அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நீ (என் அன்பை அடைந்திட) (அறவழியில்) செலவு செய். உனக்காக நான் செலவு செய்வேன்” என்று சொன்னான். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள் ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கின்றது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்டது எதுவும் அவனது கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்துவிடவில்லை பார்த்தீர்களா! (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனது அரியணை (அர்ஷ்) நீரின் மேóருந்தது. அவனது கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகின்றான்; உயர்த்துகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (11:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஉதராக்க' எனும் சொல் “அரவ்த்துஹு' எனும் (வினைச்)சொல்லிலிருந்து “இஃப்தஅல்த்த' எனும் வாய்பாட்டு வினையெச்சத்தில் அமைந்துள்ளது. “அரவ்த்துஹு' என்பதற்கு “அவனுக்கு நான் கேடு உண்டாக்கினேன்' என்று பொருள். இ(ந்த மூலத்)திலிருந்துதான் “யஉரூஹு' (அவனுக்குப் பாதிப்பை உண்டாக்குவான்), “இஉதரானீ' (எனக்கு அவன் பாதிப்பை உண்டாக்கினான்) ஆகிய வினைச்சொற்கள் பிறந்தன. “ஒவ்வோர் உயிரினத்தின் குடுமியும் அவனது பிடியிலேயே இருக்கிறது” எனும் (11:56ஆவது) வசனத்தின் கருத்தாவது: அவனது ஆட்சியதிகாரத்திலேயே உள்ளது. (11:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அநீத்' எனும் சொல்லும் (அதே போன்ற) “அநூத்', “ஆநித்' ஆகிய சொற்களும் (“இறுக்கமான பிடிவாதக்காரன்' என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும். (11:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யகூலுல் அஷ்ஹாத்' (சாட்சியாளர்கள் கூறுவர்) எனும் தொடரில் “அல்அஷ்ஹாத்' என்பதன் ஒருமை “ஷாஹித்'; “அஸ்ஹாப்' என்பதன் ஒருமை “ஸாஹிப்' (நண்பன்) என்பதைப் போல. (11:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தஅமரக்கும்' எனும் சொல்லுக்கு “உங்களை (அதில்) வசிப்பவர்களாக ஆக்கினான்' என்று பொருள். இதே வகையைச் சேர்ந்ததே “அஉமர்த்துஹுத் தார' என்பதும். இதன் பொருள்: அவனுக்கு இவ்வீட்டை (அவன் வாழ்நாள் முழுவதும்) உடைமையாக்கிக் கொடுத்தேன். (11:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நகிரஹும்' எனும் சொல்லும், (அதே போன்ற) “அன்கரஹும்', “இஸ்தன்கரஹும்' ஆகிய சொற்களும் (“அவர்களைப் புதிராகப் பார்த்தார்' என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும். (11:73ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹமீதுன் மஜீத்' என்பதில் “மஜீத்' (மாட்சிமை மிகுந்தவன்) எனும் சொல் “மாஜித்' எனும் (வினையாலணையும் பெயர்ச்) சொல்லில் இருந்து “ஃபஈல்' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும். “ஹமீத்' (புகழுக்குரியவன்) எனும் சொல் “ஹமித' எனும் (வினைச்)சொல்லிலிருந்து செயப்பாட்டு எச்சவினையின் (மஹ்மூத்) பொருள் கொண்டதாகும். (11:82ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சிஜ்ஜீல்' எனும் சொல்லுக்கு “கெட்டியான, பெரிய' என்று பொருள். “சிஜ்ஜீல்', “சிஜ்ஜீன்' இரண்டுக்கும் பொருள் ஒன்றே. (இச்சொற்களின் இறுதியிலுள்ள) “லாம்', நூன்' ஆகிய எழுத்துகள் (உச்சரிப்பில்) நெருக்கமானவையாகும். (கவிஞர்) தமீம் பின் முக்பில் கூறினார்: எத்தனையோகாலாட் படையினர்முற்பகல் வேளையில்கடுமையாக (சிஜ்ஜீன்)தாக்கிவிடுகின்றனர்தலைக் கவசங்களில்!மாபெரும் வீரர்கள்கூடஅதைப் பற்றி அறிவுறுத்துவர்இறுதி மூச்சின்போது.3 அத்தியாயம் :
ஹதீஸ் 4685 — Sahih al Bukhari 65:207
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، وَهِشَامٌ، قَالاَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، قَالَ بَيْنَا ابْنُ عُمَرَ يَطُوفُ إِذْ عَرَضَ رَجُلٌ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ ـ أَوْ قَالَ يَا ابْنَ عُمَرَ ـ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي النَّجْوَى فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " يُدْنَى الْمُؤْمِنُ مِنْ رَبِّهِ ـ وَقَالَ هِشَامٌ يَدْنُو الْمُؤْمِنُ ـ حَتَّى يَضَعَ عَلَيْهِ كَنَفَهُ، فَيُقَرِّرُهُ بِذُنُوبِهِ تَعْرِفُ ذَنْبَ كَذَا يَقُولُ أَعْرِفُ، يَقُولُ رَبِّ أَعْرِفُ مَرَّتَيْنِ، فَيَقُولُ سَتَرْتُهَا فِي الدُّنْيَا وَأَغْفِرُهَا لَكَ الْيَوْمَ ثُمَّ تُطْوَى صَحِيفَةُ حَسَنَاتِهِ، وَأَمَّا الآخَرُونَ أَوِ الْكُفَّارُ فَيُنَادَى عَلَى رُءُوسِ الأَشْهَادِ هَؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ ". وَقَالَ شَيْبَانُ عَنْ قَتَادَةَ حَدَّثَنَا صَفْوَانُ.
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அபூஅப்திர் ரஹ்மான்) இப்னு உமர் (ரலி) அவர்கள் (கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு, “அபூஅப்திர் ரஹ்மானே!' அல்லது “இப்னு உமரே!' (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர் “அவருடைய இறைவனுக்கருகில் கொண்டுவரப்படுவார்.' அல்லது “இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார்.' அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். (அவரிடத்தில் இறைவன்), “நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா” என்(று கேட்)பான். அவர், “(ஆம்) அறிவேன். என் இறைவா!” என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், “இவற்றை யெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகின்றேன்” என்று கூறுவான். பிறகு அவரது நற்செயல்களின் பதிவேடு (அவரிடத்தில் வழங்கப்பட்டுச்) சுருட் டப்படும். “மற்றவர்கள்' அல்லது “இறைமறுப்பாளர்கள்' சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, “இவர் கள்தான், தம் இறைவன்மீது பொய் யைப் புனைந்துரைத்தவர்கள்” என அறிவிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்றார்கள்.5 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 4686 — Sahih al Bukhari 65:208
حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ ". قَالَ ثُمَّ قَرَأَ {وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهْىَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ}
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அநீதியாளனுக்கு விட்டுக்கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவேமாட்டான்” என்று கூறிவிட்டு, பிறகு,”அநீதி இழைக்கும் ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனது பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனது பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதும் ஆகும்” எனும் (11:102ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 4687 — Sahih al Bukhari 65:209
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ ـ هُوَ ابْنُ زُرَيْعٍ ـ حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَصَابَ مِنَ امْرَأَةٍ قُبْلَةً، فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَأُنْزِلَتْ عَلَيْهِ {وَأَقِمِ الصَّلاَةَ طَرَفَىِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ}. قَالَ الرَّجُلُ أَلِيَ هَذِهِ قَالَ " لِمَنْ عَمِلَ بِهَا مِنْ أُمَّتِي ".
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (அந்நியப்) பெண் ஒருவரை முத்தமிட்டுவிட்டார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது “பகலின் இரு முனைகளிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுங்கள். நிச்சயமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன. (அல்லாஹ்வை) நினைவுகூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல் ஆகும்” எனும் (11:114ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அந்த மனிதர், “இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான்” என்று பதிலளித்தார்கள்.6 அத்தியாயம் :
ஹதீஸ் 4688 — Sahih al Bukhari 65:210
وَقَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَرِيمُ بْنُ الْكَرِيمِ بْنِ الْكَرِيمِ بْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தான் கண்ணியத்திற்குரியவர். அவர், இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம், “மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்விடம் மக்களிலேயே கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தான்” என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், “நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் நபி (இஸ்ஹாக்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் நபி (யஅகூப்) உடைய புதல்வரான அல்லாஹ்வின் நபி யூசுஃப் அவர்கள்தான்” என்று பதிலளித்தார்கள். மக்கள், “இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், “அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியரின் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? என்றார்கள். மக்கள், “ஆம்' என்றனர். நபி (ஸல்) அவர்கள், “அறியாமைக் காலத்தில் உங்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள்தான் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர் களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.3 அத்தியாயம் :
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள்மீது அவதூறு கற்பித்தவர்கள், தாம் சொன்னதைச் சொல்லிக்கொண்டிருந்தபோது ஆயிஷா (ரலி) குற்றமற்றவர்கள் என்று அல்லாஹ் அறிவித்ததைப் பற்றி நான், உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிட மிருந்து செவியுற்றுள்ளேன். இவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு எடுத்துரைத்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்), “நீ நிரபராதி என்றால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்ற மற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் புரிந்திருந்தால் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு” என்று சொன்னார்கள். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! யூசுஃப் (அலை) அவர்களுடைய தந்தையை விட(ச் சிறந்த) முன்னுதாரணம் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. எனவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்” (12:18) என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், “இந்த அவதூறைப் புனைந்து கொண்டுவந்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்...” என்று (தொடங்கும் 24:11 முதல் 20 வரையுள்ள) பத்து வசனங்களை அருளினான்.4 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் ஆயிஷாவும் வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தபோது ஆயிஷாவுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “(அவரைப் பற்றிப்) பேசப்பட்டுவரும் பேச்சின் காரணத்தால் (காய்ச்சல் வந்து) இருக்கலாம்!” என்று கூறினார்கள். நான், “ஆம்! (அப்படித்தான்)” என்றேன். ஆயிஷா எழுந்து உட்கார்ந்து கொண்டு, எனக்கும் உங்களுக்கும் உரிய முன்னுதாரணம் யஅகூப் (அலை) அவர்களும் அவர்களுடைய பிள்ளை களும் ஆவர். இல்லை; உங்கள் மனம் ஒரு (பெரிய) காரியத்தை உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. எனவே, அழகான பொறுமையே (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்துரைப்பவற்றிலிருந்து அல்லாஹ்விடமே உதவி கோர வேண்டும்” (12:18) என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (12:23ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “காலத் ஹைத்த லக்க' எனும் தொடரை, அது நமக்கு எப்படிக் கற்றுத் தரப்பட்டுள்ளதோ அப்படியே நாம் ஓதுகிறோம் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். (12:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஸ்வாஹு' எனும் சொல்லுக்கு “இவரைத் தங்கவைத்தல்' என்பது பொருள். (12:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்ஃபயா' எனும் சொல்லுக்கு “அவர்கள் இருவரும் கண்டனர்' என்று பொருள். (37:69ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள “அல்ஃபவ் ஆபாஅஹும்' என்பதற்கு “அவர்கள் தம் மூதாதையரைக் கண்டார்கள்' என்று பொருள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், (37:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “பல் அஜிப்த்த வ யஸ்கரூன்' என்பதை) “பல் அஜிப்த்து வ யஸ்கரூன்' (நான் ஆச்சரியப்படுகின்றேன்; அவர்களோ பரிகசிக்கின்றனர்) என்று ஓதினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடமிருந்து குறைஷியர் இஸ்லாத்தை ஏற்கக் காலம் தாழ்த்தியபோது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட) ஏழாண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்தி என்னை இவர்களிடமிருந்து பாதுகாத்திடுவாயாக!” என்று (அவர்களுக்கெதிராகப்) பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் வந்து (வளங்கள்) அனைத் தையும் அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், அவர்கள் எலும்புகளைச் சாப்பிட்டனர்; (கடும் பசி, பட்டினியால் கண் பஞ்சடைந்து பார்வை மங்கி அவர்களில்) ஒருவர் வானத்தை நோக்கினால், அவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். அல்லாஹ் கூறுகின்றான்: “இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும்” (44:10). மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் சற்று வேதனையை அகற்றி விடுகின்றோம். (ஆனால், அப்போதும்) நீங்கள் (பழைய நிலைக்கே) திரும்புகிறீர்கள் (44:15). இந்நிலையில், மறுமை நாளில் இறைமறுப்பாளர்களைவிட்டு வேதனை நீக்கப்படுமா என்ன? (நிச்சயம் நீக்கப்படப் போவதில்லை.) ஆக, (கடுமையான பசி, பட்டினி ஏற்பட்டதன் மூலம்) அந்தப் புகையும் வந்துவிட்டது; பத்ர் போரில் (இறைவனின்) தண்டனையும் வந்துவிட்டது.5 அத்தியாயம் :