ஃகைலான் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) “அன்சார்' (உதவியாளர்கள்) எனும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டி ருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?” என்று கேட்டேன். அவர்கள், “அல்லாஹ்தான் எங்களுக்கு (“அன்சார்' என்று திருக்குர்ஆன் 9:100ஆம் வசனத்தில்) பெயர் சூட்டினான். (பஸ்ரா வில்) நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் (வந்து) சென்றுகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் அன்சாரிகளின் சிறப்புகளையும் அவர்களுடைய (தியாக) நிகழ்ச்சிகளையும் எங்களுக்கு எடுத்துரைப் பார்கள். என்னை அல்லது “அஸ்த்' குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை நோக்கி, “உன் குலத்தார் இன்னின்ன நாளில் இன்னின்னவாறு செய்தார்கள்” என்று சொல்வார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3777 — Sahih al Bukhari 63:2
حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ يَوْمُ بُعَاثَ يَوْمًا قَدَّمَهُ اللَّهُ لِرَسُولِهِ صلى الله عليه وسلم فَقَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدِ افْتَرَقَ مَلَؤُهُمْ، وَقُتِلَتْ سَرَوَاتُهُمْ، وَجُرِّحُوا، فَقَدَّمَهُ اللَّهُ لِرَسُولِهِ صلى الله عليه وسلم فِي دُخُولِهِمْ فِي الإِسْلاَمِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “புஆஸ்' போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன்கூட்டியே நிகழச்செய்த நாளாக அமைந்தது . (அந்தப் போரின் காரணத்தால்) மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும் அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் இருந்த நிலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) வந்தார்கள். ஆகவே, மக்கள் இஸ்லாத்தை ஏற்க (ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதற்காக) அல்லாஹ்தான், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சாதகமாக அந்த நாளை முன்கூட்டியே நிகழச்செய்தான்.2 அத்தியாயம் :
ஹதீஸ் 3778 — Sahih al Bukhari 63:3
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَتِ الأَنْصَارُ يَوْمَ فَتْحِ مَكَّةَ ـ وَأَعْطَى قُرَيْشًا ـ وَاللَّهِ إِنَّ هَذَا لَهُوَ الْعَجَبُ، إِنَّ سُيُوفَنَا تَقْطُرُ مِنْ دِمَاءِ قُرَيْشٍ، وَغَنَائِمُنَا تُرَدُّ عَلَيْهِمْ. فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَدَعَا الأَنْصَارَ قَالَ فَقَالَ " مَا الَّذِي بَلَغَنِي عَنْكُمْ ". وَكَانُوا لاَ يَكْذِبُونَ. فَقَالُوا هُوَ الَّذِي بَلَغَكَ. قَالَ " أَوَلاَ تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالْغَنَائِمِ إِلَى بُيُوتِهِمْ، وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى بُيُوتِكُمْ لَوْ سَلَكَتِ الأَنْصَارُ وَادِيًا أَوْ شِعْبًا، لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ أَوْ شِعْبَهُمْ ".
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) நபி (ஸல்) அவர்கள் (அன்சாரிகளுக்கு வழங்காமல், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்கா குறைஷியருக்குக் கொடுத்தபோது அன்சாரிகள், “அல்லாஹ்வின் மீதாணை யாக! உண்மையில், இது வியப்பாகத்தான் இருக்கிறது. நம்முடைய வாட்களில் குறைஷியரின் இரத்தம் சொட்டிக்கொண்டி ருக்க, நமக்குச் சேர வேண்டிய போர்ச் செல்வங்கள் அவர்களுக்கல்லவா திருப்பிக் கொடுக்கப்படுகின்றன?” என்று பேசிக்கொண்டார்கள்.3 அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டது நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை அவர்கள் அழைத்து, “உங்களைப் பற்றி எனக்கெட்டிய செய்தி என்ன?” என்று கேட்டார்கள். அவர்கள் (நபித்தோழர்கள்) பொய் சொல்லாதவர்களாய் இருந்தனர்- ஆகவே அவர்கள், “(உண்மையில் நாங்கள் பேசிக்கொண்டதும்) உங்களுக்கு எட்டியதேதான்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “மக்கள் போர்ச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுட னேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்துசென்றால் அவர்கள் செல்கின்ற பள்ளத்தாக்கிலோ கண வாயிலோதான் நானும் நடந்துசெல்வேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3779 — Sahih al Bukhari 63:4
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم " لَوْ أَنَّ الأَنْصَارَ سَلَكُوا وَادِيًا أَوْ شِعْبًا، لَسَلَكْتُ فِي وَادِي الأَنْصَارِ، وَلَوْلاَ الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ ". فَقَالَ أَبُو هُرَيْرَةَ مَا ظَلَمَ بِأَبِي وَأُمِّي، آوَوْهُ وَنَصَرُوهُ. أَوْ كَلِمَةً أُخْرَى.
அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்துசென்றால் அன்சாரிகள் நடந்துசெல்லும் பள்ளத் தாக்கில்தான் நானும் நடந்துசெல்வேன். ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் மிகச் சரியாகவே இப்படிக் கூறியுள்ளார்கள் (என்று கூறிவிட்டு) - என் தந்தையும் என் தாயும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- “(நபியவர்கள் இப்படிச் சொன்னதற்குக் காரணம்) அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களுக்குப் புகலிடம் அளித்து அவர்களுக்கு உதவி செய்தார்கள்' என்றோ... (இவ்விரு வாக்கியங்களுடன் சேர்த்து) வேறொரு வாக்கியத்தையோ சொன்னார்கள்.6 அத்தியாயம் :
இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி-என்னும் அன்சாரித் தோழர்) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள், “நான் அன்சாரிகளில் அதிகச் செல்வம் உடையவன். என் செல்வத்தை இரு பாதிகளாகப் பங்கிட்டு நான் (ஒரு பாதியை உங்களுக்குக் கொடுத்து)விடுகிறேன். எனக்கு இரு மனைவிமார்கள் உள்ளனர். அவ்விருவரில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்திருப்ப வளைப் பார்த்து என்னிடம் சொல்லுங்கள். நான் அவளை மணவிலக்குச் செய்து விடுகிறேன். அவளுடைய “இத்தா' காலம் முடிந்தபின் அவளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் உங்கள் செல்வத்திலும் அருள்வளத்தை வழங்கட்டும். உங்கள் கடைவீதி எங்கே?” என்று கேட்டார்கள். மக்கள் அவர்களுக்கு “பனூ கைனுகா' கடைவீதியைக் காட்டினார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அங்கு சென்று வியாபாரம் செய்து) தம்முடன் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்றுத்தான் திரும்பினார்கள். பிறகு அடுத்த நாள் காலையும் தொடர்ந்து சென்றார்கள். (இப்படியே தொடர்ந்து சென்று வியாபாரம் செய்து சம்பாதித்தார்கள்.) ஒருநாள் தம்மீது (நறுமணப் பொருள் தடவிக்கொண்டிருந்ததால்) மஞ்சள் அடையாளத்துடன் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை நோக்கி, “என்ன இது?” என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “நான் மணம் புரிந்துகொண்டேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு எவ்வளவு (மணக்கொடை) கொடுத்தீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம் அல்லது ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கம்” என்று பதிலளித்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம்' என்று சொன்னார்களா, “ஒரு பேரீச்சங் கொட்டை எடையளவு தங்கம்' என்று சொன்னார்களா என்பதில் அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.8 அத்தியாயம் :
ஹதீஸ் 3781 — Sahih al Bukhari 63:6
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ قَدِمَ عَلَيْنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، وَآخَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ، وَكَانَ كَثِيرَ الْمَالِ، فَقَالَ سَعْدٌ قَدْ عَلِمَتِ الأَنْصَارُ أَنِّي مِنْ أَكْثَرِهَا مَالاً، سَأَقْسِمُ مَالِي بَيْنِي وَبَيْنَكَ شَطْرَيْنِ، وَلِي امْرَأَتَانِ، فَانْظُرْ أَعْجَبَهُمَا إِلَيْكَ فَأُطَلِّقُهَا، حَتَّى إِذَا حَلَّتْ تَزَوَّجْتَهَا. فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ. فَلَمْ يَرْجِعْ يَوْمَئِذٍ حَتَّى أَفْضَلَ شَيْئًا مِنْ سَمْنٍ وَأَقِطٍ، فَلَمْ يَلْبَثْ إِلاَّ يَسِيرًا، حَتَّى جَاءَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ وَضَرٌ مِنْ صُفْرَةٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَهْيَمْ ". قَالَ تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ. فَقَالَ " مَا سُقْتَ فِيهَا ". قَالَ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ، فَقَالَ " أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ ".
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (புலம்பெயர்ந்து மதீனாவுக்கு) எங்களிடம் வந்தார்கள். அவர்களுக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள் - சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் அதிக செல்வமுடையவராக இருந்தார்கள் - சஅத் (ரலி) அவர்கள், “அன்சாரிகள், நான் அவர்களில் அதிகச் செல்வமுடையவன் என்று அறிந்திருக் கின்றனர். என் செல்வத்தை எனக்கும் உங்களுக்கும் இடையே இரு பாதிகளாகப் பங்கிட்டு (கொடுத்து)விடுவேன். எனக்கு இரு மனைவிகள் உள்ளனர். அவர்களில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்தவளைப் பாருங்கள். நான் அவளை மணவிலக்குச் செய்துவிடுகின்றேன். அவள் ஹலால் (இத்தா முடிந்து பிறரை மணந்துகொள்ளத் தகுதியுடையவள்) ஆனதும் அவளை நீங்கள் மணந்துகொள்ளுங்கள்” என்று (தம் முஹாஜிர் சகோதரரான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபிடம்) கூறினார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டார் விஷயத்தில் அருள்வளம் வழங்கட்டும்” என்று கூறி (கடைவீதி சென்று)விட்டார்கள். சிறிது நெய்யையும் பாலாடைக் கட்டியையும் இலாபமாகச் சம்பாதித்த பின்னரே அன்று திரும்பி வந்தார்கள். சிறிது காலம்தான் சென்றிருக் கும். அதற்குள் அவர்கள் தம்மீது (நறுமணப் பொருளின்) மஞ்சள் அடையாளம் தோய்ந்திருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன இது?” என்று கேட்க, “நான் அன்சாரிப் பெண் ஒருத்தியை மணந்துகொண்டேன்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு என்ன (மணக்கொடை) கொடுத்தீர்கள்?” என்று கேட்டதற்கு அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கம் அல்லது ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம்” என்று பதிலளித் தார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஒரேயோர் ஆட்டையேனும் (அறுத்து) மணவிருந்து (வலீமா) கொடுப்பீராக” என்று சொன்னார் கள்.9 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களிடம்) அன்சாரிகள், “எங்களுக்கும் (முஹாஜிர்களான) அவர்களுக்குமிடையே (எங்கள்) பேரீச்ச மரங்களைப் பங்கிடுங்கள்” என்று சொன் னார்கள். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்று சொல்ல அவர்கள், “(அப்படியென் றால்) அவர்கள் (முஹாஜிர் சகோதரர்கள்) எங்களுக்காக உழைக்கட்டும்; எங்களுடன் விளைச்சலில் (இலாபப்) பங்கு பெற்றுக் கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். (அதற்குச் சம்மதித்து) முஹாஜிர்கள், “நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்” என்று கூறினர்.10 அத்தியாயம் :
ஹதீஸ் 3783 — Sahih al Bukhari 63:8
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الأَنْصَارُ لاَ يُحِبُّهُمْ إِلاَّ مُؤْمِنٌ، وَلاَ يُبْغِضُهُمْ إِلاَّ مُنَافِقٌ، فَمَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللَّهُ، وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللَّهُ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக் கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான். இதை பராஉ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3784 — Sahih al Bukhari 63:9
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத் தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11 அத்தியாயம் :
ஹதீஸ் 3785 — Sahih al Bukhari 63:10
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم النِّسَاءَ وَالصِّبْيَانَ مُقْبِلِينَ ـ قَالَ حَسِبْتُ أَنَّهُ قَالَ مِنْ عُرُسٍ ـ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُمْثِلاً، فَقَالَ " اللَّهُمَّ أَنْتُمْ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ ". قَالَهَا ثَلاَثَ مِرَارٍ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: (அன்சாரிப்) பெண்களும் குழந்தை களும் எதிரில் வருவதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள்.- அறிவிப்பாளர் களில் ஒருவர் கூறுகிறார்: இதை எனக்கு அறிவித்தவர், “ஒரு மண விழாவிலிருந்து வருவதை” என்று சொன்னதாக நினைக்கிறேன் - உடனே நபி (ஸல்) அவர்கள் நேராக எழுந்து நின்றுகொண்டு, “இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள். இ(ந்த வாக்கியத்)தை அவர்கள் மூன்று முறை சொன்னார்கள். அத்தியாயம் :