அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீயை மூட்டிவிட, விட்டில் பூச்சிகளும் இதரப் பூச்சிகளும் அந்த நெருப்பில் விழுகின்றன.106 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீயை மூட்டிவிட, விட்டில் பூச்சிகளும் இதரப் பூச்சிகளும் அந்த நெருப்பில் விழுகின்றன.106 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிஎவர் இறைநம்பிக்கை கொண்டு, தம் இறைநம்பிக்கையில் அநீதியைக் கலந்திட வில்லையோ’ எனும் (6:82) இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், ‘‘நம்மில் எவர்தான் தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லை?” என்று கேட்டார்கள். அப்போது ‘‘(என் அருமை மகனே!) அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே. இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்” (என்று லுக்மான் கூறினார்) (31:13) எனும் வசனம் அருளப்பட்டது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிஎவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ’ என்னும் (6:82) வசனம் அருளப்பட்டபோது, அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமான தாகத் தென்பட்டது. ஆகவே, அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தமக் குத்தாமே அநீதியிழைத்துக்கொள்ளாதவர் யார்?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல. அது இணைவைப்பையே குறிக்கிறது. யிஎன் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே. நிச்சயமாக, இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்’ என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (குர்ஆன் எடுத்துரைக்கின்றதே, (31:13) அதை) நீங்கள் கேட்கவில்லையா?” என்று சொன்னார்கள்.110 அத்தியாயம் :
மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் அவர்கள் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்கள்: ...பிறகு (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் ஏறிச் சென்று இரண்டாம் வானத்தை அடைந்தார். அதன் வாயிலைத் திறக்கச் சொன்னார். ‘‘யார் அது?” என்ற கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘‘உங்களுடன் இருப்பவர் யார்” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘‘அவரை அழைத்து வர ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘ஆம்” என்று பதில் சொன்னார். நான் அங்கு சென்று சேர்ந்தபோது அங்கு யஹ்யா (அலை) மற்றும் ஈசா (அலை) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். (ஒருவருக்கொருவர் சின்னம்மா பெரியம்மா மகன்கள்.) ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இது யஹ்யாவும் ஈசாவும் ஆவர். இருவருக்கும் சலாம் சொல்லுங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நான் சலாம் சொன்னேன். அவர்கள் இருவரும் சலாமுக்குப் பதிலுரைத்தார்கள். பிறகு, ‘‘நல்ல சகோதரரே! நல்ல நபியே! வருக!” என்று கூறி (வாழ்த்தி)னார்கள்.113 அத்தியாயம் :
ஹதீஸ் 3431 — Sahih al Bukhari 60:102
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ بَنِي آدَمَ مَوْلُودٌ إِلاَّ يَمَسُّهُ الشَّيْطَانُ حِينَ يُولَدُ، فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ، غَيْرَ مَرْيَمَ وَابْنِهَا ". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ {وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ }.
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமை யும் அவருடைய மகனையும் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். பிறகு, ‘‘நான் இக்குழந்தையையும் அதன் வழித்தோன்றலையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு உன்னிடம் கோருகிறேன்” (என்று மர்யம் வேண்டினார்) எனும் இறைவசனத்தை (3:36) ஓதுவார்கள்.115 அத்தியாயம் :
ஹதீஸ் 3432 — Sahih al Bukhari 60:103
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا النَّضْرُ، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ، وَخَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இம்ரானின் மகள் மர்யம்தான் (அப்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் ஆவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார். இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3433 — Sahih al Bukhari 60:104
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ مُرَّةَ الْهَمْدَانِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ، كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلاَّ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மற்றப் பெண்களைவிட ஆயிஷாவுக் கான சிறப்பு, மற்ற எல்லா உணவுகளையும் விட ‘ஸரீதுஞீக்குள்ள சிறப்பைப் போன்ற தாகும். ஆண்களில் நிறையப் பேர் முழுமை பெற்றிருக்கின்றனர். ஆனால், பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகத்தில் பயணிக்கும் பெண்களி லேயே (அரபுப் பெண்களிலேயே) சிறந்த வர்கள் குறைஷிப் பெண்கள்தான். (தம்) குழந்தைகள்மீது அதிகப் பரிவுடையவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக்கூடியவர்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, ‘‘இம்ரானின் மகள் மர்யம், ஒட்டகம் எதிலும் பயணம் செய்த தேயில்லை” என்று கூறினார்கள்.117 ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன் அவனுக்கு இணை கிடையாது’ என்றும் யிமுஹம்மத் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும் யிஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்’ என்றும், ‘அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (யிஆகுக!› என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)› என்றும், ‘அவனிடமிருந்து உருவான ஓர் உயிர்’ என்றும், யிசொர்க்கம் (இருப்பது) உண்மை தான்’ என்றும், யிநரகம் (இருப்பது) உண்மை தான்’ என்றும், எவர் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான். இதை உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு ஜாபிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அவரை அல்லாஹ், சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் விரும்பிய வாசல் வழியாக அனுமதிப்பான்” எனறு கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :