حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ يَعْلَى بْنِ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأَمْرِ مِنْكُمْ}. قَالَ نَزَلَتْ فِي عَبْدِ اللَّهِ بْنِ حُذَافَةَ بْنِ قَيْسِ بْنِ عَدِيٍّ، إِذْ بَعَثَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَرِيَّةٍ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்” எனும் (4:59ஆவது) வசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா பின் கைஸ் பின் அதீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது இறங்கியது.16 அத்தியாயம் :
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு “அல்ஹர்ரா' எனுமிடத்திலிருந்த கால்வாய் ஒன்றின் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஸுபைரே! (முதலில் உங்கள் தோப்புக்கு) நீங்கள் நீர் பாய்ச்சிக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருப்பவருக்குத் தண்ணீரை அனுப்புங்கள்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) அந்த அன்சாரி, “அல்லாஹ்வின் தூதரே! அவர் உங்கள் அத்தை (ஸஃபிய்யா பின்த் அப்தில் முத்தலிபின்) மகன் என்பதாலா (அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறீர்கள்)?” என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தில் சிவந்து)விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (ஸுபைர் (ரலி) அவர்களைப் பார்த்து), “ஸுபைரே! (உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு வரப்பு களைச் சென்றடையும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்துங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருக்கும் தோப்புக்காரருக்குத் தண்ணீரை விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள். அந்த அன்சாரித் தோழர் தம்மைக் கோபப்படுத்தியபோது நபி (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களின் உரிமையைத் தெளிவான தீர்ப்பின் மூலம் முழுமையாக வழங்கிவிட்டார்கள். அதற்குமுன் அவர்கள் இருவருக்குமே சகாயம் கிடைக்கும் வகையில் ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின், “(நபியே!) உம்முடைய இறைவன்மீது சத்தியமாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட (சண்டை சச்சரவு முதலிய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு, பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்புக் குறித்துத் தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும் அதற்கு இணங்கி நடக்காத வரை அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாகமாட்டார்கள்” எனும் (4:65ஆவது) வசனம் இது தொடர்பாக அருளப்பெற்றது என்றே நான் எண்ணுகிறேன்.17 அத்தியாயம் :
ஹதீஸ் 4586 — Sahih al Bukhari 65:108
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ نَبِيٍّ يَمْرَضُ إِلاَّ خُيِّرَ بَيْنَ الدُّنْيَا وَالآخِرَةِ ". وَكَانَ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهِ أَخَذَتْهُ بُحَّةٌ شَدِيدَةٌ فَسَمِعْتُهُ يَقُولُ {مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ} فَعَلِمْتُ أَنَّهُ خُيِّرَ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறுதியாக) நோயுற்றுவிடுகின்ற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலக வாழ்வு - மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்ததில்லை” என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் (உயிர்) கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின்போது அவர்களின் குரல் கடுமையாகக் (கட்டிக்கொண்டு) கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ் யார்மீது தன் அருட்கொடைகளைப் பொழிந்தானோ அந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், உத்தமர்களுடன் (என்னைச் சொர்க்கத்தில் சேர்த்தருள்)” என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். (இதிலிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டேன்.18 அத்தியாயம் :
இப்னு அபீமுளைக்கா (அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “எந்த உத்தியையும் கையாள முடியாமல், எந்த வழியும் தெரியாமல் பலவீனமான நிலையில் இருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரைத் தவிர” எனும் (4:98ஆவது) இறைவசனத்தை ஓதிவிட்டு, “(ஹிஜ்ரத் செய்ய இயலாததால்) அல்லாஹ் மன்னிப்பளித்த (பலவீனமான)வர்களில் நானும் என் தாயாரும் இருந்தோம்” என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (4:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹஸிரத்' (மனம் ஒப்பாது) எனும் சொல்லுக்கு, “(அவர்களின் உள்ளங்கள் இடம் கொடுக்காமல்) குறுகிக்கொண்டன' என்பது பொருள். (4:135ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தல்வூ' (தவறாகச் சாட்சியம் கூறினால்) எனும் சொல்லுக்கு, “நீங்கள் (உண்மைக்குப் புறம்பாகச்) சாட்சியம் சொல்ல நாக்கைச் சுழற்றினால்” என்பது பொருள். மற்றவர்கள் கூறுகின்றனர்: (4:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முராஃகம்' எனும் சொல்லுக்கு “புலம்பெயரும் இடம்' (தஞ்சம் புகுமிடம்) என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல்லான) “ராஃகம்த்து' எனும் சொல்லுக்கு, “நான் என் சமுதாயத்தைத் துறந்துவிட்டேன்” என்பது பொருள். (4:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மவ்கூத்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட (கடமை)' என்பது பொருள். அத்தியாயம் :
ஹதீஸ் 4589 — Sahih al Bukhari 65:111
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، وَعَبْدُ الرَّحْمَنِ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِت ٍ ـ رضى الله عنه ـ {فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ} رَجَعَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أُحُدٍ، وَكَانَ النَّاسُ فِيهِمْ فِرْقَتَيْنِ فَرِيقٌ يَقُولُ اقْتُلْهُمْ. وَفَرِيقٌ يَقُولُ لاَ فَنَزَلَتْ {فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِئَتَيْنِ} وَقَالَ " إِنَّهَا طَيْبَةُ تَنْفِي الْخَبَثَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الْفِضَّةِ ".
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் 4:88ஆவது இறைவசனம் குறித்துக் கூறியதாவது: (உஹுத் போருக்காக) நபி (ஸல்) அவர்களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்துவிட்டனர். இவர்கள் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டு) மக்கள் இரு பிரிவினராக ஆகிவிட்டனர். ஒரு பிரிவினர், “(நயவஞ்சகர்களாகிய) அவர்களைக் கொன்றுவிடுங்கள் (அல்லாஹ்வின் தூதரே!)” என்று கூறினர். மற்றொரு பிரிவினர், “(வெளிப்படையில் முஸ்லிம்களாகிய அவர்களைக் கொல்ல) வேண்டாம்” என்று கூறினர். அப்போதுதான், “உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகிவிட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக்கொண்ட (தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்துவிட்டான்” எனும் (4:88ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. மேலும், நபி (ஸல்) அவர்கள், “மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்கிவிடுவதைப் போல் அது தீமையை அகற்றிவிடும்” என்றுசொன்னார்கள்.20 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால் அதை அவர்கள் பரப்பிவிடுகிறார்கள். ஆனால், அதைத் தூதரிடமும் அவர்களில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார் களாயின், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அ(ச்செய்தியின் உண்மை நிலை)தனை நன்கு அறிந்திருப்பார்கள் (எனும் 4:83ஆவது வசனத்தொடர்). (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அஃதாஊ' எனும் சொல்லுக்கு “பரப்பிவிடுவார்கள்' என்பது பொருள். “யஸ்தன்பித்தூன' எனும் சொல்லுக்கு “ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள்' என்பது பொருள். (4:86ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “ஹசீப்' எனும் சொல்லுக்கு “போதுமானவன்' என்பது பொருள். (4:117ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இனாஸ்' எனும் சொல் கல், மண் போன்ற உயிரற்ற பொருட்களைக் குறிக்கும். “மரீத்' எனும் சொல்லுக்கு “(தீமையில்) பிடிவாதமாக இருப்பவன்' என்பது பொருள். (4:119ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபலயுபத்திகுன்ன' எனும் சொற்றொடருக்கு “அவர்கள் (தம் கால்நடைகளின் காதுகளைக்) கிழித்துத் துண்டிப்பார்கள்” என்பது பொருள். (4:122ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கீல்' எனும் பதமும் “கவ்ல்' எனும் பதமும் (பேச்சு, சொல் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும். (4:155ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தபஅ' எனும் சொல்லின் செயப்பாட்டு வினைச்சொல்லான) “துபிஅ' எனும் சொல்லுக்கு “முத்திரையிடப்பட்டது' என்பது பொருள். அத்தியாயம் :
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இது (4:93ஆவது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்து விளக்கம் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், “ஓர் இறைநம்பிக்கை யாளரை வேண்டுமென்றே கொலை செய்கின்றவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்” எனும் இந்த (4:93ஆவது) வசனம் அருளப்பெற்றது. இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் காலாவதியாக்கவில்லை” என்று கூறினார்கள்.21 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 4:94ஆவது வசனம் குறித்துக் கூறியதாவது: ஒரு மனிதர் தமது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக்கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப் பிரிவில் வந்த) முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்கள்மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அவரது ஆட்டுமந்தையையும் எடுத்துக்கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான். இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறைவழியில் (அறப்போருக் காக) புறப்படுவீர்களாயின் (பகைவரையும் நண்பரையும்) தெளிவாகப் பிரித்தறிந்துகொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறைநம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு முகமன் (சலாம்) கூறியவரிடம், நீர் இறைநம்பிக்கையாளர் அல்லர் என்று சொல்லாதீர்கள். (4:94) (இங்கே “உலகப் பொருள்' என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.22 அறிவிப்பாளர் அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (இந்த வசனத்தில் “சலாம்' எனும் வார்த்தையை) சலாம் என்றே ஓதினார்கள். (சலம் என்று உச்சரிக்கவில்லை.) அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மர்வான் பின் அல்ஹகமைப் பள்ளிவாசலில் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்: “இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆவது) வசனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டிக்கொண்டிருக்கும்போது, இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக, என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர் புரிந் திருப்பேன்” என்று சொன்னார்கள். அவர் கண்பார்வையற்றவராக இருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்கள்மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். ஆகவே, என் தொடை நசுங்கிப்போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களின் தொடை என்மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது. பிறகு அந்நிலை அகன்றது. அப்போதுதான் அல்லாஹ் “இடையூறு உள்ளவர்கள் தவிர' எனும் சொற்றொடரை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.23 அத்தியாயம் :
ஹதீஸ் 4593 — Sahih al Bukhari 65:115
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْدًا فَكَتَبَهَا، فَجَاءَ ابْنُ أُمِّ مَكْتُومٍ فَشَكَا ضَرَارَتَهُ، فَأَنْزَلَ اللَّهُ {غَيْرَ أُولِي الضَّرَرِ}
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: “இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப் போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களை அழைக்க, அவர் (வந்து) அதை எழுதினார். அப்போது இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் வந்து தமது ஊனத்தைப் பற்றி முறையிட்டார். அப்போதுதான் அல்லாஹ், “இடையூறு உள்ளவர்கள் தவிர' எனும் சொற்றொடரை அருளினான்.24 அத்தியாயம் :