حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، وَحَدَّثَنِي نُعَيْمٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى بَنِي جَذِيمَةَ، فَدَعَاهُمْ إِلَى الإِسْلاَمِ فَلَمْ يُحْسِنُوا أَنْ يَقُولُوا أَسْلَمْنَا. فَجَعَلُوا يَقُولُونَ صَبَأْنَا، صَبَأْنَا. فَجَعَلَ خَالِدٌ يَقْتُلُ مِنْهُمْ وَيَأْسِرُ، وَدَفَعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ، حَتَّى إِذَا كَانَ يَوْمٌ أَمَرَ خَالِدٌ أَنْ يَقْتُلَ كُلُّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ فَقُلْتُ وَاللَّهِ لاَ أَقْتُلُ أَسِيرِي، وَلاَ يَقْتُلُ رَجُلٌ مِنْ أَصْحَابِي أَسِيرَهُ، حَتَّى قَدِمْنَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرْنَاهُ، فَرَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ فَقَالَ " اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ ". مَرَّتَيْنِ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு “அஸ்லம்னா' (நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்) என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. ஆகவே, அவர்கள் (தங்களுடைய வழக்குப்படி) “ஸபஃனா, ஸபஃனா' (நாங்கள் மதம் மாறிவிட்டோம், மதம் மாறிவிட்டோம்) என்று சொல்லலானார்கள். உடனே அவர்களில் சிலரை காலித் (ரலி) அவர்கள் கொல்லவும் சிலரைச் சிறைபிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒருநாள் காலித் (ரலி) அவர்கள், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்லமாட்டேன்; மேலும், என் சகாக்களில் எவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்கள்” என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, “இறைவா! “காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை' என்று உன்னிடம் தெரிவித்துக்கொள்கிறேன்” என இருமுறை சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அத்தியாயம் :
ஹதீஸ் 4340 — Sahih al Bukhari 64:369
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي سَعْدُ بْنُ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَرِيَّةً فَاسْتَعْمَلَ رَجُلاً مِنَ الأَنْصَارِ، وَأَمَرَهُمْ أَنْ يُطِيعُوهُ، فَغَضِبَ فَقَالَ أَلَيْسَ أَمَرَكُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُطِيعُونِي. قَالُوا بَلَى. قَالَ فَاجْمَعُوا لِي حَطَبًا. فَجَمَعُوا، فَقَالَ أَوْقِدُوا نَارًا. فَأَوْقَدُوهَا، فَقَالَ ادْخُلُوهَا. فَهَمُّوا، وَجَعَلَ بَعْضُهُمْ يُمْسِكُ بَعْضًا، وَيَقُولُونَ فَرَرْنَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مِنَ النَّارِ. فَمَا زَالُوا حَتَّى خَمَدَتِ النَّارُ، فَسَكَنَ غَضَبُهُ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " لَوْ دَخَلُوهَا مَا خَرَجُوا مِنْهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ، الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ ".
அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள்.(அவர்கள் ஏதோ தவறிழைத்துவிட) அவர்கள்மீது அவர் கோபமுற்று, “நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி உங்களுக்குக் கட்டளையிட வில்லையா?” என்று கேட்டார். அவர்கள், “ஆம் (கட்டளை யிட்டார்கள்)” என்று பதிலளித்தனர். அவர், “அப்படியென்றால் எனக்காக விறகு சேகரியுங்கள்” என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே சேகரித்தனர். அவர், “நெருப்பு மூட்டுங்கள்” என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு மூட்டினார்கள். அவர், “இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள்” என்று கூற, அவர்கள் அதில் நுழையப்போனார்கள். அதற்குள் (அதில் நுழைய விடாமல்) அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும் அவர்கள், “(நரக) நெருப்பிலிருந்து வெருண்டோடித்தான் நாம் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம்” என்று கூறலாயினர். நெருப்பு அணைந்து போகும்வரை இவ்வாறே கூறிக்கொண்டிருந்தனர். பிறகு, படைத் தளபதியின் கோபம் தணிந்து அவர் அமைதியடைந்தார். பிறகு நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியபோது, “அதில் அவர்கள் நுழைந்திருந்தால் மறுமை நாள்வரையிலும்கூட அதிலிருந்து அவர்கள் வெளியேறியிருக்கமாட்டார்கள்.375 கீழ்ப்படிதல் என்பது நற்செயல்களில்தான்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பி னார்கள்; அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்குப் பொறுப்பாளராக அனுப்பினார்கள். யமன் இரு மாகாணங்களாகும்.377 பிறகு, “(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போதுகூட) வெறுப்பேற்றிவிடாதீர் கள்” என்று (அறிவுரை) கூறினார்கள். அவர்கள் இருவரும் தத்தம் பணி (இடங்களு)க்குச் சென்றனர். அவர்கள் தத்தம் (எல்லைக்கு உட்பட்ட) பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது, தம் சகாவின் (பகுதிக்கு) அருகில் வந்துவிட்டால் (அவருடன்) தமது சந்திப்பைப் புதுப்பித்துக்கொண்டு சகாவுக்கு சலாம் கூறுவார். ஒருமுறை முஆத் (ரலி), தம் பகுதிக்குள் சென்றுகொண்டிருந்தபோது தம் சகாவான அபூமூசா (ரலி) அவர்களின் (பகுதிக்கு) அருகே வந்துவிட, தமது கோவேறு கழுதையின் மீது பயணித்தபடி அவர்களிடம் சென்றுசேர்ந்தார். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், தம்மிடம் மக்கள் ஒன்றுகூடியிருக்க (தமது அவையில்) அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம், தம் இரு கைகளும் தம் கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். முஆத் (ரலி) அவர்கள், அபூமூசா (ரலி) அவர்களிடம், “அப்துல்லாஹ் பின் கைஸ் அவர்களே! என்ன இது?” என்று கேட்டார்கள். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், “இவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபின் அதை நிராகரித்துவிட்டவன்” என்று பதிலளித்தார்கள்.378 முஆத் (ரலி) அவர்கள், “இவன் கொல்லப்படும்வரை நான் (என் வாகனத்தி லிருந்து) இறங்கமாட்டேன்” என்றார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், “இவன் கொண்டு வரப்பட்டிருப்பதே அதற்காகத்தான். ஆகவே, நீங்கள் இறங்குங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு முஆத், (ரலி) அவர்கள் “இவன் கொல்லப்படும்வரை நான் (வாகனத்திóருந்து) இறங்கமாட்டேன்” என்று (மீண்டும்) சொன்னார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அவனைக் கொல்லும்படி உத்தரவிட, அவ்வாறே அவன் கொல்லப்பட்டான். பிறகு முஆத் (ரலி) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி, “அப்துல்லாஹ்வே! நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், “(இரவு, பகல் நேரங்களில்) அடிக்கடி ஓதிவருகிறேன்” என்று பதிலளித்தார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள், “முஆதே! நீங்கள் எப்படி அதை ஓதுகிறீர்கள்?” என்று கேட்க, முஆத் (ரலி) அவர்கள், “இரவின் முற்பகுதியில் நான் உறங்கிவிடுகிறேன். உறக்கத்தில் என் பங்கை முடித்து எழுகிறேன். பிறகு, அல்லாஹ் எனக்கு விதித்துள்ள அளவு ஓதுகிறேன். ஆகவே, நான் எழு(ந்து வழிபடு)வதற்கு இறைவனிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பி னார்கள்; அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்குப் பொறுப்பாளராக அனுப்பினார்கள். யமன் இரு மாகாணங்களாகும்.377 பிறகு, “(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போதுகூட) வெறுப்பேற்றிவிடாதீர் கள்” என்று (அறிவுரை) கூறினார்கள். அவர்கள் இருவரும் தத்தம் பணி (இடங்களு)க்குச் சென்றனர். அவர்கள் தத்தம் (எல்லைக்கு உட்பட்ட) பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது, தம் சகாவின் (பகுதிக்கு) அருகில் வந்துவிட்டால் (அவருடன்) தமது சந்திப்பைப் புதுப்பித்துக்கொண்டு சகாவுக்கு சலாம் கூறுவார். ஒருமுறை முஆத் (ரலி), தம் பகுதிக்குள் சென்றுகொண்டிருந்தபோது தம் சகாவான அபூமூசா (ரலி) அவர்களின் (பகுதிக்கு) அருகே வந்துவிட, தமது கோவேறு கழுதையின் மீது பயணித்தபடி அவர்களிடம் சென்றுசேர்ந்தார். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், தம்மிடம் மக்கள் ஒன்றுகூடியிருக்க (தமது அவையில்) அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம், தம் இரு கைகளும் தம் கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். முஆத் (ரலி) அவர்கள், அபூமூசா (ரலி) அவர்களிடம், “அப்துல்லாஹ் பின் கைஸ் அவர்களே! என்ன இது?” என்று கேட்டார்கள். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், “இவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபின் அதை நிராகரித்துவிட்டவன்” என்று பதிலளித்தார்கள்.378 முஆத் (ரலி) அவர்கள், “இவன் கொல்லப்படும்வரை நான் (என் வாகனத்தி லிருந்து) இறங்கமாட்டேன்” என்றார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், “இவன் கொண்டு வரப்பட்டிருப்பதே அதற்காகத்தான். ஆகவே, நீங்கள் இறங்குங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு முஆத், (ரலி) அவர்கள் “இவன் கொல்லப்படும்வரை நான் (வாகனத்திóருந்து) இறங்கமாட்டேன்” என்று (மீண்டும்) சொன்னார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அவனைக் கொல்லும்படி உத்தரவிட, அவ்வாறே அவன் கொல்லப்பட்டான். பிறகு முஆத் (ரலி) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி, “அப்துல்லாஹ்வே! நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், “(இரவு, பகல் நேரங்களில்) அடிக்கடி ஓதிவருகிறேன்” என்று பதிலளித்தார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள், “முஆதே! நீங்கள் எப்படி அதை ஓதுகிறீர்கள்?” என்று கேட்க, முஆத் (ரலி) அவர்கள், “இரவின் முற்பகுதியில் நான் உறங்கிவிடுகிறேன். உறக்கத்தில் என் பங்கை முடித்து எழுகிறேன். பிறகு, அல்லாஹ் எனக்கு விதித்துள்ள அளவு ஓதுகிறேன். ஆகவே, நான் எழு(ந்து வழிபடு)வதற்கு இறைவனிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 4343 — Sahih al Bukhari 64:371
حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَهُ إِلَى الْيَمَنِ، فَسَأَلَهُ عَنْ أَشْرِبَةٍ تُصْنَعُ بِهَا، فَقَالَ " وَمَا هِيَ ". قَالَ الْبِتْعُ وَالْمِزْرُ. فَقُلْتُ لأَبِي بُرْدَةَ مَا الْبِتْعُ قَالَ نَبِيذُ الْعَسَلِ، وَالْمِزْرُ نَبِيذُ الشَّعِيرِ. فَقَالَ " كُلُّ مُسْكِرٍ حَرَامٌ ". رَوَاهُ جَرِيرٌ وَعَبْدُ الْوَاحِدِ عَنِ الشَّيْبَانِيِّ عَنْ أَبِي بُرْدَةَ.
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்குப் பொறுப்பாளராக அனுப்பிவைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள், “அவை யாவை?” என்று கேட்டார்கள். நான் “அல்பித்உ, அல்மிஸ்ர்' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று பதிலளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இதை எனக்கு அறிவித்த (என் தந்தை) அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம், “ அல்பித்உ என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்பித்உ என்பது தேனில் தயாரிக்கப்படும் பானம், அல்மிஸ்ர் என்பது தொலி நீக்கப்படாத கோதுமையில் தயாரிக்கப்படும் பானம்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, “(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போதுகூட) வெறுப்பூட்டிவிடாதீர்கள். (தீர்ப்பளிக்கும்போது) ஒத்த கருத்துடன் நடந்துகொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)” என்று (அறிவுரை) கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் தொலி நீக்கப்படாத கோதுமையில் தயாராகும் ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாராகும் ஒருவகை பானமான “பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று பதிலளித்தார்கள். பின்பு நாங்கள் இருவரும் (எங்கள் பணிக்குச்) சென்றுவிட்டோம். (பின்னர் ஒருமுறை சந்தித்தபோது) முஆத் (ரலி) அவர்கள் என்னிடம், “நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார். நான், “நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் வாகனத்தின் மீதிருந்தபடியும் அடிக்கடி ஓதுகிறேன்” என்று பதிலளித்தேன். முஆத் (ரலி) அவர்கள், “நானோ உறங்குவேன்; எழுந்திருப்பேன். நான் எழு(ந்து வழிபடு)வதற்கு (இறைவனிடம்) பிரதிபலன் எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்காகவும் எதிர்பார்க்கி றேன்” என்று சொன்னார். பிறகு கம்பளியாலான கூடாரமொன்றை அமைத்துக்கொண்டார். பிறகு நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் (அடிக்கடி) சந்திக்கலானோம். முஆத் என்னைச் சந்தித்தபோது என்னிடம் ஒரு மனிதர் கட்டிவைக்கப்பட்டிருந்தார். (அதைக் கண்ட) முஆத் (ரலி) அவர்கள், “என்ன இது?” என்று கேட்டார்கள். நான், “இவன் இஸ்லாத்தை ஏற்று, பிறகு மதம் மாறிவிட்ட ஒரு யூதன்” என்று பதிலளித்தேன். முஆத் (ரலி) அவர்கள், “இவனது கழுத்தை நான் துண்டிப்பேன்” என்றார். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, “(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போதுகூட) வெறுப்பூட்டிவிடாதீர்கள். (தீர்ப்பளிக்கும்போது) ஒத்த கருத்துடன் நடந்துகொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)” என்று (அறிவுரை) கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் தொலி நீக்கப்படாத கோதுமையில் தயாராகும் ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாராகும் ஒருவகை பானமான “பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று பதிலளித்தார்கள். பின்பு நாங்கள் இருவரும் (எங்கள் பணிக்குச்) சென்றுவிட்டோம். (பின்னர் ஒருமுறை சந்தித்தபோது) முஆத் (ரலி) அவர்கள் என்னிடம், “நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார். நான், “நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் வாகனத்தின் மீதிருந்தபடியும் அடிக்கடி ஓதுகிறேன்” என்று பதிலளித்தேன். முஆத் (ரலி) அவர்கள், “நானோ உறங்குவேன்; எழுந்திருப்பேன். நான் எழு(ந்து வழிபடு)வதற்கு (இறைவனிடம்) பிரதிபலன் எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்காகவும் எதிர்பார்க்கி றேன்” என்று சொன்னார். பிறகு கம்பளியாலான கூடாரமொன்றை அமைத்துக்கொண்டார். பிறகு நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் (அடிக்கடி) சந்திக்கலானோம். முஆத் என்னைச் சந்தித்தபோது என்னிடம் ஒரு மனிதர் கட்டிவைக்கப்பட்டிருந்தார். (அதைக் கண்ட) முஆத் (ரலி) அவர்கள், “என்ன இது?” என்று கேட்டார்கள். நான், “இவன் இஸ்லாத்தை ஏற்று, பிறகு மதம் மாறிவிட்ட ஒரு யூதன்” என்று பதிலளித்தேன். முஆத் (ரலி) அவர்கள், “இவனது கழுத்தை நான் துண்டிப்பேன்” என்றார். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 4346 — Sahih al Bukhari 64:373
حَدَّثَنِي عَبَّاسُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنْ أَيُّوبَ بْنِ عَائِذٍ، حَدَّثَنَا قَيْسُ بْنُ مُسْلِمٍ، قَالَ سَمِعْتُ طَارِقَ بْنَ شِهَابٍ، يَقُولُ حَدَّثَنِي أَبُو مُوسَى الأَشْعَرِيُّ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أَرْضِ قَوْمِي، فَجِئْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُنِيخٌ بِالأَبْطَحِ فَقَالَ " أَحَجَجْتَ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ ". قُلْتُ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ " كَيْفَ قُلْتَ ". قَالَ قُلْتُ لَبَّيْكَ إِهْلاَلاً كَإِهْلاَلِكَ. قَالَ " فَهَلْ سُقْتَ مَعَكَ هَدْيًا ". قُلْتُ لَمْ أَسُقْ. قَالَ " فَطُفْ بِالْبَيْتِ وَاسْعَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ حِلَّ ". فَفَعَلْتُ حَتَّى مَشَطَتْ لِي امْرَأَةٌ مِنْ نِسَاءِ بَنِي قَيْسٍ، وَمَكُثْنَا بِذَلِكَ حَتَّى اسْتُخْلِفَ عُمَرُ.
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரின் (யமன்) நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அப்தஹ்' பள்ளத்தாக்கில் தங்கியிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள், “அப்துல்லாஹ் பின் கைஸே! நீங்கள் ஹஜ் செய்ய நாடினீர்களா?” என்று கேட்டார்கள். நான், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “நீங்கள் (இஹ்ராமின்போது) என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ தாங்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டுகிறேன் என்று சொன்னேன்” எனப் பதிலளித்தேன். அவர்கள், “உங்களுடன் பலிப் பிராணியை நீங்கள் கொண்டுவந்தீர்களா?” என்று கேட்டார்கள். நான், “கொண்டுவரவில்லை” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், இறையில்லமான கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வாருங்கள்; ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே தொங்கோட்டம் ஓடுங்கள்; பிறகு, இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) விடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன். இறுதியில் கைஸ் குலத்துப் பெண்களில் ஒருத்தி எனக்குத் தலை வாரினாள். இவ்வாறே, உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும்வரை நாங்கள் செயல்பட்டுவந்தோம்.379 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யமன் நாட்டுக்கு அனுப்பியபோது சொன்னார்கள்: நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்லப்போகிறீர்கள். அவர்களிடம் நீங்கள் செல்லும்போது, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்றும் “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றும் உறுதிமொழி கூற அவர்களை அழையுங்கள். இதில் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்கள்மீது ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகை களை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதிலும் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களில் செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளிடையே பங்கிடப்பட வேண்டிய ஸகாத்தை அவர்கள்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதிலும் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படியும்போது, அவர்களின் செல்வங் களில் உயர்ந்தவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கின்றேன். அநீதிக்குள்ளானவரின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேதுமில்லை.380 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: (இங்கு “கீழ்ப்படிதல்' என்பதைக் குறித்து) “அ(த்)தாஊ' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. தவ்வஅ, தாஅ, அ(த்)தாஅ எல்லாம் (பொருளில்) ஒன்றே! “நான் கீழ்ப்படிந்தேன்' என்பதை திஅ(த்)து, துஅ(த்)து, அ(த்)தஅத்து என (மூன்று முறையில்) கூறலாம். அத்தியாயம் :
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆத் (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்கு(ப் பொறுப்பாளராக) வந்தபோது மக்களுக்கு சுப்ஹ் தொழுகை தொழுவித் தார்கள். அப்போது, “அல்லாஹ், (தன் தூதர்) இப்ராஹீமை உற்றநண்பராக ஆக்கிக்கொண்டான்” எனும் (4:125ஆம்) வசனத்தை ஓதினார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது” என்று சொன்னார்.381 மற்றோர் அறிவிப்பில் கூடுதாக உள்ள தாவது: நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு(ப் பொறுப்பாளராக) அனுப்பினார்கள். (அங்கு சென்றபின்) முஆத் (ரலி) அவர்கள் சுப்ஹ் தொழுகையில் (இமாமாக நின்று குர்ஆனின் நான்காவது அத்தியாயமான) “அந்நிசா' அத்தியாயத்தை ஓதினார்கள். “அல்லாஹ் இப்ராஹீமை உற்றநண்பராக ஆக்கிக்கொண்டான்” (4:125) எனும் வசனத்தை முஆத் (ரலி) அவர்கள் ஓதியபோது அவர்களுக்குப் பின்னாóருந்த ஒரு மனிதர், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது” என்று சொன்னார். அத்தியாயம் :