ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் யமன் நாட்டில் இருந்தேன். அப்போது யமன்வாசிகளில் “தூ கலாஉ' மற்றும் “தூ அம்ர்' ஆகிய இருவரை நான் சந்தித்தேன்.391 அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிப் பேசலானேன். அப்போது “தூ அம்ர்' என்னிடம், “நீங்கள் சொல்லும் உங்கள் தோழரின் செய்தி உண்மையெனில் அவர் இறந்துபோய் மூன்று நாட்கள் கடந்துவிட்டன என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். அவர்கள் இருவரும் என்னுடன் வந்தார்கள். நாங்கள் இன்னும் பயணத்திலேயே இருந்துகொண்டிருக்கும்போது மதீனாவின் திசையிலிருந்து ஒரு பயணக் கூட்டம் வந்துகொண்டிருப்பது தென்பட்டது. நாங்கள் அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டுவிட்டார்கள். மக்கள் அனை வரும் நல்லவர்களாக உள்ளனர்” என்று பதிலளித்தனர். உடனே “தூ கலாஉ' மற்றும் “தூ அம்ர்' இருவரும், “நாங்கள் இருவரும் புறப்பட்டு வந்தோம். (எனினும், இப்போது திரும்பிச் செல்கிறோம்.) இறைவன் நாடினால் (அவரிடம்) திரும்பி வருவோம்' என்று உங்கள் தோழரிடம் (அபூபக்ரிடம்) சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். பிறகு யமன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் செய்தியைத் தெரிவித்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அவர்களை (என்னிடம்) நீங்கள் அழைத்துவந்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். பிறகு (என்னைச் சந்திக்கும்) ஒரு சந்தர்ப்பம் வந்தபோது தூ அம்ர், “ஜரீரே! நீங்கள் எனக்கு உபகாரம் செய்திருக்கிறீர்கள். ஆகவே, நான் உங்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறேன். அரபு மக்களாகிய நீங்கள், தலைவர் ஒருவர் இறந்துவிட்டால், (உங்களுக்குள் ஒருவரையொருவர் கலந்தாலோசித்து) வேறொருவரைத் தலைவராகத் தேர்ந் தெடுத்துக்கொள்ளும்வரை நன்மையில் இருப்பீர்கள். (ஆட்சித் தலைமை) வாள் பலத்தால் உருவாவதாயிருந்தால், ஆட்சித் தலைவர் களாக வருபவர்கள் மன்னர்களாக இருப்பார்கள். அவர்கள் மன்னர்கள் கோபப்படுவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகக்) கோபப்பட்டு, மன்னர்கள் திருப்தியடைவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகத்) திருப்தியடைவார்கள்” என்று சொன்னார். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையினருக்கு அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக்கினார்கள். அவர்கள் (மொத்தம்) முன்னூறு பேர் இருந்தனர். (அதில் நானும் கலந்து கொள்ள) நாங்கள் புறப்பட்டோம். சிறிது தூரம் சென்றபின், வழியில் (எங்கள்) பயண உணவு தீர்ந்துபோய் விட்டது. ஆகவே, அபூஉபைதா (ரலி) அவர்கள் படையினரின் பயண உணவுகளை ஒன்று திரட்டும்படிக் கட்டளையிட, அவை ஒன்றுதிரட்டப்பட்டன. அவை இரு பைகள் நிறையப் பேரீச்சம் பழங்களாய் இருந்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அது தீரும்வரை (அதிலிருந்து) எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக உண்ணக் கொடுத்தார்கள். ஆகவே, எங்களுக்கு ஒவ்வொரு பேரீச்சம் பழம்தான் (ஒவ்வொரு தினமும்) கிடைத்துவந்தது. அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), “(ஒருநாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் உங்களுக்குப் போதாதே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அதுவும் தீர்ந்து போனபோதுதான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது சிறிய மலை போன்ற (திமிங்கில வகை) மீன் ஒன்றைக் கண்டோம். படை வீரர்கள் பதினெட்டு நாட்கள் அதிலிருந்து உண்டார்கள். பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளில் இரண்டை (பூமியில்) நட்டுவைக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவை நட்டுவைக்கப்பட்டன. பிறகு (அவற்றுக்கிடையே) தமது வாகனத்தைச் செலுத்தும்படி அவர்கள் உத்தரவிட, அவ்வாறே செலுத்தப்பட்டது. அவ்விரு விலா எலும்புகளின் கீழே அவ்வாகனம் சென்றது; எனினும், அவ்விரண்டையும் தொடாமலேயே அது (அவற்றுக்கிடையே புகுந்து வெளியே) சென்றுவிட்டது.393 அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை (ஓர் அறப்போருக்கு) அனுப்பினார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் எங்கள் தளபதியாக இருந்தார்கள். நாங்கள் குறைஷியரின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆகவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். ஆகவே அந்தப் படைப்பிரிவு “கருவேல இலைப் படைப்பிரிவு' என்று பெயர் சூட்டப்பட்டது. கடல் எங்களுக்காக “அல்அம்பர்' (கொழுப்புத் தலை திமிங்கலம்) எனப்படும் ஓர் உயிரினத்தை (கரையில் ஒதுக்கிப்) போட்டது. நாங்கள் அதிலிருந்து அரை மாதம் உண்டோம். அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக்கொண்டோம். அதனால் எங்கள் பழைய (வலிமையான) உடல்கள் எங்களுக்கு திரும்பக் கிடைத்துவிட்டன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்த (பெரிய) மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுத் தம்முடனிருந்த மிக உயரமான மனிதரிடம் சென்றார்கள். (அவரை அந்த விலா எலும்பின் கீழே நடந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார்கள்). மற்றோர் அறிவிப்பில், “ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு, அந்த எலும்பு(க் கூட்டு)க்குக் கீழே நடந்து சென்றார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தப் படையினரில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்களையும் மீண்டும் மூன்று ஒட்டகங்களையும் அறுத்தார். பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் (“இனி அறுக்க வேண்டாம்” என்று) அவரைத் தடுத்துவிட்டார்கள். அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் (போரிலிருந்து திரும்பியபின் தம் தந்தை சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம்), “நான் அந்தப் படையில் இருந்தேன். அப்போது மக்கள் கடும் பசிக்கு ஆளானார்கள்” என்று சொன்னார்கள். அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார். கைஸ் (ரலி) அவர்கள், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “அவர்கள் மீண்டும் பசிக்கு ஆளானார்கள்” என்று சொல்ல, அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார். அவர், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “மீண்டும் அவர்கள் பசிக்கு ஆளானார்கள்” என்றார். மீண்டும் அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார். உடனே அவர், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “மீண்டும், அவர்கள் பசிக்கு ஆளானார்கள்” என்று சொல்ல, அவருடைய தந்தை, “நீ ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்றார். அவர், “(மூன்று முறைக்குப் பிறகு) நான் அறுக்க வேண்டாமெனத் தடுக்கப்பட்டுவிட்டேன்” என்று சொன்னார். அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் “கருவேல இலைப் படைப் பிரிவி'ல் சென்றோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது இறந்த (பெரிய) மீன் ஒன்றைக் கடல், (கரையில் கொணர்ந்து) போட்டது. (அதற்குமுன்) அதைப் போல் (ஒரு மீனை) நாங்கள் பார்த்ததேயில்லை. அது “அல்அம்பர்' (கொழுப்புத் தலை திமிங்கலம்) என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்து அரை மாதம் நாங்கள் உண்டோம். அபூஉபைதா அவர்கள் அதன் (விலா) எலும்புகளில் ஒன்றை எடுத்து பூமியில் நட்டுவைக்க (அதன் கீழே) ஒருவர் வாகனத்தில் சென்றார். அறிவிப்பாளர் அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் (ரலி) அவர்கள் இவ்விதம் கூற நான் கேட்டேன்: அபூஉபைதா (ரலி) அவர்கள், “உண்ணுங்கள்” என்று சொன்னார்கள். நாங்கள் மதீனாவுக்கு (திரும்பி) வந்த போது, நபி (ஸல்) அவர்களிடம் அதைச் சொன்னோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் (கடலிலிருந்து) வெளிப்படுத்திய அந்த உணவை உண்ணுங்கள். (அதனால் தவறில்லை.) உங்களுடன் (அதில் சிறிது) இருந்தால் நமக்கும் உண்ணக்கொடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அவர்களில் சிலர், நபி (ஸல்) அவர்களிடம் (அந்த மீனில்) ஒரு துண்டைக் கொண்டுவந்தனர். அதை நபி (ஸல்) அவர்கள் உண்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 4363 — Sahih al Bukhari 64:389
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ـ رضى الله عنه ـ بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ يَوْمَ النَّحْرِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “விடைபெறும் ஹஜ்'ஜ‚க்கு முந்தைய ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவுக்குத்) தலைவராக ஆக்கியிருந்தார்கள். அப்போது (துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளான) நஹ்ருடைய நாளில் (மினாவில் வைத்து), “இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்போர் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லம் கஅபாவை நிர்வாணமாக யாரும் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது” என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னை அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.395 அத்தியாயம் :
ஹதீஸ் 4364 — Sahih al Bukhari 64:390
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ آخِرُ سُورَةٍ نَزَلَتْ كَامِلَةً بَرَاءَةٌ، وَآخِرُ سُورَةٍ نَزَلَتْ خَاتِمَةُ سُورَةِ النِّسَاءِ {يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ}
பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: முழுமையான வடிவில் அருளப்பெற்ற இறுதி அத்தியாயம், “பராஅத்' (எனும் 9ஆவது “அத்தவ்பா') அத்தியாயம் ஆகும். இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயப் பகுதி “அந்நிசா'வின் இறுதிப் பகுதியாகும். அந்த வசனம் வருமாறு: (நபியே!) மக்கள் உங்களிடம் “கலாலா' பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் உங்களுக்கு “கலாலா' பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான்...(4:176)396 அத்தியாயம் :
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ தமீம் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று அவர்களிடம் சொன்னார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு நற்செய்தி சொன்னீர் கள். (அது இருக்கட்டும்! தர்மம்) கொடுங்கள்” என்று சொன்னார்கள். (இவர்கள் நம் நற்செய்தியை ஏற்க மறுத்து உலகப் பொருளையே விரும்புகிறார்களே என்று) நபி (ஸல்) அவர்களது முகத்தில் கவலை காணப்பட்டது. அப்போது யமன் நாட்டிலிருந்து (அஷ்அரீ குலத்தார்) சிலர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “(யமன்வாசிகளே!) நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு யமனியர், “நாங்கள் (அதை) ஏற்றுக்கொண்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.398 அத்தியாயம் :
ஹதீஸ் 4366 — Sahih al Bukhari 64:392
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لاَ أَزَالُ أُحِبُّ بَنِي تَمِيمٍ بَعْدَ ثَلاَثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهَا فِيهِمْ " هُمْ أَشَدُّ أُمَّتِي عَلَى الدَّجَّالِ ". وَكَانَتْ فِيهِمْ سَبِيَّةٌ عِنْدَ عَائِشَةَ فَقَالَ " أَعْتِقِيهَا فَإِنَّهَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ ". وَجَاءَتْ صَدَقَاتُهُمْ فَقَالَ " هَذِهِ صَدَقَاتُ قَوْمٍ، أَوْ قَوْمِي ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரிடம் மூன்று அம்சங் கள் குடிகொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன். அவையாவன: 1. “பனூ தமீம் குலத்தார்தான் என் சமுதாயத்தாரிலேயே தஜ்ஜாலிடம் மிகக் கடுமையாக நடந்துகொள்பவர்கள்” என்று (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். 2. அக்குலத்தாரைச் சேர்ந்த பெண் போர்க்கைதி ஒருவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தார். ஆகவே, (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “அவளை விடுதலை செய்துவிடு. ஏனெனில், அவள் (இறைத்தூதர்) இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சந்ததிகளில் ஒருத்தியாவாள்” என்று சொன்னார்கள். 3. (ஒருமுறை) பனூ தமீம் குலத்தாரின் தானப் பொருள்கள் வந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவை “ஒரு (முக்கிய) சமுதாயத்தின்' அல்லது “என் சமுதாயத்தின்' தானப் பொருட்கள்” என்று சொன்னார்கள்.400 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூபக்ர் (ரலி) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) கஅகாஉ பின் மஅபத் பின் ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “இல்லை; அக்ரஉ பின் ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்” என்று சொன்னார் கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களிடம்), “நீங்கள் எனக்கு மாற்றமாகக் கருத்துச் சொல்லவே விரும்புகிறீர்கள்” என்று சொல்ல, உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு மாற்றமாகக் கருத்துச் சொல்வது என் நோக்கமல்ல” என்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக்கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே, “இறைநம்பிக்கை கொண்ட வர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்” எனும் (49:1ஆவது) வசனம் முழுவதுமாக அருளப்பெற்றது. அத்தியாயம் :
அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “என்னிடம் “நபீத்' (பழச்சாறு மது) வைக்கப்படுகின்ற மண்பாண்டம் ஒன்று இருந்தது. மண்பாண்டத்தில் இனிப்பாக இருக்கும் நிலையில் நான் அதை அருந்துவேன். நான் அதை அதிகமாக அருந்தி, மக்களுடன் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் (போதையில் தாறுமாறாக நடந்து) கேவலப்பட்டுப் போய்விடுவேன் என நான் அஞ்சினேன்” என்று சொன்னேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(அப்துல் கைஸ்) சமுதாயத்தாரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். இழிவுக்குள்ளாகாமலும், மனவருத்தத்திற்குள்ளாகாமலும் வருக!” என்று சொன்னார்கள். அம்மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் உங்களுக்குமிடையே “முளர்' குலத்து இணைவைப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர். இதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ள) புனித மாதங்களில் தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. ஆகவே, எந்தக் கட்டளைகளை நாங்கள் செயல்படுத்தினால் நாங்கள் சொர்க்கம் செல்லவும் எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களை அவற்றின் பக்கம் நாங்கள் அழைக்கவும் ஏதுவாக இருக்குமோ அத்தகைய கட்டளைகளில் (முக்கியமான) சிலவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான் நான்கு விஷயங்களைக் கட்டளையிடுகின்றேன்: 1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது. அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று உறுதி கூறுவதுதான் (அது). 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. ஸகாத் (கட்டாயக்கொடை) வழங்கு வது. 4. ரமளான் மாதம் நோன்பு நோற்பது. மேலும், “போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசுக்குச்) செலுத்தும்படியும் (உங்களுக்குக்) கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கின்றேன். மது ஊற்றி வைக்கப்படும் பாத்திரங்களான சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய், மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங் கள்தான் அவை” என்றார்கள்.402 அத்தியாயம் :