حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ.وَعَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ ـ قَالَ أَحَدُهُمَا يُنْصَبُ وَقَالَ الآخَرُ ـ يُرَى يَوْمَ الْقِيَامَةِ يُعْرَفُ بِهِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று உண்டு. இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் அறிவிக் கின்றனர். அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘‘நடப்படு கின்ற கொடி ஒன்று உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். மற்றொருவர், ‘‘அது மறுமை நாளில் காட்டப்படும். அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படு வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். அத்தியாயம் :
ஹதீஸ் 3188 — Sahih al Bukhari 58:29
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يُنْصَبُ لِغَدْرَتِهِ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொரு வனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்ச மிட்டு)க்(காட்டுவதற்)காக மறுமை நாளில் அது நடப்படும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, ‘‘இனி (மக்கா விலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். மேலும், மக்கா வெற்றியின்போது, ‘‘(மக்களே!) வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அல்லாஹ் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமான தாகவே இருக்கும். எனக்கு முன்னர் வாழ்ந்த யாருக்கும் இங்கு போர் புரிய அனுமதி தரப்படவில்லை. எனக்கும்கூட (மக்கா வெற்றியின்போது) பகலின் சிறிது நேரத்தில் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தைப் புனிதப் படுத்தியுள்ள காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமானதாகவே திகழும். அதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது. அங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. அங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இத்கிர்’ புல்லைத் தவிரவா? ஏனெனில், அது மக்களின் வீடுகளுக்கும் அவர்களின் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறதே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்) இத்கிரைத் தவிர” என்று பதிலளித்தார்கள்.42 அத்தியாயம் :