Qurani·قرآني
தமிழ்

தொழுகை (ஸலாத்)

172 ஹதீஸ்கள் · #349–520

ஹதீஸ் 479 — Sahih al Bukhari 8:126
حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، عَنْ بِشْرٍ، حَدَّثَنَا عَاصِمٌ، حَدَّثَنَا وَاقِدٌ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَوِ ابْنِ عَمْرٍو شَبَّكَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصَابِعَهُ‏.‏
இப்னு உமர், அல்லது இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் கைவிரல் களைக் கோத்துக்காட்டினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 480 — Sahih al Bukhari 8:127
وَقَالَ عَاصِمُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، سَمِعْتُ هَذَا الْحَدِيثَ، مِنْ أَبِي فَلَمْ أَحْفَظْهُ، فَقَوَّمَهُ لِي وَاقِدٌ عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبِي وَهُوَ، يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، كَيْفَ بِكَ إِذَا بَقِيتَ فِي حُثَالَةٍ مِنَ النَّاسِ بِهَذَا ‏"‏‏.‏
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைவிரல்களைக் கோத்துக்காட்டி) “அப்துல்லாஹ் பின் அம்ரே! மக்களில் மிகவும் மட்டமானவர்களுடன் இப்படி நீர் (சேர்ந்து) வாழ நேர்ந்தால், உமது நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 481 — Sahih al Bukhari 8:128
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ، يَشُدُّ بَعْضُهُ بَعْضًا ‏"‏‏.‏ وَشَبَّكَ أَصَابِعَهُ‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது. (இப்படிக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் தம் (இரு) கைவிரல்களை, ஒன்றுடன் ஒன்றைக் கோத்துக்காட்டி னார்கள். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 482 — Sahih al Bukhari 8:129
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا ابْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِحْدَى صَلاَتَىِ الْعَشِيِّ ـ قَالَ ابْنُ سِيرِينَ سَمَّاهَا أَبُو هُرَيْرَةَ وَلَكِنْ نَسِيتُ أَنَا ـ قَالَ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، فَقَامَ إِلَى خَشَبَةٍ مَعْرُوضَةٍ فِي الْمَسْجِدِ فَاتَّكَأَ عَلَيْهَا، كَأَنَّهُ غَضْبَانُ، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى، وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ، وَوَضَعَ خَدَّهُ الأَيْمَنَ عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى، وَخَرَجَتِ السَّرَعَانُ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ فَقَالُوا قَصُرَتِ الصَّلاَةُ‏.‏ وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَفِي الْقَوْمِ رَجُلٌ فِي يَدَيْهِ طُولٌ يُقَالُ لَهُ ذُو الْيَدَيْنِ قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَنَسِيتَ أَمْ قَصُرَتِ الصَّلاَةُ قَالَ ‏"‏ لَمْ أَنْسَ، وَلَمْ تُقْصَرْ ‏"‏‏.‏ فَقَالَ ‏"‏ أَكَمَا يَقُولُ ذُو الْيَدَيْنِ ‏"‏‏.‏ فَقَالُوا نَعَمْ‏.‏ فَتَقَدَّمَ فَصَلَّى مَا تَرَكَ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ‏.‏ فَرُبَّمَا سَأَلُوهُ ثُمَّ سَلَّمَ فَيَقُولُ نُبِّئْتُ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ قَالَ ثُمَّ سَلَّمَ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மாலைத் தொழுகைகளில் ஒன்றை (லுஹ்ர் அல்லது அஸ்ர்) தொழுவித்தார்கள். - (இதன் அறிவிப்பாளரான) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தத் தொழுகையின் பெயரை அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால், நான்தான் அதை மறந்துவிட்டேன்- (நான்கு ரக்அத்களுடைய அத்தொழு கையை) எங்களுக்கு இரண்டு ரக்அத் களாகத் தொழுவித்துவிட்டு ‘சலாம்’ கொடுத்துவிட்டார்கள். உடனே எழுந்து பள்ளிவாசலில் அகலவாக்கில் போடப்பட்டிருந்த ஒரு மரக்கட்டையை நோக்கிச் சென்று, ஏதோ கோபத்தி-ருப்பவரைப் போன்று அதில் சாய்ந்துகொண்டார்கள். தமது வலக் கரத்தை இடக் கரத்தின் மீது வைத்து, கை விரல்களைப் பின்னிக் கோத்துக்கொண்டார்கள். மேலும், தமது வலக் கன்னத்தை இடப் புறங்கையின் மீது வைத்துக்கொண்டார்கள். அவசரமாகச் செல்பவர்கள் பள்ளிவாசலின் தலைவாயில்கள் வழியாக வெளியேறியபோது, “தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது (போலும்)” என்று கூறினர். அந்தக் கூட்டத்தில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். ஆனால், (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் பேச அவர்களிருவரும் (மரியாதைக்காக) அஞ்சினர். அந்தக் கூட்டத்திலேயே நீளமான இரு கைகளை உடைய ஒரு மனிதர் இருந்தார். அவர் ‘துல்யதைன்’ (இரு கையாளர்) என்று அழைக்கப்படுவார். அவர், “நீங்கள் மறந்துவிட்டீர்களா, அல்லது தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் மறக்கவுமில்லை; (தொழுகை) சுருக்கப்படவு மில்லை” என்று கூறிவிட்டு (மக்களைப் பார்த்து), “துல்யதைன் சொல்வதைப் போன்றுதான் நடந்ததா?” என்று கேட்க, மக்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தனர். உடனே (தொழுமிடத்தை நோக்கி) முன்னேறிச் சென்று, விடுபட்டதைத் தொழுதுவிட்டு, ‘சலாம்’ கொடுத்தார்கள். பிறகு தக்பீர் (‘அல்லாஹு அக்பர்’ என்று) சொல்- ‘(வழக்கமாக) தாம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வதைப் போன்று’ அல்லது ‘அதைவிட நீண்ட (நேரம்)’ சஜ்தா செய்தார்கள். பிறகு (சஜ்தாவி-ருந்து) தமது தலையை உயர்த்தி ‘தக்பீர்’ சொன்னார்கள். பின்னர் ‘தக்பீர்’ சொல்- ‘(வழக்கமாகத்) தாம் செய்யும் சஜ்தாவைப் போன்று’ அல்லது ‘அதைவிட நீண்ட (நேரம்)’ (மறதிக்குரிய) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தியவாறு தக்பீர் சொன்னார்கள். மக்கள் சில சந்தர்ப்பங்களில் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம், “(இறுதியாக நபி -ஸல்) அவர்கள் ‘சலாம்’ கொடுத்தார்களா?” என்று கேட்பார்கள். அதற்கு முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், “இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்து எமக்குக் கிடைத்த ஹதீஸில்தான், (மறதிக்குரிய சஜ்தா செய்த) பின்னர் நபியவர்கள் சலாம் கொடுத்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது. (அபூஹுரைராவின் அறிவிப்பில் அவ்வாறு இல்லை)” என்று பதிலளிப்பார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 483 — Sahih al Bukhari 8:130
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ رَأَيْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ يَتَحَرَّى أَمَاكِنَ مِنَ الطَّرِيقِ فَيُصَلِّي فِيهَا، وَيُحَدِّثُ أَنَّ أَبَاهُ كَانَ يُصَلِّي فِيهَا، وَأَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ‏.‏ وَحَدَّثَنِي نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ‏.‏ وَسَأَلْتُ سَالِمًا، فَلاَ أَعْلَمُهُ إِلاَّ وَافَقَ نَافِعًا فِي الأَمْكِنَةِ كُلِّهَا إِلاَّ أَنَّهُمَا اخْتَلَفَا فِي مَسْجِدٍ بِشَرَفِ الرَّوْحَاءِ‏.‏
மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சா-ம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் சாலையோர இடங்கள் சிலவற்றைத் தேடிப்பிடித்து அங்கே தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். மேலும், தம் தந்தை (அப்துல்லாஹ் பின் உமர் -ர-) அவர்கள் அந்த இடங்களில் தொழுதுவந்ததாகவும் அவ்விடங்களில் நபி (ஸல்) அவர்கள் தொழுததைத் தம் தந்தை பார்த்திருப்பதாகவும் குறிப்பிடு வார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அவ்விடங்களில் தொழுது வந்ததாக நாஃபிஉ (ரஹ்) அவர்களும் என்னிடம் அறிவித்துள்ளார்கள். சா-ம் (ரஹ்) அவர்களிடம் நான் இது பற்றிக் கேட்டபோது, (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுத) அனைத்து இடங்களைப் பற்றியும் நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறியதைப் போன்றே கூறி னார்கள். என்றாலும், (மதீனாவுக்கு அருகில் உள்ள) ‘ஷரஃபுர் ரவ்ஹா’ எனும் சிற்றூரில் அமைந்த பள்ளிவாசல் விஷயத்தில் இருவரும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தனர். அத்தியாயம் :
ஹதீஸ் 484 — Sahih al Bukhari 8:131
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ بِذِي الْحُلَيْفَةِ حِينَ يَعْتَمِرُ، وَفِي حَجَّتِهِ حِينَ حَجَّ، تَحْتَ سَمُرَةٍ فِي مَوْضِعِ الْمَسْجِدِ الَّذِي بِذِي الْحُلَيْفَةِ، وَكَانَ إِذَا رَجَعَ مِنْ غَزْوٍ كَانَ فِي تِلْكَ الطَّرِيقِ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ هَبَطَ مِنْ بَطْنِ وَادٍ، فَإِذَا ظَهَرَ مِنْ بَطْنِ وَادٍ أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي عَلَى شَفِيرِ الْوَادِي الشَّرْقِيَّةِ، فَعَرَّسَ ثَمَّ حَتَّى يُصْبِحَ، لَيْسَ عِنْدَ الْمَسْجِدِ الَّذِي بِحِجَارَةٍ، وَلاَ عَلَى الأَكَمَةِ الَّتِي عَلَيْهَا الْمَسْجِدُ، كَانَ ثَمَّ خَلِيجٌ يُصَلِّي عَبْدُ اللَّهِ عِنْدَهُ، فِي بَطْنِهِ كُثُبٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَمَّ يُصَلِّي، فَدَحَا السَّيْلُ فِيهِ بِالْبَطْحَاءِ حَتَّى دَفَنَ ذَلِكَ الْمَكَانَ الَّذِي كَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي فِيهِ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ராவுக்காக (மக்கா செல்லும்போது) ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்தில் உள்ள கருவேல மரமொன்றுக்குக் கீழே ‘துல்ஹுலைஃபா’ பள்ளிவாசல் (இன்று) அமைந்துள்ள இடத்தில் இறங்கி இளைப்பாறுவார்கள். தமது (‘விடைபெறும்’) ஹஜ்ஜுக்காகச் சென்றபோதும் (இங்கு) இறங்கி இளைப்பாறினார்கள். அறப்போரோ அல்லது ஹஜ்ஜோ அல்லது உம்ராவோ செய்துவிட்டு அந்தப் பாதையில் திரும்பிவ(ர நேர்)ந்தால் ‘பத்னுல் வாதீ’ (அகீக்) பள்ளத்தாக்கு வழியாக இறங்குவார்கள். ‘பத்னுல் வாதீ’ பள்ளத் தாக்கைத் தாண்டியதும் அதன் கிழக்குக் கரையிலுள்ள விசாலமான ஓடையில் தமது ஒட்டகத்தைப் படுக்கவைத்து அதிகாலை யாகும்வரை ஓய்வெடுப்பார்கள். அந்த இடம், கற்களாலான இந்தப் பள்ளிவாச-ன் அருகிலுமில்லை; பள்ளி வாசல் அமைந்துள்ள மேட்டிலுமில்லை. அங்கு பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அதன் அருகில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவார்கள். அதன் நடுவே மணற்குவியல் இருந்தது. அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) விசாலமான அந்த ஓடையில் இருந்த அந்த இடத்தில் வெள்ளம் புகுந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதுவந்த அந்த இடத்தைப் புதையுறச் செய்துவிட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 485 — Sahih al Bukhari 8:132
وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى حَيْثُ الْمَسْجِدُ الصَّغِيرُ الَّذِي دُونَ الْمَسْجِدِ الَّذِي بِشَرَفِ الرَّوْحَاءِ، وَقَدْ كَانَ عَبْدُ اللَّهِ يَعْلَمُ الْمَكَانَ الَّذِي كَانَ صَلَّى فِيهِ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ ثَمَّ عَنْ يَمِينِكَ حِينَ تَقُومُ فِي الْمَسْجِدِ تُصَلِّي، وَذَلِكَ الْمَسْجِدُ عَلَى حَافَةِ الطَّرِيقِ الْيُمْنَى، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ، بَيْنَهُ وَبَيْنَ الْمَسْجِدِ الأَكْبَرِ رَمْيَةٌ بِحَجَرٍ أَوْ نَحْوُ ذَلِكَ‏.‏
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் ‘ஷரஃபுர் ரவ்ஹா’ எனும் சிற்றூரில் உள்ள (பெரிய) பள்ளி வாசலுக்கு அருகில் இருக்கும் சிறிய பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தில் தொழுதிருக்கிறார்கள் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுத அந்த இடத்தின் அடையாளத்தைப் பற்றிக் கூறுகையில், “(நீ மதினாவி-ருந்து) மக்கா செல்லும் வழியில் பாதையின் வலப் பக்கம் அமைந்த பள்ளிவாசலில் (கிப்லா நோக்கி) நீ தொழுதுகொண்டிருக்கும்போது அந்த இடம் உனது வலப் பக்கத்தில் இருக்கும். (நபி (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடத்திற்கும் அந்தப் பெரிய பள்ளிவாசலுக்கும் இடையே கல்லெறியும் தூரம்தான் உள்ளது” என்றோ, அல்லது அதைப் போன்ற வேறொரு வார்த்தையோ குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 486 — Sahih al Bukhari 8:133
وَأَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُصَلِّي إِلَى الْعِرْقِ الَّذِي عِنْدَ مُنْصَرَفِ الرَّوْحَاءِ، وَذَلِكَ الْعِرْقُ انْتِهَاءُ طَرَفِهِ عَلَى حَافَةِ الطَّرِيقِ، دُونَ الْمَسْجِدِ الَّذِي بَيْنَهُ وَبَيْنَ الْمُنْصَرَفِ، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ‏.‏ وَقَدِ ابْتُنِيَ ثَمَّ مَسْجِدٌ، فَلَمْ يَكُنْ عَبْدُ اللَّهِ يُصَلِّي فِي ذَلِكَ الْمَسْجِدِ، كَانَ يَتْرُكُهُ عَنْ يَسَارِهِ وَوَرَاءَهُ، وَيُصَلِّي أَمَامَهُ إِلَى الْعِرْقِ نَفْسِهِ، وَكَانَ عَبْدُ اللَّهِ يَرُوحُ مِنَ الرَّوْحَاءِ، فَلاَ يُصَلِّي الظُّهْرَ حَتَّى يَأْتِيَ ذَلِكَ الْمَكَانَ فَيُصَلِّي فِيهِ الظُّهْرَ، وَإِذَا أَقْبَلَ مِنْ مَكَّةَ فَإِنْ مَرَّ بِهِ قَبْلَ الصُّبْحِ بِسَاعَةٍ أَوْ مِنْ آخِرِ السَّحَرِ عَرَّسَ حَتَّى يُصَلِّيَ بِهَا الصُّبْحَ‏.‏
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘இர்க்’ (‘இர்க்குல் ழப்யா’ எனும் பள்ளத்தாக்கு அமைந்துள்ள) பகுதியில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவார்கள். அந்த ‘இர்க்’ பள்ளத் தாக்கின் எல்லை நீ (மதீனாவி-ருந்து) மக்கா செல்லும் வழியில், ‘அர்ரவ்ஹா’ கிராமத்தின் எல்லைக்கும் அங்குள்ள பள்ளிவாசலுக்கும் மத்தியில் அமைந் துள்ள சாலையில் முடிவடைகிறது. (அந்த ‘இர்க்’ பள்ளத்தாக்கில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுதார்கள்.) அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பள்ளிவாச-ல் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுவதில்லை. தமது இடப் புறத்தில் தமக்குப் பின்னால் அந்தப் பள்ளிவாசல் இருக்கும் விதத்தில் அந்தப் பள்ளிவாசலைவிட (சற்று) முன்னால் நின்றுகொண்டு அந்த ‘இர்க்’ பள்ளத்தாக்கை நோக்கியவாறு அவர்கள் தொழுவார்கள். ‘அர்ரவ்ஹா’ கிராமத்தி-ருந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மக்காவுக்குப்) புறப்பட்டுச் செல்லும்போது (‘இர்க்’ எனும்) அந்த இடத்தைச் சென்றடையும்முன் அவர்கள் ‘லுஹ்ர்’ தொழுகையைத் தொழமாட்டார்கள். (‘இர்க்’ வந்ததும்) அங்குதான் லுஹ்ர் தொழுவார்கள். மக்காவி-ருந்து (மதீனாவுக்குத்) திரும்பி வரும்போது சுப்ஹு நேரத்திற்கு சற்று முன்னர் அல்லது சஹர் நேரத்தின் இறுதிப் பகுதியில் அந்த (‘இர்க்’ எனும்) இடத்தைக் கடக்க நேரிட்டால், அங்கேயே சற்று நேரம் ஓய்வெடுப்பார்கள். (நேரம் வந்ததும்) அந்த இடத்தில் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 487 — Sahih al Bukhari 8:134
وَأَنَّ عَبْدَ اللَّهِ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ تَحْتَ سَرْحَةٍ ضَخْمَةٍ دُونَ الرُّوَيْثَةِ عَنْ يَمِينِ الطَّرِيقِ، وَوِجَاهَ الطَّرِيقِ فِي مَكَانٍ بَطْحٍ سَهْلٍ، حَتَّى يُفْضِيَ مِنْ أَكَمَةٍ دُوَيْنَ بَرِيدِ الرُّوَيْثَةِ بِمِيلَيْنِ، وَقَدِ انْكَسَرَ أَعْلاَهَا، فَانْثَنَى فِي جَوْفِهَا، وَهِيَ قَائِمَةٌ عَلَى سَاقٍ، وَفِي سَاقِهَا كُثُبٌ كَثِيرَةٌ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மதீனாவி-ருந்து மக்கா செல்லும்) சாலையின் எதிர்த் திசையில் வலப் புறம் அமைந்துள்ள ‘ருவைஸா’ எனும் சிற்றூருக்குச் சற்று அருகில் உள்ள ஒரு பெரிய மரத்தின்கீழ் இறங்கித் தங்குவார்கள். அந்த இடம் விசாலமானதாகவும் பள்ளமானதாகவும் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தங்கிய அந்த இடம் அவ்வூரி-ருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. அங்கிருந்த மேட்டுப் பகுதியிலிருந்தே நபியவர்கள் புறப்படுவார்கள். அந்த மரத்தின் மேற் கிளைகள் முறிந்து அதன் மையப் பகுதிக்குள் கவிழ்ந்து கிடந்தன. அதன் அடிமரம் நின்றுகொண்டிருந்தது, அந்த அடி மரத்தில் அதிகமான மணல் குவிந்திருந்தது. இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 488 — Sahih al Bukhari 8:135
وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي طَرَفِ تَلْعَةٍ مِنْ وَرَاءِ الْعَرْجِ وَأَنْتَ ذَاهِبٌ إِلَى هَضْبَةٍ عِنْدَ ذَلِكَ الْمَسْجِدِ قَبْرَانِ أَوْ ثَلاَثَةٌ، عَلَى الْقُبُورِ رَضْمٌ مِنْ حِجَارَةٍ عَنْ يَمِينِ الطَّرِيقِ، عِنْدَ سَلِمَاتِ الطَّرِيقِ، بَيْنَ أُولَئِكَ السَّلِمَاتِ كَانَ عَبْدُ اللَّهِ يَرُوحُ مِنَ الْعَرْجِ بَعْدَ أَنْ تَمِيلَ الشَّمْسُ بِالْهَاجِرَةِ، فَيُصَلِّي الظُّهْرَ فِي ذَلِكَ الْمَسْجِدِ‏.‏
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நீ (மதீனாவி-ருந்து) ‘ஹள்பா’ எனும் மலைக்குச் செல்லும் வழியில் ‘அர்ஜ்’ எனும் சிற்றூருக்குப் பின்புறத்திலுள்ள (மேலிருந்து பாயும்) நீரோடையின் ஓரத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அந்தத் தொழுமிடத்திற்கு அருகில் இரண்டோ மூன்றோ மண்ணறைகள் (கப்று) இருந்தன. அவற்றின்மேல் கற்பாறைகள் இருந்தன. அந்தப் பள்ளிவாசல் சாலையின் வலப் புறம் அமைந்திருந்தது. அந்தச் சாலையின் ஓரங்களில் மரங்கள் இருந்தன” என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அந்த மரங்களுக்கு நடுவே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நண்பகலில் சூரியன் உச்சி சாய்ந்ததும் ‘அர்ஜ்’ எனும் சிற்றூரிலிருந்து புறப்பட்டு அந்தப் பள்ளிவாசலில் லுஹ்ர் தொழுவார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.