Qurani·قرآني
தமிழ்

அன்சாரிகளின் பண்புகள்

173 ஹதீஸ்கள் · #3776–3948

ஹதீஸ் 3916 — Sahih al Bukhari 63:141
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ ـ أَوْ بَلَغَنِي عَنْهُ ـ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ إِذَا قِيلَ لَهُ هَاجَرَ قَبْلَ أَبِيهِ يَغْضَبُ، قَالَ وَقَدِمْتُ أَنَا وَعُمَرُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدْنَاهُ قَائِلاً فَرَجَعْنَا إِلَى الْمَنْزِلِ، فَأَرْسَلَنِي عُمَرُ وَقَالَ اذْهَبْ فَانْظُرْ هَلِ اسْتَيْقَظَ فَأَتَيْتُهُ، فَدَخَلْتُ عَلَيْهِ فَبَايَعْتُهُ، ثُمَّ انْطَلَقْتُ إِلَى عُمَرَ، فَأَخْبَرْتُهُ أَنَّهُ قَدِ اسْتَيْقَظَ، فَانْطَلَقْنَا إِلَيْهِ نُهَرْوِلُ هَرْوَلَةً حَتَّى دَخَلَ عَلَيْهِ فَبَايَعَهُ ثُمَّ بَايَعْتُهُ‏.‏
அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் உங்கள் தந்தைக்கு முன்னதாக ஹிஜ்ரத் செய்துவந்தீர்கள்” என்று சொல்லப்படும்போது அவர்கள் கோப முற்றுக் கூறுவார்கள்: “நானும் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (“பைஅத்' எனும் உறுதிமொழி எடுத்துக்கொள்வதற் காகச்) சென்றோம். நபி (ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுத்து (உறங்கி)க்கொண்டி ருக்கக் கண்டோம். ஆகவே நாங்கள் வீட்டிற்குத் திரும்பிவிட்டோம். பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னை அனுப்பி, “நீ போய், அவர்கள் (உறக்கத் திலிருந்து) விழித்தெழுந்துவிட்டார்களா என்று பார்” என்று சொன்னார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் விழித்திருந்தார்கள். எனவே,) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். பிறகு உமர் (ரலி) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் விழித்தெழுந்து விட்டார்கள் என்று தெரிவித்தேன். பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு விரைந்தோடிச் சென்றடைந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் உறுதிமொழி அளித்தார்கள். பிறகு நானும் (இரண்டாம் முறையாக) உறுதிமொழி அளித்தேன்.164 அத்தியாயம் :
ஹதீஸ் 3917 — Sahih al Bukhari 63:142
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، يُحَدِّثُ قَالَ ابْتَاعَ أَبُو بَكْرٍ مِنْ عَازِبٍ رَحْلاً فَحَمَلْتُهُ مَعَهُ قَالَ فَسَأَلَهُ عَازِبٌ عَنْ مَسِيرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أُخِذَ عَلَيْنَا بِالرَّصَدِ، فَخَرَجْنَا لَيْلاً، فَأَحْثَثْنَا لَيْلَتَنَا وَيَوْمَنَا حَتَّى قَامَ قَائِمُ الظَّهِيرَةِ، ثُمَّ رُفِعَتْ لَنَا صَخْرَةٌ، فَأَتَيْنَاهَا وَلَهَا شَىْءٌ مِنْ ظِلٍّ قَالَ فَفَرَشْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرْوَةً مَعِي، ثُمَّ اضْطَجَعَ عَلَيْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَانْطَلَقْتُ أَنْفُضُ مَا حَوْلَهُ، فَإِذَا أَنَا بِرَاعٍ قَدْ أَقْبَلَ فِي غُنَيْمَةٍ يُرِيدُ مِنَ الصَّخْرَةِ مِثْلَ الَّذِي أَرَدْنَا فَسَأَلْتُهُ لِمَنْ أَنْتَ يَا غُلاَمُ فَقَالَ أَنَا لِفُلاَنٍ‏.‏ فَقُلْتُ لَهُ هَلْ فِي غَنَمِكَ مِنْ لَبَنٍ قَالَ نَعَمْ‏.‏ قُلْتُ لَهُ هَلْ أَنْتَ حَالِبٌ قَالَ نَعَمْ‏.‏ فَأَخَذَ شَاةً مِنْ غَنَمِهِ فَقُلْتُ لَهُ انْفُضِ الضَّرْعَ‏.‏ قَالَ فَحَلَبَ كُثْبَةً مِنْ لَبَنٍ، وَمَعِي إِدَاوَةٌ مِنْ مَاءٍ عَلَيْهَا خِرْقَةٌ قَدْ رَوَّأْتُهَا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَصَبَبْتُ عَلَى اللَّبَنِ حَتَّى بَرَدَ أَسْفَلُهُ، ثُمَّ أَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ اشْرَبْ يَا رَسُولَ اللَّهِ‏.‏ فَشَرِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى رَضِيتُ، ثُمَّ ارْتَحَلْنَا وَالطَّلَبُ فِي إِثْرِنَا‏.‏
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தந்தை) ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்து ஒட்டகச் சேணம் ஒன்றை விலைக்கு வாங்கினார்கள். நான் அவர்களுடன் அதைச் சுமந்து சென்றேன். ஆஸிப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ஹிஜ்ரத்) பயணம் குறித்து அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: எங்கள்மீது (எதிரிகளால்) கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, நாங்கள் இரவில் புறப்பட்டோம். நாங்கள் நண்பகல் நேரம் வரும்வரை இரவும் பகலும் கண் விழித்துப் பயணித்தோம். பிறகு எங்களுக் குப் பாறை ஒன்று தென்பட்டது. நாங்கள் அதனருகே சென்றோம். அதற்கு ஏதோ கொஞ்சம் நிழல் இருந்தது. நான் அல்லாஹ் வின் தூதருக்காக என்னுடன் இருந்த தோல் ஆடை ஒன்றை விரித்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் அதன்மீது படுத்துக் கொண்டார்கள். நான் அவர்களைச் சுற்றிலு மிருந்த புழுதியைத் தட்டிக்கொண்டே சென்றேன். அப்போது (தற்செயலாக) ஓர் ஆட்டிடையனைக் கண்டேன். அவன் தனது சிறிய ஆட்டு மந்தை ஒன்றுடன் நாங்கள் நாடிச் சென்ற (அதே பாறை நிழல்)தனை நாடி, அதை நோக்கி வந்துகொண்டிருந்தான். நான் அவனிடம், “இளைஞனே! நீ யாருடைய பணியாள்?” என்று கேட்டேன். அவன், “நான் இன்ன மனிதரின் பணியாள்” என்று சொன்னான். நான், “உன் ஆடுகளிடம் சிறிது பால் இருக்குமா?” என்று கேட்டேன். அவன், “ஆம்' என்றான். நான், “நீ (எங்களுக்குப்) பால் கறந்து தருவாயா?” என்று கேட்டேன். அவன், “ஆம் (தருகிறேன்)” என்றான். பின்னர், அவன் தன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்து வந்தான். நான் அவனிடம், “அதன் மடியை (புழுதி போக) உதறு” என்று சொன்னேன். பிறகு, அவன் சிறிது பாலைக் கறந்தான். என்னிடம் தண்ணீருள்ள தோல் பாத்திரம் ஒன்றிருந்தது. அதில் துண்டுத் துணியொன்று (மூடி) இருந்தது. அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் வைத்திருந் தேன். அதைப் பால் (பாத்திரத்தின்) மீது அதன் கீழ்ப்பகுதி குளிர்ந்து போகும்வரை ஊற்றினேன். பிறகு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று, “பருகுங்கள், அல்லாஹ் வின் தூதரே!” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் திருப்தியடையும்வரை (அதை)ப் பருகினார்கள். பிறகு, எங்களைத் தேடிவந்தவர்கள் எங்கள் தடயத்தைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்க நாங்கள் புறப்பட்டோம்.165 அத்தியாயம் :
ஹதீஸ் 3918 — Sahih al Bukhari 63:143
قَالَ الْبَرَاءُ فَدَخَلْتُ مَعَ أَبِي بَكْرٍ عَلَى أَهْلِهِ، فَإِذَا عَائِشَةُ ابْنَتُهُ مُضْطَجِعَةٌ، قَدْ أَصَابَتْهَا حُمَّى، فَرَأَيْتُ أَبَاهَا فَقَبَّلَ خَدَّهَا، وَقَالَ كَيْفَ أَنْتِ يَا بُنَيَّةُ
பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: நான் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் அவர்களின் வீட்டாரிடம் சென்றேன். அப்போது அவர்களுடைய மகளான ஆயிஷா (ரலி) அவர்கள், காய்ச்சல் கண்டு (படுக்கையில்) படுத்திருந்தார்கள். அவருடைய தந்தை(யான அபூபக்ர் (ரலி) அவர்கள்) அவரது கன்னத்தில் (பாசத் தோடு) முத்தமிட்டு, “எப்படியிருக்கிறாய்? அருமை மகளே!” என்று கேட்டதை நான் கண்டேன்.166 அத்தியாயம் :
ஹதீஸ் 3919 — Sahih al Bukhari 63:144
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي عَبْلَةَ، أَنَّ عُقْبَةَ بْنَ وَسَّاجٍ، حَدَّثَهُ عَنْ أَنَسٍ، خَادِمِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَلَيْسَ فِي أَصْحَابِهِ أَشْمَطُ غَيْرَ أَبِي بَكْرٍ، فَغَلَفَهَا بِالْحِنَّاءِ وَالْكَتَمِ‏.‏
நபி (ஸல்) அவர்களுடைய ஊழியரான அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தார்கள்; அப்போது அவர்கள் தம் தோழர்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள் மட்டுமே கறுப்பு- வெள்ளை முடி உடையவர்களாக இருந்தார்கள். அன்னார் மருதாணியாலும், “கத்தம்' எனும் (ஒரு வகை மூலிகை) இலைச் சாயத்தாலும் தம் (தாடி) முடியைத் தோய்த்து (நரையை) மறைத்துக்கொண்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3920 — Sahih al Bukhari 63:145
وَقَالَ دُحَيْمٌ حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي أَبُو عُبَيْدٍ، عَنْ عُقْبَةَ بْنِ وَسَّاجٍ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، فَكَانَ أَسَنَّ أَصْحَابِهِ أَبُو بَكْرٍ، فَغَلَفَهَا بِالْحِنَّاءِ وَالْكَتَمِ حَتَّى قَنَأَ لَوْنُهَا‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, அவர்கள்தம் தோழர்களி லேயே அபூபக்ர் (ரலி) அவர்கள்தான் அதிக வயதுடையவர்களாக இருந்தார்கள். பிறகு, தம் (தாடி முடியை) அபூபக்ர் (ரலி) அவர்கள் மருதாணியாலும், “கத்தம்' எனும் (மூலிகை) இலைச் சாயத்தாலும் தோய்த்து (நரையை) மறைத்துக்கொண்டார்கள். அதனால் அதன் நிறம் கருஞ்சிவப்பாகி விட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 3921 — Sahih al Bukhari 63:146
حَدَّثَنَا أَصْبَغُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ تَزَوَّجَ امْرَأَةً مِنْ كَلْبٍ يُقَالُ لَهَا أُمُّ بَكْرٍ، فَلَمَّا هَاجَرَ أَبُو بَكْرٍ طَلَّقَهَا، فَتَزَوَّجَهَا ابْنُ عَمِّهَا، هَذَا الشَّاعِرُ الَّذِي قَالَ هَذِهِ الْقَصِيدَةَ، رَثَى كُفَّارَ قُرَيْشٍ وَمَاذَا بِالْقَلِيبِ قَلِيبِ بَدْرٍ مِنَ الشِّيزَى تُزَيَّنُ بِالسَّنَامِ وَمَاذَا بِالْقَلِيبِ، قَلِيبِ بَدْرٍ مِنَ الْقَيْنَاتِ وَالشَّرْبِ الْكِرَامِ تُحَيِّي بِالسَّلاَمَةِ أُمُّ بَكْرٍ وَهَلْ لِي بَعْدَ قَوْمِي مِنْ سَلاَمِ يُحَدِّثُنَا الرَّسُولُ بِأَنْ سَنَحْيَا وَكَيْفَ حَيَاةُ أَصْدَاءٍ وَهَامِ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் “பனூ கல்ப்' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். “உம்மு பக்ர்' என்பது அந்தப் பெண்ணின் பெயராகும். அபூபக்ர் (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்தபோது அப்பெண்ணை மணவிலக்கு செய்துவிடவே, அவரை அவருடைய தந்தையின் சகோதரர் மகன் (மறு)மணம் புரிந்துகொண்டார். அவர்தான் (பத்ர் போரில் கொல்லப்பட்டு, பத்ர் பாழுங்கிணற்றில் போடப்பட்ட) குறைஷி குல இறைமறுப்பாளர் களுக்காக இந்த இரங்கற்பாவைப் பாடிய கவிஞர் ஆவார்: பத்ரின் பாழுங்கிணற்றுக்கு(இப்போது)என்ன களங்கம் நேர்ந்துவிட்டது?ஒட்டகத் திமில்களால்அலங்கரிக்கப்பட்ட மரத்தட்டுகளால்(விருந்தளிக்கும் அதிபர்கள்167தூக்கி வீசப்பட்டதால்..........)பத்ரின் பாழுங்கிணற்றுக்குஎன்ன (களங்கமா)நேர்ந்துவிட்டது? அழகிய பாடகிகளால் ..........மதிப்புக்குரியமதுபோதைப் பிரியர்களால் .........(என் காதலி)உம்மு பக்ர் எங்கள்மனச்சாந்திக்காகஆறுதல் சொல்கிறாள். என் சமுதாயமே(சமாதிக்குப்) போனபின்எனக்கேது மனச்சாந்தி ..........? (மரணத்திற்குப்பின்)நாம் மீண்டும்உயிர்த்தெழுவோம்என்கிறார் இறைத்தூதர்!(ஆனால்,)ஆந்தைகளும் தேவாங்குகளும்உயிர் பிழைப்பது எப்படி.......... ?168 அத்தியாயம் :
ஹதீஸ் 3922 — Sahih al Bukhari 63:147
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغَارِ فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا أَنَا بِأَقْدَامِ الْقَوْمِ، فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ، لَوْ أَنَّ بَعْضَهُمْ طَأْطَأَ بَصَرَهُ رَآنَا‏.‏ قَالَ ‏ "‏ اسْكُتْ يَا أَبَا بَكْرٍ، اثْنَانِ اللَّهُ ثَالِثُهُمَا ‏"‏‏.‏
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹிஜ்ரத் பயணத்தின்போது வழியில்) நபி (ஸல்) அவர்களுடன் நான் (“ஸவ்ர்' மலைக்) குகையில் (தங்கி) இருந்தேன். நான் தலையை உயர்த்தியபோது (எங்களைத் தேடிவந்த) கூட்டத்தாரின் பாதங்கள் என் (தலைக்கு)மேலே தெரிந்தன. நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் எவராவது தம் பார்வையைத் தாழ்த்தி (குகைக்குள் உற்றுநோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவாரே! (இப்போது என்ன செய்வது?)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அமைதியாயிருங் கள்; அபூபக்ரே! (நாம்) இருவர்; நம்முடன் அல்லாஹ் மூன்றாமவன். (அவன் நம்மைக் காப்பாற்றுவான்)” என்று சொன்னார்கள்.169 அத்தியாயம் :
ஹதீஸ் 3923 — Sahih al Bukhari 63:148
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ،‏.‏ وَقَالَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنِ الْهِجْرَةِ فَقَالَ ‏"‏ وَيْحَكَ إِنَّ الْهِجْرَةَ شَأْنُهَا شَدِيدٌ، فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَتُعْطِي صَدَقَتَهَا ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَهَلْ تَمْنَحُ مِنْهَا ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَتَحْلُبُهَا يَوْمَ وُرُودِهَا ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ، فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا ‏"‏‏.‏
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஹிஜ்ரத் குறித்துக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உமக்கு என்ன கேடு? -(எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு)- நிச்சயமாக அதன் நிலை மிகவும் கடின மானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின் றனவா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவற்றுக்குரிய ஸகாத் கொடுத்து வருகி றாயா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவற்றிலிருந்து (இலவசமாகப் பால் கறந்துகொள்ள, ஏழைகளுக்கு) இரவல் கொடுக்கிறீரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவை (நீர்நிலைகளுக்கு) நீரருந்தச் செல்லும் (முறை வரும்) நாளில் அவற்றின் பாலைக் கறந்து (ஏழைகளுக்குக்) கொடுக்கிறீரா?” என்று கேட்க அவர், “ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நீர் ஊர்களுக்கு அப்பால் சென்றுகூட நன்மை செய்யலாம். அல்லாஹ் உம்முடைய நற்செயல்(களின் பிரதிபலன்)களில் எதையும் குறைக்கமாட்டான்” என்று சொன்னார்கள்.170 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3924 — Sahih al Bukhari 63:149
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ، سَمِعَ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَابْنُ أُمِّ مَكْتُومٍ، ثُمَّ قَدِمَ عَلَيْنَا عَمَّارُ بْنُ يَاسِرٍ وَبِلاَلٌ رضى الله عنهم‏.‏
பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: எங்களிடம் (மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து) முதன் முதலில் வந்தவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் இப்னு உம்மி மக்(த்)தூம் (ரலி) அவர்களும் தான். பிறகு எங்களிடம் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் வந்தனர்.172 அத்தியாயம் :
ஹதீஸ் 3925 — Sahih al Bukhari 63:150
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَابْنُ أُمِّ مَكْتُومٍ، وَكَانَا يُقْرِئَانِ النَّاسَ، فَقَدِمَ بِلاَلٌ وَسَعْدٌ وَعَمَّارُ بْنُ يَاسِرٍ، ثُمَّ قَدِمَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي عِشْرِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَمَا رَأَيْتُ أَهْلَ الْمَدِينَةِ فَرِحُوا بِشَىْءٍ فَرَحَهُمْ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، حَتَّى جَعَلَ الإِمَاءُ يَقُلْنَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَمَا قَدِمَ حَتَّى قَرَأْتُ ‏{‏سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى‏}‏ فِي سُوَرٍ مِنَ الْمُفَصَّلِ‏.‏
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் (மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து) முதன்முதலில் வந்தவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் இப்னு உம்மி மக்(த்)தூம் (ரலி) அவர்களும்தான். இவர்கள் மக்களுக்கு (குர்ஆன்) ஓதக் கற்றுக் கொடுத்துவந்தனர். பிறகு பிலால் (ரலி) அவர்களும், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும், அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களும் வந்தனர். பிறகு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபித்தோழர்கள் இருபது பேர் (கொண்ட ஒரு குழு) உடன் வந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள(து வருகைய)ôல் மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற் காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் பார்க்கவில்லை. எந்த அளவுக் கென்றால் (மதீனாவின்) அடிமைப் பெண்கள், “அல்லாஹ்வின் தூதர் வந்து விட்டார்கள்” என்று பாடி (மகிழலா)னார்கள். “சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' எனும் (87ஆவது) அத்தியாயத்தை, குர்ஆனின் (மற்ற) சிறுசிறு (முஃபஸ்ஸல்) அத்தியாயங் கள் சிலவற்றுடன் நான் (மனப்பாடமாக) ஓதும்வரை நபி (ஸல்) அவர்கள் (மதீனா) வரவில்லை. அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.