அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) “லூத்' (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டு வானாக! அன்னார் வலுவான ஓர் ஆதர வாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவுக்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க்கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். அவர்களிடம் அல்லாஹ், “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டபோது அவர்கள், “ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்துபோனதை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்” என்று பதிலளித்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “(நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறைஉதவி வரும் என்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும்கூட)க்கருதலானார்கள். இந்நிலையில் நமது உதவி அவர்களை வந்தடைந்தது” என்று அல்லாஹ் கூறுகின்றான் (12:110). இவ்வசனத்தின் மூலத்தில் (“பொய் யுரைக்கப்பட்டது என்பதைக் குறிப்ப தற்குரிய சொல்லை) “குஃத்திபூ' (தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது “குஃதிபூ' (மக்கள் தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது எனக் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? என்று நான் கேட்டேன். “குஃத்திபூ (தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள்) என்றுதான் வாசிக்க வேண்டுமென ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். உடனே, “தங்களுடைய சமுதாயத்தார் தங்களைப் பொய்ப்பித்திருக்கிறார் கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள். (ஆனால், “ழன்னூ- நபிமார்கள் சந்தேகித்தார்கள்' என்றுதானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகின்றவாறு எப்படிப் பொருள் கொள்ள முடியும்?)” என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆம்! என் ஆயுளின் (இரட்சகன்) மீதாணையாக! அதை அவர்கள் உறுதியாக நம்பியே இருந்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், “ழன்னூ' என்பதற்கு “நபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்' என்றே பொருள் கொள்ள வேண்டும்; “சந்தேகித்தார்கள்' என்று பொருள் கொள்ளக் கூடாது)” என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) அவர்களிடம் நான், “ “கத் குஃதிபூ' (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்று நபிமார்கள் கருதலானார்கள்) என்று இருக்கலாமோ!” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் காப்பற்றட்டும்! நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை” என்றார்கள். உடனே நான், “இந்த வசனம் (கூறும் பொருள்)தான் என்ன?” என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “இறைத் தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தார் தங்கள் இறைவனை நம்பி, இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என்று ஏற்று, அதன் பிறகு (தாம் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே போய், இறைஉதவியும் தள்ளிப் போய்க்கொண்டிருந்த அந்த(ச் சூழ்) நிலையில்தான், அந்த இறைத்தூதர்கள், தம் சமுதாயத்தாரில் தமது செய்தியை பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டனர். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள்கூட (இறைஉதவி வரத் தாமதமான தாலும், துன்பமும் துயரமும் நீண்டுகொண்டே சென்ற காரணத்தாலும்) நமது செய்தியைப் பொய்யென்று கருதுகின்றார்கள் என்றும் அந்த இறைத்தூதர்கள் எண்ணலானார்கள். அப்போதுதான் நமது உதவி அவர்களை வந்தடைந்தது” (என்பதே அந்த வசனத்தின் பொருள்) எனப் பதிலளித்தார்கள்.7 அத்தியாயம் :
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்), “அது அழுத்தல் குறி இல்லாமல் “குஃதிபூ' என்றிருக்கலாம் அல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் காப்பாற்றட்டும்' என்று மேற்கண்டபடி சொன்னார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருப்பைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும், மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், “ “ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்' அல்லது “(அவரைப்) போன்றிருக்கும்' ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. மேலும் இப்படி... இப்படி... இப்படியெல்லாம் இராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக்கொண்டிருக்கும். (அத்தகைய ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள்)” என்று சொன்னார்கள். அப்போது என் மனத்தில், “அது பேரீச்ச மரம்தான்” என்று தோன்றியது. அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை நான் கண்டேன். ஆகவே, நான் பேச விரும்பவில்லை. (அங்கிருந்த) மக்கள் ஒன்றும் சொல்லாமலிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தாமே), “அது பேரீச்சமரம்” என்று கூறினார்கள். நாங்கள் (புறப்பட) எழுந்தபோது நான் உமர் (ரலி) அவர்களிடம், “என் அன்புத் தந்தையே! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனத்தில் அது பேரீச்சமரம்தான் என்று தோன்றியது” என்றேன். அதற்கு அவர்கள், “(அப்துல்லாஹ்!) நீ ஏன் (மனத்தில் தோன்றியதைக்) கூறாமலிருந்தாய்?” என்று கேட்டார்கள். நான், “நீங்களெல்லாரும் பேசாமலிருப்பதைப் பார்த்தேன். எனவே, நான் பேசவோ எதுவும் சொல்லவோ விரும்பவில்லை” என்று பதிலளித்தேன். உமர் (ரலி) அவர்கள், “நீ அதைச் சொல்லியிருந்தால் அதுவே இன்ன இன்ன (செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாய் இருந்திருக்கும்” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் (இறந்தபின்) அடக்கத் தலத்தில் விசாரிக்கப்படும்போது, அவர், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என்று உறுதிமொழி கூறுவார். இதுதான், “(இறை)நம்பிக்கை கொண் டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும் மறுமையிலும் உறுதிப்படுத்துகின்றான்' எனும் (14:27ஆவது) இறைவசனத்தின் கருத்தாகும். இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3 அத்தியாயம் :
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் அருட்கொடையை இறைமறுப்பாக மாற்றி (தம்முடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் தள்ளி விட்டவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? எனும் (14:28ஆவது) இறைவசனம், மக்காவாசிகளில் இருந்த இறைமறுப்பாளர்களைக் குறிக்கிறது” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.4 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (சுஃப்யான் (ரஹ்) அல்லாத) மற்றவர் களின் அறிவிப்பில், “(அந்த ஓசையின் மூலம்) அல்லாஹ் தன் கட்டளையை வானவர்களுக்கு எட்டச்செய்வான்” என்று (கூடுதலாகக்) காணப்படுகிறது. (இறைக்கட்டளையைச் செவியுறும் வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள். பின்னர்) அவர்களின் இதயத்தைவிட்டுப் பீதி அகற்றப்படும்போது அவ்வானவர்கள், (அல்லாஹ்விற்கு நெருக்கமாயிருக்கும்) வானவர்களிடம், “நம் இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவுகின்றனர். அவர்கள் வினவியோரிடம், “(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்” என்று பதிலளிப்பர். உடனே, (இறைவனின் கட்டளை குறித்த) அந்த உரையாடலை ஒட்டுக்கேட்பவர்கள் செவியேற்றுவிடுகின்றனர். ஒருவர் மற்றவர் மேலே இருந்துகொண்டு இவ்வாறாக (கடைசி ஆள்வரை) ஒட்டுக்கேட்கின்றனர். சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (தமது அறிவிப்பில், அவர்களில் ஒருவர் மற்றவர் மேல் இருக்கும் விதத்தை) தமது வலக் கையின் விரல்களை விரித்துவைத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது அடுக்கி வைத்து (சைகையால்) விளக்கிக் காட்டினார்கள். அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் ஒருவர் அதைத் தம் சகாவிடம் தெரிவிப்ப தற்கு முன்பாகவே சில சமயங்களில் அவரைத் தீச்சுவாலை தாக்கிக் கரித்து விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் (தீச்சுவாலை) அவரைச் சென்றடைவதற் குள்ளாகவே (அந்த உரையாடலை) அவர் தமக்கு அடுத்துள்ளவரிடமும், அவர் தமக்குக் கீழுள்ளவரிடமும் தெரிவித்து இறுதியாகப் பூமிவரை அதைச் சேர்த்துவிடுகிறார்கள். சுஃப்யான் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “கடைசியில் அது பூமிக்கு வந்துசேர்ந்து சூனியக்காரனின் வாயில் இடப்படுகிறது. உடனே அவன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சில உண்மைகளை (மட்டும்) கூறுகின்றான். (இதைக் கேட்கும்) மக்கள், “இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென சூனியக்காரர்கள் நம்மிடம் கூற, அதை நாம் உண்மையானதாகவே காணவில்லையா?' என்று கூறுவார்கள். வானிலிருந்து ஒட்டுக்கேட்கப்பட்ட தகவலினாலேயே இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்து வந்துள்ள மற்றோர் அறிவிப்பில், “சூனியக்காரன் மற்றும் சோதிடனின் வாயில் இடப்படுகிறது” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் இந்த ஹதீஸை அம்ர் பின் தீனாரிடம் கேட்டபோது, அன்னார் இக்ரிமாவிடமும், இக்ரிமா அபூஹுரைரா (ரலி) அவர்களிடமும் கேட்டதாகத் தெரிவித்தாரா?” என வினவினேன். அதற்கு சுஃப்யான், “ஆம்' என்று பதிலளித் தார்கள். மேலும், நான் சுஃப்யான் அவர்களிடம், “இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள “ஃபுஸ்ஸிஅ' (பீதி அகற்றப்படும்போது) எனும் சொல்லை நபி (ஸல்) அவர்கள் அவ்வாறுதான் (“ஃபுஸ்ஸிஅ' என்று) ஓதினார்கள் என நீங்கள் குறிப்பிட்டதாக ஒருவர் அறிவித்தாரே! (அது சரிதானா?)” என்று வினவினேன். அதற்கு அன்னார், “அம்ர் பின் தீனார் அவர்கள் இவ்வாறுதான் ஓதினார்கள். ஆனால், அம்ர் (இக்ரிமாவிடமிருந்து) இவ்வாறுதான் செவியுற்றாரா என்பது எனக்குத் தெரியாது. இதுவே எங்களது ஓதல் முறையாகும்” என்று பதிலளித்தார்கள்.2 அத்தியாயம் :
ஹதீஸ் 4702 — Sahih al Bukhari 65:224
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأَصْحَابِ الْحِجْرِ " لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ الْقَوْمِ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ فَإِنْ لَمْ تَكُونُوا بَاكِينَ فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ ".
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹிஜ்ர்'வாசிகளைக் குறித்து, “இந்தச் சமுதாயத்தாரின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லும்போது அழுதுகொண்டே செல்லுங்கள். நீங்கள் அழுதபடி செல்லப் போவதில்லையென்றால், அவர்களைத் தீண்டிய வேதனை உங்களையும் தீண்டி விடாமலிருக்க அவர்(களின் வசிப்பிடங்)களைக் கடந்துசெல்லாதீர்கள்” என்று சொன்னார்கள்.3 அத்தியாயம் :
அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நான் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் என்னைக்கடந்து சென்றார்கள். அப்போது என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும்வரை அவர்களிடம் செல்லவில்லை. (தொழுது முடித்த) பிறகு சென்றேன். அவர்கள், “(நான் அழைத்த வுடன்) நீர் ஏன் என்னிடம் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் தொழுதுகொண்டிருந்தேன்” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் நீங்கள் பதிலளியுங்கள்” என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு, “நீர் பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்லும் முன்பாக குர்ஆனிலேயே மகத்தான அத்தியாயமொன்றை உமக்கு நான் கற்றுத் தர வேண்டாமா?” என்று கேட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். நான் அவர்களுக்கு (அவர்கள் சொன்னதை) நினைவுபடுத்தினேன். அவர்கள், “அகிலத் தாரின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” (என்று தொடங்கும் “அல்ஃபாத்திஹா' அத்தியாயம்தான்.) அது திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த மகத்தான குர்ஆனும் ஆகும்” என்று சொன்னார்கள்.4 அத்தியாயம் :