்.) சூரியன் மறைந்ததும் ஒரு மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று எனக்காக மாவு கரைப்பீராக!” என்று சொன்னார்கள். அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக!” என்று (மீண்டும்) சொன்னார்கள். அதற்கு அவர், ‘‘பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக் கிறதே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக!” என்று சொன்னார்கள். மூன்றாம் தடவையில் அவர் இறங்கிவந்து நபி (ஸல்) அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்தி (நோன்பு துறந்து)விட்டுத் தமது கையால் கிழக்கு நோக்கி சைகை செய்தவாறு, ‘‘நீங்கள் (கிழக்குத் திசையான) இங்கிருந்து இரவு முன்னோக்கி வந்து விடக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்திட வேண்டும்” என்று சொன்னார்கள்.65 அத்தியாயம் :
ஹதீஸ் 5298 — Sahih al Bukhari 68:47
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ يَمْنَعَنَّ أَحَدًا مِنْكُمْ نِدَاءُ بِلاَلٍ ـ أَوْ قَالَ أَذَانُهُ ـ مِنْ سَحُورِهِ، فَإِنَّمَا يُنَادِي أَوْ قَالَ يُؤَذِّنُ لِيَرْجِعَ قَائِمُكُمْ ". وَلَيْسَ أَنْ يَقُولَ كَأَنَّهُ يَعْنِي الصُّبْحَ أَوِ الْفَجْرَ، وَأَظْهَرَ يَزِيدُ يَدَيْهِ ثُمَّ مَدَّ إِحْدَاهُمَا مِنَ الأُخْرَى.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து ‘பிலாலின் அழைப்பு’ அல்லது ‘பிலாலின் (தொழுகை) அறிவிப்பு’ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் ‘அவர் அழைப்பது’ அல்லது ‘அவர் (தொழுகை) அறிவிப்புச் செய்வது’, உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகத்தான்; ‘சுப்ஹ்’ அல்லது ‘ஃபஜ்ர்’ நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல. இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது தம் கைகளை வெளிப்படுத்தினார்கள். பிறகு ஒரு கையைவிட இன்னொரு கையை (நீளவாட்டில்) நீட்டிக்காட்டி (‘நீளவாட்டில் தோன்றும் அதிகாலை வெளிச்சமே உண்மையான ஃபஜ்ர் நேரம் ஆகும்; அகலவாட்டில் தோன்றுவதன்று’ என்பதுபோல்) சைகை செய்தார்கள்.66 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (செலவே செய்யாத) கஞ்சன், செலவு செய்கின்ற (தாராள மனம் படைத்த)வன் ஆகிய இருவரின் நிலையானது, இரு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவ்விருவரும் தமது மார்பிலிருந்து கழுத்தெலும்புவரை இரும்பாலான நீளங்கி அணிந்துள்ளனர். செலவு செய்கின்றவர் எதைச் செலவு செய்தாலும் அவரது அங்கி உடல்மீது நீண்டுகொண்டே சென்று விரல்நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரது பாதச்சுவடுகளைக்கூட(த்தொட்டு) அழித்துவிடுகிறது. கஞ்சன் (எதையாவது) செலவு செய்ய விரும்பினால் (அவனது இரும்பு அங்கியின்) ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை இறுக்கிப் பிடித்துக்கொள்கிறது. அவன் அதை(த் தளர்த்தி) விரிவாக்க முயல்கிறான். ஆனால், அது விரிவடைவதில்லை. (இதைக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் (குரல்வளையைக் கழுத்துச் சட்டை இறுக்கிப் பிடிப்பதை உணர்த்தும் முகமாக) தமது விரலால் தமது குரல்வளையைக் காட்டி சைகை செய்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.67 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததை உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், ‘‘ஆம்! (தெரிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். ‘‘(அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது,) பனூ நஜ்ஜார் குடும்ப மாகும். பிறகு அவர்களைத் தொடர்ந்து பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பின்னர் அவர்களைத் தொடர்ந்து பனூ ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குடும்பமாகும். பின்னர் அவர்களைத் தொடர்ந்து பனூ சாஇதா குடும்பமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபின் தமது விரல்களை மடக்கிப் பின்பு அவற்றை விரித்துவிட்டுத் தமது கையால் (எதையோ) எறிபவர்போல் (சைகை) செய்தார்கள். பிறகு ‘‘அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு” என்று சொன்னார்கள்.69 அத்தியாயம் :