இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (மக்கா வெற்றிப்) பயணத்தின் போது நபி (ஸல்) அவர்களுடன் தொழுகை யைக் குறைத்துத் தொழுதவர்களாக பத்தொன்பது நாட்கள் தங்கினோம். (பொதுவாக) நாங்கள் (பிரயாணம் மேற்கொண்டு தங்கினால்) பத்தொன்பது நாட்கள்வரை குறைத்துத் தொழு(தபடி தங்கு)வோம். அதற்கு மேலும் நாங்கள் தங்கும் போது (குறைத்துத் தொழாமல் வழக்கப்படி) முழுமையாகத் தொழுவோம். அத்தியாயம் :
ஹதீஸ் 4300 — Sahih al Bukhari 64:333
وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ ثَعْلَبَةَ بْنِ صُعَيْرٍ، وَكَانَ النَّبِيُّ، صلى الله عليه وسلم قَدْ مَسَحَ وَجْهَهُ عَامَ الْفَتْحِ.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் ஸஅலபா பின் ஸுஐர் (ரலி) அவர்கள்-அன்னாரின் முகத்தை நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் (அன்போடு தடவிக் கொடுத்திருந்தார்கள் - எனக்குத் தெரிவித்தார்கள்...337 அத்தியாயம் :)
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: நாங்கள் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களுடன் இருந்தபோது, அபூ ஜமீலா சுனைன் (ரலி) அவர்கள், தாம் நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றிருந்ததாகவும் அவர்களுடன் மக்கா வெற்றி ஆண்டில் (மக்கா நோக்கி இஸ்லாமியச் சேனையில் ஒருவராகப்) புறப்பட்டதாகவும் சொன்னார்கள். அத்தியாயம் :
அம்ர் பின் சலிமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர்நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக்கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் “தம்மை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக' அல்லது “அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்' கூறுகிறார்” என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப அத்தியாயம் :
ஹதீஸ் 4303 — Sahih al Bukhari 64:336
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدٍ أَنْ يَقْبِضَ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ، وَقَالَ عُتْبَةُ إِنَّهُ ابْنِي. فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَكَّةَ فِي الْفَتْحِ أَخَذَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ، فَأَقْبَلَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَأَقْبَلَ مَعَهُ عَبْدُ بْنُ زَمْعَةَ، فَقَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ هَذَا ابْنُ أَخِي، عَهِدَ إِلَىَّ أَنَّهُ ابْنُهُ. قَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ يَا رَسُولَ اللَّهِ، هَذَا أَخِي، هَذَا ابْنُ زَمْعَةَ، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَنَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى ابْنِ وَلِيدَةِ زَمْعَةَ، فَإِذَا أَشْبَهُ النَّاسِ بِعُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هُوَ لَكَ، هُوَ أَخُوكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ ". مِنْ أَجْلِ أَنَّهُ وُلِدَ عَلَى فِرَاشِهِ، وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " احْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ ". لِمَا رَأَى مِنْ شَبَهِ عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ. قَالَ ابْنُ شِهَابٍ قَالَتْ عَائِشَةُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ ". وَقَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ أَبُو هُرَيْرَةَ يَصِيحُ بِذَلِكَ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், “ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் என் மகன்தான்'என்று கூறி (மக்கா செல்லும்போது)அவனைப் பிடித்து(வைத்து)க்கொள்ளும்படி உறுதிமொழி வாங்கியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கா வெற்றியின் சமயம் மக்காவுக்கு (தம் தோழர்களுடன்) வருகை தந்தபோது, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அவர்களுடன் ஸம்ஆவின் மகன் அப்த் (ரலி) அவர்களும் சென்றார்கள். சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைச் சுட்டிக்காட்டி), “இவன் என் சகோதரரின் மகன்; இவனைத் தன் மகன் என்று (சொல்லி, இவனைப் பிடித்துக்கொள்ளும்படி என்னிடம்) என் சகோதரர் உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று சொன்னார். அப்த் பின் ஸம்ஆ, “அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன். இவன் (என் தந்தை) ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன்; அவள் என் தந்தையின் அதிகாரத்தில் இருந்தபோதுதான் இவன் பிறந்தான்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைக் கூர்ந்துபார்த்தார்கள். அவன் (மக்காவாசிகளிலேயே) உத்பா பின் அபீவக்காஸை (தோற்றத்தில்) மிகவும் ஒத்திருந்தான். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவன் உனக்குரியவன்தான்; இவன் உன் சகோதரன்தான், அப்த் பின் ஸம்ஆவே!” என்று சொன்னார்கள். அவன் ஸம்ஆவின் அதிகாரத்தில் (அவனுடைய தாய்) இருந்தபோது பிறந்த காரணத்தால் அப்படிச் சொன்னார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்பா பின் அபீவக்காஸின் சாயலில் அந்த இளைஞன் இருந்ததைப் பார்த்த காரணத்தால், (தம் துணைவியார் சவ்தா (ரலி) அவர்களை நோக்கி, “ஸம்ஆ வின் மகள்) சவ்தாவே! இவனிடமிருந்து நீ திரையிட்டுக்கொள்” என்று சொன்னார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(ஒரு பெண்) யாருடைய அதிகாரத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது' என்று சொன்னார்கள்” என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.338 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இந்தத் தீர்ப்பை (மக்களுக்கு) உரக்க அறிவித்துவந்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 4304 — Sahih al Bukhari 64:337
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ امْرَأَةً، سَرَقَتْ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ الْفَتْحِ، فَفَزِعَ قَوْمُهَا إِلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ يَسْتَشْفِعُونَهُ، قَالَ عُرْوَةُ فَلَمَّا كَلَّمَهُ أُسَامَةُ فِيهَا تَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " أَتُكَلِّمُنِي فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ". قَالَ أُسَامَةُ اسْتَغْفِرْ لِي يَا رَسُولَ اللَّهِ. فَلَمَّا كَانَ الْعَشِيُّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَطِيبًا، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ، فَإِنَّمَا أَهْلَكَ النَّاسَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمِ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا ". ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِتِلْكَ الْمَرْأَةِ، فَقُطِعَتْ يَدُهَا، فَحَسُنَتْ تَوْبَتُهَا بَعْدَ ذَلِكَ وَتَزَوَّجَتْ. قَالَتْ عَائِشَةُ فَكَانَتْ تَأْتِي بَعْدَ ذَلِكَ فَأَرْفَعُ حَاجَتَهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் மக்கா வெற்றிப் போரின்போது (மக்ஸூமி குலப்) பெண் ஒருவர் திருடிவிட்டார். ஆகவே, அவருடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவருக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உசாமா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) அவருக்காகப் (பரிந்து) பேசியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனை களில் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்திவிடும்படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்?” என்று கேட்டார்கள். உடனே உசாமா (ரலி) அவர்கள், “எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். மாலை நேரம் வந்தபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்ற எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனதுதகுதிக்கேற்றபடி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, “இறைவாழ்த்துக்குப்பின்! உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த (குலத்த)வர் திருடும்போது அவரை (தண்டிக்காமல்) விட்டுவந்ததும், பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வர் திருடும்போது அவருக்குத் தண்டனை கொடுத்து வந்ததும்தான். முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடிவிட்டிருந்தாலும் அவரது கையையும் நான் கண்டிப்பாக வெட்டியிருப்பேன்” என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டார்; மேலும், மணம் புரிந்தும்கொண்டார். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதன் பிறகு அவர் என்னிடம் வந்துகொண்டிருந்தார். நான் அவரது தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிடுவேன்.339 அத்தியாயம் :
முஜாஷிஉ பின் மஸ்ஊத் பின் ஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றிக்குப் பிறகு, நான் என் சகோதரர் (முஜாலித் பின் மஸ்ஊத்) உடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஹிஜ்ரத் செய்வதற் கான உறுதிமொழியை என் சகோதரரிடம் தாங்கள் பெற வேண்டுமென்பதற்காக அவரை அழைத்துக்கொண்டு நான் தங்களிடம் வந்துள்ளேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “(மக்கா வெற்றிக்கு முன்பு) ஹிஜ்ரத் செய்தவர்கள் அதிலுள்ள நன்மையை (முன்பே) கொண்டுசென்றுவிட்டார்கள்” என்று பதில் சொன்னார்கள். நான், “(அப்படியென்றால்) எதற்காக அவரிடம் தாங்கள் உறுதிமொழி பெறுவீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இஸ்லாத்தின்படி நடக்கவும் இறைநம்பிக்கையில் நிலைத்திருக்கவும், (தேவைப்படும்போது) அறப்போர் புரியவும் நான் அவரிடம் உறுதிமொழி பெறுவேன்” என்று பதிலளித்தார்கள்.340 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதற்குப்பின் நான் (முஜாஷிஉ அவர்களின் சகோதரர்) மஅபத் (எனும்முஜாலித்) அவர்களைச் சந்தித்தேன். அவரே சகோதரர்கள் இருவரில் பெரியவராக இருந்தார். (இந்தச் செய்தி பற்றி) அவரிடம் விசாரித்தேன். அவர், “முஜாஷிஉ உண்மையே சொன்னார்” என்று கூறினார். அத்தியாயம் :
முஜாஷிஉ பின் மஸ்ஊத் பின் ஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றிக்குப் பிறகு, நான் என் சகோதரர் (முஜாலித் பின் மஸ்ஊத்) உடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஹிஜ்ரத் செய்வதற் கான உறுதிமொழியை என் சகோதரரிடம் தாங்கள் பெற வேண்டுமென்பதற்காக அவரை அழைத்துக்கொண்டு நான் தங்களிடம் வந்துள்ளேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “(மக்கா வெற்றிக்கு முன்பு) ஹிஜ்ரத் செய்தவர்கள் அதிலுள்ள நன்மையை (முன்பே) கொண்டுசென்றுவிட்டார்கள்” என்று பதில் சொன்னார்கள். நான், “(அப்படியென்றால்) எதற்காக அவரிடம் தாங்கள் உறுதிமொழி பெறுவீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இஸ்லாத்தின்படி நடக்கவும் இறைநம்பிக்கையில் நிலைத்திருக்கவும், (தேவைப்படும்போது) அறப்போர் புரியவும் நான் அவரிடம் உறுதிமொழி பெறுவேன்” என்று பதிலளித்தார்கள்.340 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதற்குப்பின் நான் (முஜாஷிஉ அவர்களின் சகோதரர்) மஅபத் (எனும்முஜாலித்) அவர்களைச் சந்தித்தேன். அவரே சகோதரர்கள் இருவரில் பெரியவராக இருந்தார். (இந்தச் செய்தி பற்றி) அவரிடம் விசாரித்தேன். அவர், “முஜாஷிஉ உண்மையே சொன்னார்” என்று கூறினார். அத்தியாயம் :
முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழி யைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூமஅபத் (முஜாலித்) அவர்களை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத், அதற்குரியவர் களுக்குக் கடமையாகி (நிறைவேறி மக்கா வெற்றியோடு) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின்படி நடக்கவும் அறப்போர் புரியவும்தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்” என்று சொன்னார்கள். இதன் அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இதை எனக்கு அறிவித்த முஜாஷிஉ (ரலி) அவர்களின் சகோதரர்) அபூமஅபத் (முஜாலித்-ரலி) அவர்களைப் பின்னர் நான் சந்தித்து, அவரிடம் (இந்தச் செய்தி பற்றி) விசாரித்தேன். அவர், “முஜாஷிஉ உண்மையே சொன்னார்” என்று கூறினார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் முஜாஷிஉ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்: நான் என் சகோதரர் முஜாலிதுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அத்தியாயம் :
முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழி யைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூமஅபத் (முஜாலித்) அவர்களை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத், அதற்குரியவர் களுக்குக் கடமையாகி (நிறைவேறி மக்கா வெற்றியோடு) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின்படி நடக்கவும் அறப்போர் புரியவும்தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்” என்று சொன்னார்கள். இதன் அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இதை எனக்கு அறிவித்த முஜாஷிஉ (ரலி) அவர்களின் சகோதரர்) அபூமஅபத் (முஜாலித்-ரலி) அவர்களைப் பின்னர் நான் சந்தித்து, அவரிடம் (இந்தச் செய்தி பற்றி) விசாரித்தேன். அவர், “முஜாஷிஉ உண்மையே சொன்னார்” என்று கூறினார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் முஜாஷிஉ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்: நான் என் சகோதரர் முஜாலிதுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அத்தியாயம் :