அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் (ஒரு விஷயத் தைப் பற்றி), “நான் இதைக் குறித்து இப்படிக் கருதுகிறேன்” என்று சொல்ல நான் கேட்பேனாயின், அந்த விஷயம் அவர்கள் கூறியதைப் போலத்தான் இருக்கும். ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் (தம் இடத்தில்) அமர்ந்திருந்தபொழுது அழகான ஒரு மனிதர் அவர்களைக் கடந்து சென்றார். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஒன்று நான் (இவர் அஞ்ஞானக் கலாசாரத்தில் இருப்பவர் என்று) நினைத்தது தவறாயிருக்க வேண்டும்; அல்லது (நான் நினைத்தது சரியாக இருக்குமானால்) இந்த மனிதர் தமது (பழைய) அறியாமைக் கால மார்க்கத்திலேயே இருக்க வேண்டும்; அல்லது (அறியாமைக் கால) அம்மக்களுக்குக் குறிசொல்பவராக (சோதிடராக) இருந்திருக்க வேண்டும். அந்த மனிதரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர், உமர் (ரலி) அவர்களிடம் அழைத்துவரப்பட்டார். உமர் (ரலி) அவர்கள், தாம் (முன்பு சந்தேகத்துடன்) கூறியதையே அந்த மனிதரிடமும் கேட்டார்கள். அந்த மனிதர் (தம்மைப் பற்றி உமர் முன்வைத்த சந்தேகத்தால் வெறுப்படைந்தவராய்), “இன்று ஒரு முஸ்லிமான மனிதருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு போன்று நான் (எப்போதும்) பார்த்ததில்லை” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள், “நீ எனக்கு (அறியாமைக் காலத்தில் நடந்த) செய்தியைச் சொல்லத்தான் வேண்டும் என்று விரும்பு கிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “நான் அறியாமைக் காலத்தில் அம்மக்களின் சோதிடனாக (குறிகாரனாக) இருந்தேன்” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள், “உனது பெண் ஜின் உன்னிடம் கொண்டுவந்த செய்திகளிலேயே மிகவும் வியப்புக்குரியது எது?” என்று கேட்டார்கள். அம்மனிதர், “நான் ஒரு நாள் கடைவீதியில் இருந்தபோது, பெண் ஜின் என்னிடம் வந்தது. அதனிடம் பீதியைக் கண்டேன். அப்போது “ஜின்கள் அடைந்துள்ள அச்சத்தை நீங்கள் பார்க்கவில்லையா? அவை (மேலுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாமல்) தோல்வியுற்றுத் திரும்புவதால் அடைந்துள்ள நிராசையை யும் நீங்கள் பார்க்கவில்லையா? அவை இளம் ஒட்டகங்களையும் அவற்றின் (சேண இருக்கையின் கீழே விரிக்கப்படும்) துணியையும் பின்பற்றிச் செல்வதைக் காணவில்லையா?'108 என்று கேட்டது” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள், “இவர் உண்மை சொன்னார். நான் (கஅபாவில்) இணைவைப்பாளர்களின் கடவுள் (சிலை)களுக்கு அருகே தூங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் காளைக் கன்று ஒன்றைக் கொண்டுவந்து (பலி கொடுத்து) அதை அறுத்தார். அப்போது அசரீரிக் குரல் ஒன்று வந்தது. அதைவிடக் கடுமையான குரலில் குரல் கொடுப்பவர் எவரையும் நான் செவியுற்றதேயில்லை. அது, “பகிரங்கமாகப் பகைத்துக்கொண்டவரே! வெற்றிகரமான ஒரு விஷயம். பேச்சுத் திறனுள்ள ஒரு மனிதர், “(அல்லாஹ்வே!) உன்னைத் தவிர வேறு இறைவனில்லை' என்று சொல்வார்” என்று குரல் கொடுத்தது. உடனே (இணைவைக்கும்) மக்கள் குதித்தெழுந்தார்கள். நான், “இந்த மர்மக் குரலுக்குப் பின்னால் என்ன உள்ளது என்பதை அறிந்துகொள்ளாமல் விடமாட்டேன்” என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) அந்த அசரீரி, “பகிரங்கமாகப் பகைத்துக் கொண்டவரே! வெற்றிகரமான ஒரு விஷயம். பேச்சுத் திறனுள்ள ஒரு மனிதர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை' என்று சொல்வார்” என்று குரல் கொடுத்தது. நான் எழுந்து சென்றுவிட்டேன். சிறிது காலத்திற்குள்ளாகவே, “இதோ ஒரு நபி (வந்துவிட்டார்)” என்று சொல்லப் பட்டது. அத்தியாயம் :
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “உமர் அவர்கள், நானும் அவருடைய சகோதரியும் இஸ்லாத்தை ஏற்றதற்காக என்னைக் கட்டிவைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டிருக்கிறேன். -அப்போது அவர் முஸ்லிமாயிருக்க வில்லை. -உஸ்மான் (ரலி) அவர்கள் விஷயத்தில் (அன்னாரைக் கொலை செய்து) நீங்கள் நடந்துகொண்ட (விதத்)தைக் கண்டு (மனம் தாளாமல்) உஹுத் மலை தனது இடத்தைவிட்டுப் பெயர்ந்து விட்டால் அதுவும் சரியானதே” என்று (கூஃபாவின் மஸ்ஜிதில் கூடியிருந்த) மக்களிடம் சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.109 அத்தியாயம் :
ஹதீஸ் 3868 — Sahih al Bukhari 63:93
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّ أَهْلَ، مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُرِيَهُمْ آيَةً، فَأَرَاهُمُ الْقَمَرَ شِقَّتَيْنِ، حَتَّى رَأَوْا حِرَاءً بَيْنَهُمَا.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைத்தூதர்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சந்திரனை இரு துண்டுகளாக (பிளந்திருக்க)க் காட்டினார்கள். எந்த அளவுக் கென்றால், மக்காவாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே “ஹிரா' மலையைக் கண்டார்கள்.110 அத்தியாயம் :
ஹதீஸ் 3869 — Sahih al Bukhari 63:94
حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ انْشَقَّ الْقَمَرُ وَنَحْنُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِنًى فَقَالَ " اشْهَدُوا ". وَذَهَبَتْ فِرْقَةٌ نَحْوَ الْجَبَلِ وَقَالَ أَبُو الضُّحَى عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللَّهِ انْشَقَّ بِمَكَّةَ. وَتَابَعَهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ عَنْ أَبِي مَعْمَرٍ عَنْ عَبْدِ اللَّهِ.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் (இரு துண்டுகளாகப்) பிளவுபட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (இதைப் பார்த்து நினைவில் இருத்தி) சாட்சியாக இருங்கள்” என்று சொன்னார்கள். (அதன்) இரு துண்டுகளில் ஒன்று (ஹிரா) மலையின் திசையில் சென்றது.111 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், மஸ்ரூக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “மக்காவில் (சந்திரன்) பிளந்தது” என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3870 — Sahih al Bukhari 63:95
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، قَالَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ الْقَمَرَ، انْشَقَّ عَلَى زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் சந்திரன் (இரு துண்டு களாகப்) பிளவுபட்டது.112 அத்தியாயம் :
ஹதீஸ் 3871 — Sahih al Bukhari 63:96
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ انْشَقَّ الْقَمَرُ.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் காலத்தில்) சந்தி ரன் (இரு துண்டுகளாகப்) பிளவுபட்டது. அத்தியாயம் :
உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம், “நீங்கள் உங்களுடைய (குலவழி) மாமா உஸ்மான் (ரலி) அவர்களி டம், அவர்களுடைய தாய்வழிச் சகோதரர் வலீத் பின் உக்பா பற்றிப் பேசாமலிருப்பது ஏன்? மக்கள் வலீதின் செயல்பாடுகள் குறித்து அதிகமாகக் குறை கூறுகிறார்களே!” என்று கேட்டார்கள். ஆகவே, நான் உஸ்மான் (ரலி) அவர்கள் தொழுகைக்காகப் புறப்பட்ட நேரத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தேன். அவர்களிடம், “எனக்கு உங்களிடம் சற்று(ப் பேச வேண்டிய) தேவை உள்ளது. அது (உங்க ளுக்கு நான் கூற விரும்பும்) அறிவுரை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “மனிதரே! உம்மிடமிருந்து நான் அல்லாஹ் விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னார்கள். உடனே, நான் திரும்பி (அவ்விரு வரிடமும்) வந்தேன். நான் தொழுது முடித்தபோது மிஸ்வர் (ரலி) அவர்களுக்கும் இப்னு அப்தி யகூஸ் (ரஹ்) அவர்களுக்கும் அருகில் (சென்று) அமர்ந்து, உஸ்மான் (ரலி) அவர்களிடம் நான் (வலீத் பின் உக்பா விஷயமாகக்) கூறியதையும் அதற்கு அவர்கள் என்னிடம் சொன்ன பதிலையும் தெரிவித்தேன். அப்போது அவர்கள் இருவரும், “உங்கள் மீதிருந்த கடமையை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள். அவ்விருவருடனும் நான் அமர்ந்திருந்தபோது உஸ்மான் (ரலி) அவர்களுடைய தூதுவர் (என்னைத் தேடி) வர, அவ்விருவரும், “அல்லாஹ் உங்களைச் சோதனைக்குள்ளாக்கிவிட்டான்” என்று கூறினர். உடனே நான் (தூதுவருடன் புறப்பட்டு) உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றேன். உஸ்மான் (ரலி) அவர்கள், “நீங்கள் சற்றுமுன் கூறி(ட விரும்பி)ய உங்கள் அறிவுரை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நான் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறி (இறைவனைப் புகழ்ந்து விட்டு), “அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களை (சத்திய மார்க்கத்துடன்) அனுப்பி அவர்களுக்கு இறை வேதத்தை யும் அருளினான். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் அழைப்புக்குப் பதிலளித்து அவர்கள்மீது நம்பிக்கை கொண்டவர்களில் நீங்களும் ஒருவராயிருந்தீர்கள். மேலும், முதல் இரண்டு ஹிஜ்ரத்துகளை மேற்கொண்டீர் கள்.116 நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டு அவர்களின் வழிமுறையைப் பார்த்திருக்கிறீர்கள். மக்களோ வலீத் பின் உக்பாவைப் பற்றி நிறைய குறைபேசுகிறார்கள். எனவே, அவரை (இஸ்லாமியச் சட்டப்படி) தண்டிப்பது உங்கள்மீது கடமையாகிவிட்டது” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்க நான், “இல்லை. ஆனால், திரைக்கப்பால் இருக்கும் கன்னிப் பெண்களிடம்(கூட) அல்லாஹ்வின் தூதருடைய கல்வி சென்றடைந்துகொண்டிருக்கும்(போது, அந்த) அளவு கல்வி என்னிடமும் வந்து சேர்ந்துள்ளது (குறித்து வியப்பில்லை)” என்று பதில் சொன்னேன். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி, “அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி அவர்களுக்கு வேதத்தையும் அருளினான். அப்போது, அல்லாஹ்வின் அழைப்புக்கும் அல்லாஹ்வின் தூதருடைய அழைப்புக் கும் பதிலளித்தவர்களில் நானும் ஒருவ னாயிருந்தேன். மேலும், அவர்கள் எந்த வேதத்தைக் கொடுத்தனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக்கொண்டேன். நான் முதல் இரண்டு ஹிஜ்ரத்துகளையும் மேற்கொண்டேன். -நீங்கள் சொன்னதைப் போல்- நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டேன்; அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். ஆகவே, அல்லாஹ்வின் மீதாணை யாக! அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும்வரை நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவு மில்லை. பிறகு அல்லாஹ் அபூபக்ர் (ரலி) அவர்களை கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கினான். அல்லாஹ்வின் மீதாணை யாக! நான் அவர்களுக்கு மாறு செய்யவு மில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு நான் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டேன். ஆகவே, என் விஷயத்தில் அவர்களுக்கிருந்தது போன்ற அதே உரிமை உங்கள் விஷயத்தில் எனக்கில்லையா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (உங்களுக்கும் அதே போன்ற உரிமை இருக்கின்றது)” என்றேன். அவர்கள், “அப்படியென்றால் உங்களைக் குறித்து எனக்கு எட்டுகின்ற (என்னைக் குறைகூறும்) இந்தப் பேச்சுகளெல்லாம் என்ன? நீங்கள் வலீத் பின் உக்பா தொடர்பாகச் சொன்னவற்றில் இறைவன் நாடினால் விரைவில் நான் சரியான நடவடிக்கையை எடுப்பேன்” என்று சொன்னார்கள். பிறகு வலீத் பின் உக்பாவுக்கு (எதி ராகச் சாட்சிகள் கிடைத்ததால் அவருக்கு) நாற்பது சாட்டையடிகள் தண்டனையாக அறிவித்து, அவருக்குச் சாட்டையடிகள் கொடுக்கும்படி அலீ (ரலி) அவர்களுக்கு உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள்தான் வலீதுக்குச் சாட்டையடி வழங்கினார்கள்.117 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டில் “அவர்களுக்கு இருந்ததைப் போன்ற உரிமை உங்கள்மீது எனக்கில் லையா? என இடம்பெற்றுள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இங்கு “அல்லாஹ் உங்களைச் சோதனைக்குள்ளாக்கி விட்டான்' என்பதைக் குறிக்க மூலத்தில் “பலாஉ' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு “சோதனை' எனும் பொருள் இருப்பதைப் போன்றே, “அருட்கொடை' எனும் பொருளும் உண்டு. அத்தியாயம் :
ஹதீஸ் 3873 — Sahih al Bukhari 63:98
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ أُمَّ، حَبِيبَةَ وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ، فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِيكَ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: உம்மு ஹபீபா (ரலி) அவர்களும் உம்மு சலமா (ரலி) அவர்களும் அபிசீனியாவில் தாம் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறித்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள்.118 மேலும், அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களி டையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவரது அடக்கத் தலத்தின் மீது வணக்கத் தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங் களை வரைவார்கள். அவர்கள்தான், மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களி லேயே மிக மோசமானவர்கள்” என்று சொன்னார்கள்.119 அத்தியாயம் :
ஹதீஸ் 3874 — Sahih al Bukhari 63:99
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدٍ السَّعِيدِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدٍ، قَالَتْ قَدِمْتُ مِنْ أَرْضِ الْحَبَشَةِ وَأَنَا جُوَيْرِيَةٌ، فَكَسَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَمِيصَةً لَهَا أَعْلاَمٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ الأَعْلاَمَ بِيَدِهِ وَيَقُولُ " سَنَاهْ، سَنَاهْ ". قَالَ الْحُمَيْدِيُّ يَعْنِي حَسَنٌ حَسَنٌ.
உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் சிறுமியாக இருந்தபோது (என் தந்தையுடன்) அபிசீனியா நாட்டிலிருந்து (நபியவர்களிடம்) வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பட்டுத் துணி ஒன்றை உடுத்தக் கொடுத்தார்கள். அதில் அடையாளக் குறிகள் சில இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அந்த அடையாளங் களைத் தடவியபடி, “அழகாயிருக்கிறதே! அழகாயிருக்கிறதே!” (என்பதைக் குறிக்க அபிசீனிய மொழியில் “சனா, சனா') என்று கூறலானார்கள்.120 அத்தியாயம் :
ஹதீஸ் 3875 — Sahih al Bukhari 63:100
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ يُصَلِّي فَيَرُدُّ عَلَيْنَا، فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ النَّجَاشِيِّ سَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْنَا، فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا نُسَلِّمُ عَلَيْكَ فَتَرُدُّ عَلَيْنَا قَالَ " إِنَّ فِي الصَّلاَةِ شُغْلاً ". فَقُلْتُ لإِبْرَاهِيمَ كَيْفَ تَصْنَعُ أَنْتَ قَالَ أَرُدُّ فِي نَفْسِي.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது நாங்கள் அவர்களுக்கு சலாம் சொல்லுவோம். உடனே அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் சொல்வார்கள். நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ யிடமிருந்து திரும்பி வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு (அவர்கள் தொழுகை யிலிருக்கும்போது) சலாம் சொன்னோம். அப்போது அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் சொல்லவில்லை. நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் தொழும் போது) நாங்கள் உங்களுக்கு சலாம் சொல்ல, நீங்களும் அதற்குப் பதில் சலாம் சொல்லிவந்தீர்களே” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “நிச்சயமாக! தொழுகை யில் கவனம் தேவைப்படுகிறது” என்று பதிலளித்தார்கள்.121 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் (தமக்கு முந்திய அறிவிப் பாளரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம், “(நீங்கள் தொழும்போது யாராவது சலாம் சொல்லிவிட்டால்) நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்ராஹீம் (ரஹ்) அவர்கள், “என் மனதுக்குள் நான் பதில் சலாம் சொல்லிவிடுகிறேன்” என்று சொன்னார். அத்தியாயம் :