இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அப்துல் கைஸ்’ குலத்தாரின் தூதுக்குழு ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது. அக்குழுவினர், “(அல்லாஹ்வின் தூதரே!) நாங்கள் ‘ரபீஆ’ குலத்தாரில் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தார் ஆவோம். (முளர் குலத்து இறைமறுப்பாளர்கள் நாம் சந்திக்கத் தடையாக உள்ளனர். போர் நிறுத்தம் செய்யப்படுகின்ற புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் தங்களிடம் வந்து சேர முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, (தெளிவான) ஆணை யொன்றை எங்களுக்குப் பிறப்பியுங்கள். அதை உங்களிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொள்வோம்; எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களையும் அதன்பால் அழைப்போம்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான்கு விஷயங்களைச் செய்யும்படி கட்டளையிடுகிறேன்; நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டாமெனத் தடைவிதிக்கிறேன்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது -அதாவது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதிகூறுவது- தொழுகையைக் கடைப்பிடிப்பது, ஸகாத் வழங்குவது, உங்களுக்குப் போரில் கிடைத்த செல்வத்தி-ருந்து ஐந்திலொரு பங்கை (இறைவனுக்காக) என்னிடம் செலுத்துவது ஆகியவைதான் நான் கட்டளையிடும் அந்த நான்கு விஷயங்கள். மேலும், (மது ஊற்றிவைக்கப் பயன்படுத்தப்படும்) சுரைக்காய் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கிறேன்” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :
ஹதீஸ் 524 — Sahih al Bukhari 9:3
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا قَيْسٌ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையைக் கடைப் பிடிப்பதாகவும், ஸகாத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்-முக்கும் நலம் நாடுவ தாகவும் உறுதிமொழி அளித்தேன். அத்தியாயம் :
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உங்களில் யார் (இனி தலைதூக்கவிருக்கும்) ‘ஃபித்னா’ (சோதனை அல்லது குழப்பம்) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கி றார்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “(அதைக் கூறுங்கள்) நீங்கள்தான் ‘நபி (ஸல்) அவர்களிடம்’ அல்லது ‘(நபி (ஸல்) அவர்களின்) அக்கூற்றைப் பற்றி’ துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக்கூடியவராய்) இருந்தீர்கள்” என்று சொன்னார்கள். நான், “ஒரு மனிதன் (இறைவழிபாட்டில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு) தன் குடும்பத்தார், சொத்து, பிள்ளைகள் ஆகியோரின் விஷயத்தில் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலமும்), தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ‘ஃபித்னா’வில் (சோதனையில்) ஆழ்த்தப்படுவார். அப்போது தொழுகை, நோன்பு, தர்மம், நன்மை புரியும்படி கட்டளையிட்டு தீமையி-ருந்து தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றேன். உமர் (ரலி) அவர்கள், “நான் (‘சோதனை’ எனும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதை(ப் பற்றி)க் கேட்கவில்லை. கடல் அலையைப் போன்று, அடுக்கடுக்காக ஏற்படக் கூடிய (நபி (ஸல்) அவர்களால் முன்னேறிவிப்புச் செய்யப்பட்ட ‘குழப்பம்’ எனும் பொருள் கொண்ட) ‘ஃபித்னா’வைப் பற்றியே கேட்கிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு நான், “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. (உங்கள் காலத்தில் அவற்றில் எதுவும் தலைதூக்கப் போவதில்லை.) உங்களுக்கும் அவற்றுக்கும் இடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது” என்று கூறினேன். “அந்தக் கதவு உடைக்கப்படுமா? அல்லது திறக்கப்படுமா” என்று கேட்டார் கள். நான், “இல்லை, அது உடைக்கப்படும்” என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறாயின், (அது உடைக்கப்பட்டுவிட்டால் பின்னர் மறுமை நாள்வரை) ஒருபோதும் அது மூடப் படாது” என்று சொன்னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) நாங்கள் (ஹுதைஃபா (ரலி) அவர்களிடம்), “உமர் (ரலி) அவர்கள் அந்தக் கதவு எதுவென்று அறிந்திருந்தார்களா?” என்று கேட்டோம். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “ஆம்; பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று உமர் (ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். (ஏனெனில்,) பொய்கள் கலவாத செய்தியையே அவருக்கு நான் அறிவித்திருந்தேன்” என்று பதிலளித்தார்கள். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே, மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களை (ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் அது குறித்து)க் கேட்கச் சொன்னோம். மஸ்ரூக் அவர்கள் கேட்டதற்கு “(அந்தக் கதவு) உமர் (ரலி) அவர்கள்தான்” என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ஒரு (அந்நியப்) பெண்ணை முத்தமிட்டுவிட்டார். அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், “(நபியே!) பக-ன் இரு முனைகளிலும் இரவில் சில பகுதிகளிலும் தொழுகையைப் கடைப் பிடிப்பீராக. நிச்சயமாக நன்மைகள் தீமைகளைப் போக்கிவிடும்” (11:114) எனும் வசனத்தை அருளினான். அந்த மனிதர், “இது எனக்கு மட்டுமா, அல்லாஹ்வின் தூதரே! (அல்லது அனை வருக்குமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(இதன்படி செயல்படும்) என் சமுதாயத்தார் அனைவருக்கும்தான்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
வலீத் பின் அல்அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தை நோக்கி சைகை செய்தவாறு அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதோ இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) என்னிடம் தெரிவித்தார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்றார்கள். “பிறகு எது?” என்று கேட்டேன். “தாய் தந்தையருக்கு நன்மை புரிவது” என்றார்கள். “பிறகு எது?” என்றேன். அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்று பதிலளித்தார்கள். இ(ம் மூ)வற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால், எனக்கு இன்னும் அதிகமாகப் பதிலளித்திருப்பார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: உங்களில் ஒருவரது (வீட்டு) வாச-ல் ஆறு ஒன்று (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அ(வ்வாறு நீராடுவ)து அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?” என்று கேட்டார்கள். “அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்க விடாது” என்று மக்கள் பதிலளித்தார்கள். “இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் குற்றங்களைக் களைகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஃகைலான் பின் ஜரீர் அல்மஅவலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தவற்றில் எதையும் (இன்று) என்னால் காண முடியவில்லை” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். “தொழுகை இருக்கிறதே” என்று (அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “(உரிய நேரத்தில் நிறைவேற்றாமல்) தொழுகையைக்கூட நீங்கள் வீணாக்கிவிடவில்லையா?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: திமஷ்க் (டமாஸ்கஸ்) நகரி-ருந்த அனஸ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(நபி (ஸல்) அவர்களது காலத் தில் நடைமுறைப்படுத்தப்பட்டு) நான் கண்டவற்றில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதையும் (முறையாக நடை முறைப்படுத்தப்படுவதை இன்று) என்னால் காண முடியவில்லை; இந்தத் தொழுகை கூட (உரிய நேரத்தில் நிறைவேற்றப் படாமல்) வீணடிக்கப்பட்டுவிட்டது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுதுகொண்டிருக்கையில் தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடுகிறார். எனவே, (தொழுதுகொண்டிருக்கும்போது எச்சில் வந்துவிட்டால்) அவர் தமக்கு வலப் பக்கத்தில் உமிழ வேண்டாம். மாறாக, தமது இடப் பாதத்திற்குக் கீழே உமிழட்டும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சயீத் பின் அபீஅரூபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தமக்கு முன்புறமாகத் துப்பலாகாது. எனினும் தமது இடப் பக்கமோ அல்லது பாதத்துக்குக் கீழேயோ துப்புக” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது. ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தமக்கு முன்புறமோ, வலப் பக்கமோ துப்பலாகாது. எனினும், தமது இடப் பக்கமோ அல்லது பாதத்துக்குக் கீழேயோ துப்புக!” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) காணப் படுகிறது. ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “கிப்லா (கஅபா) திசையில் அவர் துப்பலாகாது; தமக்கு வலப் புறமாகவும் துப்பலாகாது. எனினும், அவர் தமக்கு இடப் பக்கமோ அல்லது தமது பாதத்துக்குக் கீழேயோ துப்பட்டும்” என்று கூறப்பட்டுள்ளது.3 அத்தியாயம் :