حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْفَخْرُ وَالْخُيَلاَءُ فِي الْفَدَّادِينَ أَهْلِ الْوَبَرِ، وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ، وَالإِيمَانُ يَمَانٍ، وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ ". سُمِّيَتِ الْيَمَنَ لأَنَّهَا عَنْ يَمِينِ الْكَعْبَةِ، وَالشَّأْمَ عَنْ يَسَارِ الْكَعْبَةِ، وَالْمَشْأَمَةُ الْمَيْسَرَةُ، وَالْيَدُ الْيُسْرَى الشُّؤْمَى، وَالْجَانِبُ الأَيْسَرُ الأَشْأَمُ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெருமையும் கர்வமும் கிராமவாசிகளான நாடோடிகளிடையே காணப்படும். ஆடு மேய்ப்பவர்களிடையே அமைதியும் பணிவும் காணப்படும். இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். மதி நுட்பமும் யமன் நாட்டைச் சேர்ந்த தாகும்.10 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: “யமன்' நாடு கஅபாவுக்கு வலப் பக்கம் அமைந்திருப்பதால்தான் அதற்கு “யமன்' என்று பெயரிடப்பட்டது. “ஷாம்' (சிரியா) நாடு கஅபாவின் இடப் பக்கம் அமைந் துள்ளது. “மஷ்அமா' என்பதற்கு “மய்ஸரா' (இடது) என்பது பொருள். இடக் கரத்திற்கு “ஷுஃமா' என்பர். இடப் பக்கத்திற்கு “அல்அஷ்அம்' என்பர்.11 அத்தியாயம் :
முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்களிடம் குறைஷியரின் ஒரு தூதுக் குழுவில் ஒருவராக நான் வருகை தந்திருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், “கஹ்த்தான் குலத்திலிருந்து மன்னர் ஒருவர் தோன்றுவார்” என்று அறிவிப்பதாகச் செய்தி வந்தது.13 அப்போது முஆவியா (ரலி) அவர்கள் கோபமடைந்து எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டு பின்னர், “இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகிறேன்: உங்களில் சிலர், அல்லாஹ் வின் வேதத்தில் இல்லாத, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக் கப்படாத செய்திகளைப் பேசுவதாக எனக் குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறியாதவர்கள் ஆவர். தீய வழியில் செலுத்துகின்ற வெற்று நம்பிக்கைகளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடம்தான் இருக்கும். அவர்களுடன் (அது தொடர்பாகப்) பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டிவரும்வரை இந்நிலை நீடிக்கும்' என்று கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று சொன்னார்கள்.14 அத்தியாயம் :
ஹதீஸ் 3501 — Sahih al Bukhari 61:11
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ سَمِعْتُ أَبِي، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لا يَزَالُ هَذَا الأَمْرُ فِي قُرَيْشٍ، مَا بَقِيَ مِنْهُمُ اثْنَانِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும்வரை. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் நடந்து (நபி (ஸல்) அவர்களிடம் நீதி பெறச்) சென்றோம். உஸ்மான் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! முத்தலிபின் மக்களுக்கு நீங்கள் கொடுத்தீர்கள். எங்களை விட்டுவிட்டீர்களே! நாங்களும் அவர்களும் உங்களுக்கு ஒரே விதமான (உறவு) நிலையில்தானே இருக்கின்றோம்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “பனூ ஹாஷிமும் (ஹாஷிம் கிளையாரும்) பனுல் முத்தலிபும்(முத்தலிப் கிளையாரும்) ஒருவர்தான் (வெவ்வேறானவர்கள் அல்லர்)” என்று பதிலளித்தார்கள்.15 அத்தியாயம் :
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த சிலருடன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், பனூ ஸுஹ்ரா கிளையினருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த உறவு முறையின் காரணத்தால் அவர்களிடம் மிகவும் மென்மையாக நடந்துகொள்வார்கள்.16 அத்தியாயம் :
ஹதீஸ் 3504 — Sahih al Bukhari 61:14
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدٍ، ح قَالَ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِيهِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ الأَعْرَجُ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قُرَيْشٌ وَالأَنْصَارُ وَجُهَيْنَةُ وَمُزَيْنَةُ وَأَسْلَمُ وَأَشْجَعُ وَغِفَارُ مَوَالِيَّ لَيْسَ لَهُمْ مَوْلًى، دُونَ اللَّهِ وَرَسُولِهِ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குறைஷிகளும் அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை.17 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களுக்கு, நபி (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோருக்கு அடுத்தபடியாக, (தம் சகோதரி அஸ்மாவின் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) மீது எல்லா மனிதர்களைவிடவும் அதிகமான பிரியம் இருந்தது. மக்களிலேயே அதிகமாக ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நன்மை புரியக்கூடியவராக அப்துல்லாஹ் (ரலி) இருந்தார். ஆயிஷா (ரலி) அவர்கள், தம்மிடம் வருகின்ற அல்லாஹ்வின் கொடை எதையும் தம்மிடமே வைத்துக் கொள்ளாமல் தர்மம் செய்துவிடுவது வழக்கம். ஆகவே, அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், “ஆயிஷா (ரலி) அவர்களின் கரத்தை (தர்மம் செய்ய விடாமல்) பிடித்துக்கொள்வது அவசியம்” என்று கூறினார்கள்.18 அதனால் அவர்கள் (கோபமுற்று), “(தர்மம் செய்ய விடாமல்) என் கையைப் பிடித்துக்கொள்வதா? (நான் இனி அப்துல்லாஹ்வுடன் பேச மாட்டேன்.) அவருடன் (என் சபதத்தை மீறி) நான் பேசினால் (சத்தியத்தை முறித்த குற்றத்திற்காக) நான் பரிகாரம் செய்ய நேரிடும்” என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், (ஆயிஷா (ரலி) அவர்களின் கோபத்தைத் தணித்து அவர்களைத் தம்முடன் பேசச் செய்வதற்காக) (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் தமக்காகப் பரிந்துரை செய்யும்படி குறைஷியர் சிலரையும் குறிப்பாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தாய்மாமன்மார்களையும் கேட்டுக்கொண்டார்கள். (அவர்கள் பரிந்துரை செய்தும்) ஆயிஷா (ரலி) அவர்கள் பேச மறுத்துவிட்டார்கள். ஆகவே, அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்து யகூஸ் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா உள்ளிட்ட நபி (ஸல்) அவர்களின் தாய் மாமன்களான பனூ ஸுஹ்ரா கிளையினர் அப்துல்லாஹ்விடம், “நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டுக்கொண்டி ருக்கும்போதே நீங்கள் திரையைக் கடந்து (அனுமதி பெறாமலே) சென்றுவிடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் செய்தார் கள். பிறகு (ஆயிஷா (ரலி) அவர்களும் ஒப்புக்கொண்டு பேசிவிட்டார்கள். அவர் களின் சத்தியம் முறிந்துபோனதற்குப் பரிகாரமாக) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பத்து அடிமைகளை (விடுதலை செய்வதற்காக) அனுப்பிவைத்தார்கள். அவர்களை ஆயிஷா (ரலி) அவர்கள் விடுதலை செய்துவிட்டார்கள். பிறகு (இது போதுமான பரிகாரம் ஆகாதோ என்ற எண்ணத்தில்) தொடர்ந்து நாற்பது எண்ணிக்கையை அடையும்வரை அடிமைகளை விடுதலை செய்துகொண்டேயிருந்தார்கள். இறுதியில், நான் (அப்துல்லாஹ்வுடன் பேசமாட்டேன் என்று) சத்தியம் செய்தபோதே, “என் சத்தியம் முறிந்துபோனால் அதற்குக் குறிப்பிட்ட பரிகாரத்தைச் செய்வேன்' என்று முடிவு செய்துவிட்டிருந்தால் அதை மட்டும் செய்து பொறுப்பிóருந்து விடுபட்டிருப்பேன். (“இன்ன பரிகாரம் என்று குறிப்பிட்டு முடிவு செய்யாததால் இவ்வளவு செய்தும் இந்த அளவு பரிகாரம் நிவர்த்தியானதோ இல்லையோ என்ற சந்தேகம் இன்னும் என்னை வாட்டுகிறது”) என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை ஹஃப்ஸாவிடமிருந்து குர்ஆன் பதிவுகளை வாங்கிவரச் செய்து) ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), சயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரை அழைத்து, (அவற்றைப் பிரதியெடுக்கப் பணித்தார்கள்.) அவர்கள் ஏடுகளில் அவற்றைப் பிரதியெடுத் தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்சாரி யான ஸைத் பின் ஸாபித் (ரலி) தவிர உள்ள) குஹைஷியரின் மூன்று பேர் கொண்ட அந்தக் குழுவிடம், “நீங்கள் மூவரும் ஸைத் பின் ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஒரு (எழுத்து இலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் மொழி வழக்கி லேயே அதை எழுதுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்கில் தான் அருளப்பெற்றது” என்று சொன்னார் கள். அக்குழுவினரும் அவ்வாறே செய்தார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3507 — Sahih al Bukhari 61:17
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، حَدَّثَنَا سَلَمَةُ ـ رضى الله عنه ـ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى قَوْمٍ مِنْ أَسْلَمَ، يَتَنَاضَلُونَ بِالسُّوقِ، فَقَالَ " ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ، فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا، وَأَنَا مَعَ بَنِي فُلاَنٍ ". لأَحَدِ الْفَرِيقَيْنِ، فَأَمْسَكُوا بِأَيْدِيهِمْ فَقَالَ " مَا لَهُمْ ". قَالُوا وَكَيْفَ نَرْمِي وَأَنْتَ مَعَ بَنِي فُلاَنٍ. قَالَ " ارْمُوا وَأَنَا مَعَكُمْ كُلِّكُمْ ".
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அஸ்லம் கூட்டத்தார் கடைவீதியில் அம்பெய்து (விளையாடிக்)கொண்டிருக்கை யில் (அவ்வழியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டு வந்தார்கள். அதைக் கண்டதும், “இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங் கள். ஏனெனில், உங்கள் தந்தை(யான இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்ப வராக (வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவராக) இருந்தார்கள். “நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று இரு தரப்பாரில் ஒரு தரப்பாரைக் குறிப்பிட்டுக் கூறினார்கள். உடனே மற்றொரு தரப்பார் (விளையாட்டைத் தொடராமல்) நிறுத்திவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவர்களுக்கென்ன நேர்ந்தது?” என்று கேட்க, அவர்கள், “நீங்கள் இன்ன குலத்தாரோடு இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(தொடர்ந்து) அம்பெய்யுங்கள். நான் உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.20 அத்தியாயம் :
ஹதீஸ் 3508 — Sahih al Bukhari 61:18
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ يَعْمَرَ، أَنَّ أَبَا الأَسْوَدِ الدِّيلِيَّ، حَدَّثَهُ عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " لَيْسَ مِنْ رَجُلٍ ادَّعَى لِغَيْرِ أَبِيهِ وَهْوَ يَعْلَمُهُ إِلاَّ كَفَرَ، وَمَنِ ادَّعَى قَوْمًا لَيْسَ لَهُ فِيهِمْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம் தந்தை அல்லாத (ஒரு)வரை (அவர் தம் தந்தையல்ல என்று) விவரம் அறிந்துகொண்டே “அவர்தான் என் தந்தை” என்று கூறும் ஒரு மனிதர் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவராகி விடுகிறார். தமக்கு வமிசாவளித் தொடர்பு இல்லாத ஒரு குலத்தைக் குறித்து, தாம், அந்தக் குலத்தைச் சேர்ந்தவன்தான் என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்பவர், தம் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :