حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَا صَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَهْرًا كَامِلاً قَطُّ غَيْرَ رَمَضَانَ، وَيَصُومُ حَتَّى يَقُولَ الْقَائِلُ لاَ وَاللَّهِ لاَ يُفْطِرُ، وَيُفْطِرُ حَتَّى يَقُولَ الْقَائِلُ لاَ وَاللَّهِ لاَ يَصُومُ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதத்திலும் முழுமை யாக நோன்பு நோற்கமாட்டார்கள். (ரமளான் அல்லாத மாதங்களில்) ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் நோன்பை விடவே மாட்டார்கள்!” என்று ஒருவர் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள். ‘‘அல்லாஹ்வின் மீதாணை யாக! இனிமேல் நோன்பு நோற்கவே மாட்டார்கள்” என்று ஒருவர் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1972 — Sahih al Bukhari 30:79
حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُفْطِرُ مِنَ الشَّهْرِ، حَتَّى نَظُنَّ أَنْ لاَ يَصُومَ مِنْهُ، وَيَصُومُ حَتَّى نَظُنَّ أَنْ لاَ يُفْطِرَ مِنْهُ شَيْئًا، وَكَانَ لاَ تَشَاءُ تَرَاهُ مِنَ اللَّيْلِ مُصَلِّيًا إِلاَّ رَأَيْتَهُ، وَلاَ نَائِمًا إِلاَّ رَأَيْتَهُ. وَقَالَ سُلَيْمَانُ عَنْ حُمَيْدٍ أَنَّهُ سَأَلَ أَنَسًا فِي الصَّوْمِ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மாதம் நோன்பு நோற்கமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்குச் சில மாதங்களில் அவர்கள் நோன்பை விட்டு விடுவார்கள்; அறவே இந்த மாதம் நோன்பை அவர்கள் அறவே விடமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சில மாதங்களில்) நோன்பு நோற்பார்கள். அவர்களை இரவில் தொழும் நிலையில் நீர் காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய்; அவர்களை (இரவில்) உறங்கக்கூடியவர்களாக நீர் காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய். நோன்பு தொடர்பாக இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 1973 — Sahih al Bukhari 30:80
حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، أَخْبَرَنَا حُمَيْدٌ، قَالَ سَأَلْتُ أَنَسًا رضى الله عنه عَنْ صِيَامِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَا كُنْتُ أُحِبُّ أَنْ أَرَاهُ مِنَ الشَّهْرِ صَائِمًا إِلاَّ رَأَيْتُهُ وَلاَ مُفْطِرًا إِلاَّ رَأَيْتُهُ، وَلاَ مِنَ اللَّيْلِ قَائِمًا إِلاَّ رَأَيْتُهُ، وَلاَ نَائِمًا إِلاَّ رَأَيْتُهُ، وَلاَ مَسِسْتُ خَزَّةً وَلاَ حَرِيرَةً أَلْيَنَ مِنْ كَفِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلاَ شَمِمْتُ مِسْكَةً وَلاَ عَبِيرَةً أَطْيَبَ رَائِحَةً مِنْ رَائِحَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களை ஒரு மாதத்தில் நோன்பாளியாக நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே அவர்களை நான் பார்ப்பேன். அவர்கள் நோன்பை விட்ட நிலையில் நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; இரவில் தொழக்கூடியவர்களாக அவர்களைப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; அவர்களைத் தூங்குபவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்.40 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையைவிட மிருதுவான எந்தப் பட்டையும் நான் தொட்டதில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நறு மணத்தைவிட நல்ல கஸ்தூரியையோ அம்பரையோ நான் முகர்ந்ததுமில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1974 — Sahih al Bukhari 30:81
حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا هَارُونُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ قَالَ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ الْحَدِيثَ يَعْنِي " إِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا ". فَقُلْتُ وَمَا صَوْمُ دَاوُدَ قَالَ " نِصْفُ الدَّهْرِ ".
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘உம்முடைய விருந்தின ருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு இருக்கின்றது; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு இருக்கின்றது” என்றார்கள். ‘‘தாவூத் (அலை) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வருடத்தில் பாதி நாட்கள்” என் றார்கள்.41 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘அப்துல்லாஹ், நீர் பகலெல் லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வழிபடுவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இனி) அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள்) விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! ஏனெனில், உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய விருந்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமான தாகும். ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு. (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்.” என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது. நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்” என்றார்கள். ‘‘இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பு எது?” என்று நான் கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாட்கள்’ என்றார்கள். ‘‘அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்தபின் ‘நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய் விட்டேனே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்” என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.42 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வழிபடுவேன்” என்று நான் கூறிய செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. (இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது) ‘‘என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவாகள், ‘‘இது உம்மால் முடியாது. (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக; (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக; (சிறிது நேரம்) உறங்குவீராக! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்பலன் அளிக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்” என்றார்கள். நான், ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். ‘‘அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டுவிடுவீராக!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு, ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!, இதுதான் இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்” என்றார்கள். நான் ‘‘என்னால் இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை” என்றார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1977 — Sahih al Bukhari 30:84
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، سَمِعْتُ عَطَاءً، أَنَّ أَبَا الْعَبَّاسِ الشَّاعِرَ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ بَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَنِّي أَسْرُدُ الصَّوْمَ وَأُصَلِّي اللَّيْلَ، فَإِمَّا أَرْسَلَ إِلَىَّ، وَإِمَّا لَقِيتُهُ، فَقَالَ " أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ وَلاَ تُفْطِرُ، وَتُصَلِّي وَلاَ تَنَامُ، فَصُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، فَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَظًّا، وَإِنَّ لِنَفْسِكَ وَأَهْلِكَ عَلَيْكَ حَظًّا ". قَالَ إِنِّي لأَقْوَى لِذَلِكَ. قَالَ " فَصُمْ صِيَامَ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ ". قَالَ وَكَيْفَ قَالَ " كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَلاَ يَفِرُّ إِذَا لاَقَى ". قَالَ مَنْ لِي بِهَذِهِ يَا نَبِيَّ اللَّهِ قَالَ عَطَاءٌ لاَ أَدْرِي كَيْفَ ذَكَرَ صِيَامَ الأَبَدِ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ صَامَ مَنْ صَامَ الأَبَدَ ". مَرَّتَيْنِ.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் தொடர்ந்து நோன்பு நோற்பதாக வும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குத் செய்தி எட்டியது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர், விடாமல் நோன்பு நோற்பதாகவும் உறங்காமல் தொழுவதாகவும் எனக்குத் தகவல் கிடைத்துள்ளதே! எனவே, (சில நாள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்) நோன்பை விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்கு (நீர்) அளிக்கவேண்டிய பங்கு உண்டு; உம(து உடலு)க்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டிய பங்கும் உண்டு” என்று கூறினார்கள். நான் ‘‘இதற்கு எனக்குச் சக்தி உள்ளது” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக!” என்றார்கள். ‘‘அது எவ்வாறு?” என்று நான் கேட்டேன். ‘‘தாவூத் (அலை) அவர்கள் ஒருநாள் நோன்பு நோற்பார்கள்; ஒருநாள் விட்டுவிடுவார்கள்; மேலும், (போர் முனையில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கமாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்?” என்றேன். ‘‘காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன்; என்றாலும் ‘காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்’ என்று நபி (ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள் (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது)” என்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1978 — Sahih al Bukhari 30:85
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُغِيرَةَ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " صُمْ مِنَ الشَّهْرِ ثَلاَثَةَ أَيَّامٍ ". قَالَ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ. فَمَا زَالَ حَتَّى قَالَ " صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا " فَقَالَ " اقْرَإِ الْقُرْآنَ فِي شَهْرٍ ". قَالَ إِنِّي أُطِيقُ أَكْثَرَ. فَمَا زَالَ حَتَّى قَالَ فِي ثَلاَثٍ.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். ‘‘இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது” என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். முடிவில், ‘‘ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!” என்று கூறினார்கள். மேலும், ‘‘ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்றார்கள். ‘‘இதைவிட அதிகமாக (ஓத) எனக்குச் சக்தி உள்ளது” என்று நான் கூறிக்கொண்டே இருந்தேன். (நான் கேட்கக் கேட்க குறைத்துக்கொண்டே வந்து) முடிவில், ‘‘மூன்று நாட்களில் ஒரு தடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வழிபடுகிறீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே சொருகிவிடும்; உடல் நலிந்துவிடும். காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராகமாட்டார். (மாதம் தோறும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்” என்றார்கள். அதற்கு ‘‘நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள்; (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவுமாட்டார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அபுல்மலீஹ் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் உம்முடைய தந்தை (ஸைத் பின் அம்ர்லிரஹ்) அவர்களு டன் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) அறி வித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு பற்றித் தெரிவிக்கப் பட்டது. எனவே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக நான் ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல் தலையணையை எடுத்து வைத்தேன். அவர்கள் (அதில் அமராமல்) தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. அப்போது, ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக என்னால் நோன்பு நோற்க இயலும்)” என்றேன்; அவர்கள் ‘‘(மாதத்தில்) ஐந்து நாட்கள்” என்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே...!” என்றேன்; ‘‘ஒன்பது நாட்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே...! என்றேன்; ‘‘பதினொன்று நாட்கள்” என்றார்கள். பிறகு, ‘‘தாவூத் (அலை) அவர்களின் நோன்புக்குமேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை; அது வருடத்தின் பாதி நாட்களாகும். எனவே, ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பீராக!” என்றார்கள். அத்தியாயம் :