حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيٍّ، عَنِ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ، حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، ثُمَّ الْجُنْدَعِيُّ أَنَّ عُبَيْدَ، اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ أَخْبَرَهُ أَنَّ الْمِقْدَادَ بْنَ عَمْرٍو الْكِنْدِيَّ، وَكَانَ حَلِيفًا لِبَنِي زُهْرَةَ، وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَخْبَرَهُ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرَأَيْتَ إِنْ لَقِيتُ رَجُلاً مِنَ الْكُفَّارِ فَاقْتَتَلْنَا، فَضَرَبَ إِحْدَى يَدَىَّ بِالسَّيْفِ فَقَطَعَهَا، ثُمَّ لاَذَ مِنِّي بِشَجَرَةٍ فَقَالَ أَسْلَمْتُ لِلَّهِ. آأَقْتُلُهُ يَا رَسُولَ اللَّهِ بَعْدَ أَنْ قَالَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقْتُلْهُ ". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ قَطَعَ إِحْدَى يَدَىَّ، ثُمَّ قَالَ ذَلِكَ بَعْدَ مَا قَطَعَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقْتُلْهُ، فَإِنْ قَتَلْتَهُ فَإِنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ، وَإِنَّكَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أَنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ ".
உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புறவு ஒப்பந்தக்காரரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ரில் கலந்துகொண்டவருமான மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இறைமறுப்பாளர் ஒருவரை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவர் என் கை ஒன்றை வாளால் துண்டித்துவிட்டார். பிறகு, அவர் என்னைவிட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக்கொண்டு, “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்' என்று சொன்னார். இதை அவர் சொன்னதற்குப் பிறகு நான் அவரைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வேண்டாம்.) அவரைக் கொல்லாதே” என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர் என் கை ஒன்றைத் துண்டித்துவிட்டார். அதைத் துண்டித்த பிறகுதானே இதைச் சொன்னார்!” என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவரைக் கொன்றுவிட்டால்அவரைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவர் வந்துவிடுவார். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவரிருந்த (குற்றவாளியான) நிலைக்கு நீ சென்றுவிடுவாய்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: “அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போர் (நடந்த) நாளில் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைத் தேடிச்) சென்றார்கள். அப்போது அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாக) அவனைத் தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். (அவனை நோக்கி), “அபூஜஹ்லே! நீயா?” என்றும் கேட்டார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “இப்படித்தான் இந்த நிகழ்ச்சியை (எனக்கு) அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். மேலும், “இப்னு மஸ்ஊத் அவர்கள் (அபூஜஹ்லை நோக்கி), “அபூஜஹ்லே நீயா?' என்று கேட்டபோது, “நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன் சமுதாயத்தாராலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... யாரும் உண்டா?' என்று (தன்னைத் தானே புகழ்ந்தவனாக) அபூஜஹ்ல் சொன்னான்” என சுலைமான் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.57 அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “விவசாயி அல்லாத ஒருவன் என்னைக் கொன்றிருந்தால்... (நன்றாயிருந் திருக்குமே!)” என்று அபூஜஹ்ல் கூறியதாக இடம்பெற்றுள்ளது.58 அத்தியாயம் :
ஹதீஸ் 4021 — Sahih al Bukhari 64:70
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، عَنْ عُمَرَ ـ رضى الله عنهم ـ لَمَّا تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم قُلْتُ لأَبِي بَكْرٍ انْطَلِقْ بِنَا إِلَى إِخْوَانِنَا مِنَ الأَنْصَارِ. فَلَقِيَنَا مِنْهُمْ رَجُلاَنِ صَالِحَانِ شَهِدَا بَدْرًا. فَحَدَّثْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَقَالَ هُمَا عُوَيْمُ بْنُ سَاعِدَةَ، وَمَعْنُ بْنُ عَدِيٍّ.
உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “என்னுடன் நம் அன்சாரித் தோழர்களிடம் (பனூ சாஇதா சமுதாயக்கூடத்துக்கு) வாருங்கள்” என்று கூறினேன். (நாங்கள் போய்க்கொண்டிருந்தோம்.) அப்போது அன்சாரிகளில் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களான இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தார்கள்.59 அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை) நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் கூறியபோது, “உவைம் பின் சாஇதா (ரலி), மஅன் பின் அதீ (ரலி) ஆகியோரே அந்த இருவர்' என்று அவர்கள் கூறினார்கள்.60 அத்தியாயம் :
கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரில் கலந்துகொண்டவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒருவருக்கு, தீனார்/திர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தின் போது), “(உதவித் தொகையை) மற்றவர்களைவிட இவர்களுக்கு அதிகமாக்கித் தருவேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 4023 — Sahih al Bukhari 64:72
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ، وَذَلِكَ أَوَّلَ مَا وَقَرَ الإِيمَانُ فِي قَلْبِي.
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் “அத்தூர்' (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருக்க நான் கேட்டேன். இதுதான் இறைநம்பிக்கை எனது இதயத்தில் இடம் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும்.61 அத்தியாயம் :
ஹதீஸ் 4024 — Sahih al Bukhari 64:73
وَعَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي أُسَارَى بَدْرٍ " لَوْ كَانَ الْمُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلاَءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ لَهُ ". وَقَالَ اللَّيْثُ عَنْ يَحْيَى، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَقَعَتِ الْفِتْنَةُ الأُولَى ـ يَعْنِي مَقْتَلَ عُثْمَانَ ـ فَلَمْ تُبْقِ مِنْ أَصْحَابِ بَدْرٍ أَحَدًا، ثُمَّ وَقَعَتِ الْفِتْنَةُ الثَّانِيَةُ ـ يَعْنِي الْحَرَّةَ ـ فَلَمْ تُبْقِ مِنْ أَصْحَابِ الْحُدَيْبِيَةِ أَحَدًا ثُمَّ وَقَعَتِ الثَّالِثَةُ فَلَمْ تَرْتَفِعْ وَلِلنَّاسِ طَبَاخٌ.
நபி (ஸல்) அவர்கள் பத்ர் போரில் பிடிபட்ட கைதிகள் தொடர்பாகக் கூறினார்கள்: முத்இம் பின் அதீ உயிரோடிருந்து இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால், நான் அவருக்காக இவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிட்டிருப்பேன்.62 இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் படுகொலை நடைபெற்றது. அது பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.63 பிறகு இரண்டாம் குழப்பமான “அல்ஹர்ரா போர்' நடைபெற்றது. அது ஹுதைபியா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.64 பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.65 அத்தியாயம் :
ஹதீஸ் 4025 — Sahih al Bukhari 64:74
حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم كُلٌّ ـ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الْحَدِيثِ ـ قَالَتْ فَأَقْبَلْتُ أَنَا وَأُمُّ مِسْطَحٍ فَعَثَرَتْ أُمُّ مِسْطَحٍ فِي مِرْطِهَا فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ. فَقُلْتُ بِئْسَ مَا قُلْتِ، تَسُبِّينَ رَجُلاً شَهِدَ بَدْرًا فَذَكَرَ حَدِيثَ الإِفْكِ.
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்களின் (மீது சொல்லப்பட்ட அவதூறு) நிகழ்ச்சி குறித்து உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லா பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிடம் செவியுற்றேன். (அவர்களில்) ஒவ்வொரு வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தனர். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நானும் (அபூருஹ்மின் மகள்) உம்மு மிஸ்(த்)தஹும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்(த்)தஹ் (மிஸ்(த்)தஹின் தாயார்) தமது கம்பளி அங்கியில் இடறிக்கொண்டார். அப்போது அவர், (அவதூறில் கலந்துகொண்ட தம் மகன் மிஸ்(த்)தஹைச் சபித்தவராக), “மிஸ்(த்)தஹ் நாசமாகட்டும்” என்று கூறினார். நான், “மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்?” என்று கூறினேன்... பிறகு அவதூறு பற்றிய ஹதீஸை (முழு வடிவத்துடன்) அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.66 அத்தியாயம் :
ஹதீஸ் 4026 — Sahih al Bukhari 64:75
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحِ بْنِ سُلَيْمَانَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ هَذِهِ مَغَازِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَذَكَرَ الْحَدِيثَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ يُلْقِيهِمْ " هَلْ وَجَدْتُمْ مَا وَعَدَكُمْ رَبُّكُمْ حَقًّا ". قَالَ مُوسَى قَالَ نَافِعٌ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ نَاسٌ مِنْ أَصْحَابِهِ يَا رَسُولَ اللَّهِ تُنَادِي نَاسًا أَمْوَاتًا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا قُلْتُ مِنْهُمْ ". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ فَجَمِيعُ مَنْ شَهِدَ بَدْرًا مِنْ قُرَيْشٍ مِمَّنْ ضُرِبَ لَهُ بِسَهْمِهِ أَحَدٌ وَثَمَانُونَ رَجُلاً، وَكَانَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ يَقُولُ قَالَ الزُّبَيْرُ قُسِمَتْ سُهْمَانُهُمْ فَكَانُوا مِائَةً، وَاللَّهُ أَعْلَمُ.
மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறப்போர்கள் குறித்து அறிவிப்புச் செய்ததற்குப் பின்னால்) இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள், “இவைதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறப்போர்கள்' என்று கூறினார்கள். அப்போது (பத்ர் போரில் மாண்டுபோன குறைஷித் தலைவர்களின் சடலங்களைக் கிணற்றில்) எறிந்துவிட்டு அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாகக் கண்டுகொண்டீர்களா?” எனக் கேட்டார்கள் என்று (பத்ர் போர் பற்றிய) ஹதீஸையும் கூறினார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், “இறந்துபோன மக்களை நோக்கியா பேசுகின்றீர்கள்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களிடம் நான் கூறுவதை, அவர்களைவிட நீங்கள் நன்கு செவியுறுபவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.67 (அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) குறைஷி (முஸ்லிம்)களில், (ஏதேனும் தகுந்த காரணத்தால்) பத்ர் போரில் கலந்து(கொள்ளாதபோதிலும், கலந்துகொண்டதாகத் கருதப்பட்டுப் போர்ச் செல்வத்தில்) பங்கு வழங்கப்பட்டவர்கள் மொத்தம் எண்பத்தியொரு பேராகும். “(போர்ச் செல்வத்தில்) குறைஷியரின் பங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது; நூறு பேர் இருந்தனர். “அல்லாஹ்வே மிக அறிந்தவன்' என்று ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் சொன்னார்கள்” என உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுவது வழக்கம். அத்தியாயம் :
ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது முஹாஜிர்களுக்கு (போர்ச் செல்வத்திலிருந்து) நூறு பங்குகள் ஒதுக்கப்பட்டன. இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.68 அத்தியாயம் :
இப்னு உமர் (ரó) அவர்கள் கூறியதாவது: (மதீனா யூதர்களான பனுந்) நளீர் குலத்தாரும் (பனூ) குறைழா குலத்தாரும் (நபி (ஸல்) அவர்கள்மீது) போர் தொடுத்தனர். எனவே, பனுந் நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். (பனூ) குறைழா குலத்தார் (வருத்தம் தெரிவித்ததால் அவர்கள்)மீது கருணைகாட்டி (மன்னித்து) அவர்களை அங்கேயே (வசிக்க) விட்டுவிட்டார்கள். (ஆனால், பனூ) குறைழா குலத்தாரும் போர் தொடுத்தபோது அவர்களுடைய ஆண்களைக் கொலை செய்தார்கள். மேலும், அவர்களுடைய பெண்களையும் அவர்களுடைய குழந்தைகளையும், அவர்களுடைய உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச் செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் வந்து சேர்ந்துகொண்ட (பனூ குறைழா குலத்தார்) சிலருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். அந்தச் சிலர் முஸ்லிம்களாக மாறிவிட்டனர். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் குலத்தாரான “பனூ கைனுகா' கூட்டத்தாரையும், பனூ ஹாரிஸா (குலத்தாரான) யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள்.87 அத்தியாயம் :