حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ، حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي هِشَامُ بْنُ زَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهَا صَبِيٌّ لَهَا، فَكَلَّمَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّكُمْ أَحَبُّ النَّاسِ إِلَىَّ ". مَرَّتَيْنِ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தமது குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக்கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரி களான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று இருமுறை சொன்னார்கள். அத்தியாயம் :
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகள் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இறைத்தூதர்கள் ஒவ்வவொருவருக்கும் அவர்களைப் பின் தொடர்ந்த (சார்பு நிலை கொண்ட)வர்கள் இருந்தனர். நாங்கள் உங்களைப் பின்பற்றி னோம். ஆகவே, எங்களுக்கும் எங்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
அன்சாரிகளில் ஒருவரான அபூஹம்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகள் (நபி (ஸல்) அவர்களிடம்), “ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் அவர்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்கள் உண்டு. நாங்கள் உங்களைப் பின்பற்றினோம். ஆகவே, எங்களைப் பின்பற்றும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இவர் களுடைய சார்பாளர்களை இவர்களிலிருந்தே உருவாக்கித் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.12 அத்தியாயம் :
ஹதீஸ் 3789 — Sahih al Bukhari 63:14
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي أُسَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " خَيْرُ دُورِ الأَنْصَارِ بَنُو النَّجَّارِ، ثُمَّ بَنُو عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ بَنُو الْحَارِثِ بْنِ خَزْرَجٍ، ثُمَّ بَنُو سَاعِدَةَ، وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ ". فَقَالَ سَعْدٌ مَا أَرَى النَّبِيَّ صلى الله عليه وسلم إِلاَّ قَدْ فَضَّلَ عَلَيْنَا فَقِيلَ قَدْ فَضَّلَكُمْ عَلَى كَثِيرٍ. وَقَالَ عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، سَمِعْتُ أَنَسًا، قَالَ أَبُو أُسَيْدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا، وَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ.
அபூஉசைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அன்சாரிகளின் கிளைக் குடும்பங் களில் சிறந்தது பனுந் நஜ்ஜார் குடும்ப மாகும்.13 பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும்.14 பிறகு பனூ ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பமாகும்.15 பிறகு பனூ சாஇதா குடும்பமாகும்.16 அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். சஅத் (பின் உபாதா -ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எங்களைவிட (வேறுசில குலங்களைச்) சிறப்பித்துக் கூறியதாகவே காண்கிறேன்” என்று சொன்னார்கள்.17 அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (இங்கே குறிப்பிடப்படாத மற்ற) பலரையும் விட உங்களைச் சிறப்பித்துக் கூறியுள் ளார்கள்” என்று சொல்லப்பட்டது. மற்றோர் அறிவிப்பில், “சஅத் பின் உபாதா' என்று (முழுமையாகப் பெயர்) குறிப்பிட்டு அறிவிப்பாளர் கூறியுள்ளார். அத்தியாயம் :
ஹதீஸ் 3790 — Sahih al Bukhari 63:15
حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، قَالَ أَبُو سَلَمَةَ أَخْبَرَنِي أَبُو أُسَيْدٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " خَيْرُ الأَنْصَارِ ـ أَوْ قَالَ خَيْرُ دُورِ الأَنْصَارِ ـ بَنُو النَّجَّارِ وَبَنُو عَبْدِ الأَشْهَلِ وَبَنُو الْحَارِثِ وَبَنُو سَاعِدَةَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அன்சாரிகளில் சிறந்தோர்' அல்லது “அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது' பனுந் நஜ்ஜார் குடும்பமும், பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமும் பனுல் ஹாரிஸ் மற்றும் பனூ சாஇதா குடும்பங் களும் ஆகும். இதை அபூஉசைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.18 அத்தியாயம் :
ஹதீஸ் 3791 — Sahih al Bukhari 63:16
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّاسِ بْنِ سَهْلٍ، عَنْ أَبِي حُمَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ خَيْرَ دُورِ الأَنْصَارِ دَارُ بَنِي النَّجَّارِ، ثُمَّ عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ دَارُ بَنِي الْحَارِثِ، ثُمَّ بَنِي سَاعِدَةَ، وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ ". فَلَحِقْنَا سَعْدَ بْنَ عُبَادَةَ فَقَالَ أَبَا أُسَيْدٍ أَلَمْ تَرَ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم خَيَّرَ الأَنْصَارَ فَجَعَلَنَا أَخِيرًا فَأَدْرَكَ سَعْدٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، خُيِّرَ دُورُ الأَنْصَارِ فَجُعِلْنَا آخِرًا. فَقَالَ " أَوَلَيْسَ بِحَسْبِكُمْ أَنْ تَكُونُوا مِنَ الْخِيَارِ ".
அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனுந் நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல், பிறகு பனுல் ஹாரிஸ், பிறகு பனூ சாஇதா குடும்பங்கள் ஆகும். அன்சாரிக் குடும்பங் கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார். அப்போது (அவரிடம்) அபூஉசைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளைச் சிறந்த வர்கள் எனக் குறிப்பிட்டு (அப்படிக் குறிப்பிட்டவர்களில்) நம்மைக் கடைசியானவர்களாகக் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) உடனே சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அடைந்து, “அல்லாஹ் வின் தூதரே! அன்சாரிகளின் கிளைக் குடும்பங்கள் (தங்களால்) சிறப்பித்துக் கூறப்பட்டபோது (அன்சாரிகளில் ஒரு குடும்பத்தாரான) நாங்கள் கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ளோமே (ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் மிகச் சிறந்த (குடும்பத்த)வர்களில் இடம்பெற்றிருப்பதே உங்களுக்குப் போதுமானதல்லவா?” என்று சொன்னார்கள்.19 அத்தியாயம் :
உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இன்ன மனிதரை நீங்கள் அதிகாரியாக நியமித்ததுபோல் என்னையும் அதிகாரியாக நியமிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “எனக்குப் பிறகு (உங்களைவிட மற்றவர்களுக்கு ஆட்சியதி காரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் “அல்கவ்ஸர்' எனும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுத்திருங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3793 — Sahih al Bukhari 63:18
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلأَنْصَارِ " إِنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِي أَثَرَةً فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي، وَمَوْعِدُكُمُ الْحَوْضُ ".
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், “எனக்குப் பிறகு (உங்களைவிட ஆட்சி யதிகாரத்தில் மற்றவர்களுக்கு) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில்) என்னைச் சந்திக் கும்வரை நீங்கள் பொறுமையாக இருங்கள். என்னைச் சந்திக்க உங்களுக்கு வாக்களிக் கப்பட்டுள்ள இடம் (மறுமையில் எனக்கு சிறப்புப் பரிசாக இறைவன் வழங்கவிருக்கும் அல்கவ்ஸர் எனும்) தடாகமேயாகும்.21 அத்தியாயம் :
ஹதீஸ் 3794 — Sahih al Bukhari 63:19
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ حِينَ خَرَجَ مَعَهُ إِلَى الْوَلِيدِ قَالَ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم الأَنْصَارَ إِلَى أَنْ يُقْطِعَ لَهُمُ الْبَحْرَيْنِ. فَقَالُوا لاَ، إِلاَّ أَنْ تُقْطِعَ لإِخْوَانِنَا مِنَ الْمُهَاجِرِينَ مِثْلَهَا. قَالَ " إِمَّا لاَ، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي، فَإِنَّهُ سَيُصِيبُكُمْ بَعْدِي أُثْرَةٌ ".
யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் என்னுடன் பயணம் செய்து வலீத் பின் அப்துல் மலிக்கைச் சந்தித்தபோது (வலீத் இடம்) சொன்னார்கள்:22 நபி (ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக எங்களுக்குத் தருவதற்காக அழைத்தார்கள். அன்சாரிகள், “எங்கள் முஹாஜிர் சகோதரர் களுக்கும் இதே போன்று மானியம் தந்தால் தவிர நாங்கள் இதை ஏற்க மாட்டோம்” என்று கூறினர். “நீங்கள் இதை ஏற்கமாட்டீர்கள் என்றால், என்னை (மறுமையில் “அல் கவ்ஸர்' தடாகத்தின் அருகே) சந்திக் கும்வரை பொறுத்திருங்கள். ஏனெனில், எனக்குப்பின் (ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலை உங்களுக்கு நேரும்” என்று சொன்னார்கள்.23 அத்தியாயம் :
ஹதீஸ் 3795 — Sahih al Bukhari 63:20
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو إِيَاسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَةِ، فَأَصْلِحِ الأَنْصَارَ وَالْمُهَاجِرَةَ ". وَعَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ، وَقَالَ فَاغْفِرْ لِلأَنْصَارِ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை இல்லை; அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக” என்று (பாடியபடி) சொன்னார்கள்24 இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து வேறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “அன்சாரிகளுக்கு(ம் முஹாஜிர்களுக்கும்) நீ மன்னிப்பு அளிப்பாயாக!” என்று (பாடியபடி) கூறிய தாக வந்துள்ளது. அத்தியாயம் :