حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ لَيْسَ لَهُ خَادِمٌ، فَأَخَذَ أَبُو طَلْحَةَ بِيَدِي، فَانْطَلَقَ بِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَنَسًا غُلاَمٌ كَيِّسٌ، فَلْيَخْدُمْكَ. قَالَ فَخَدَمْتُهُ فِي السَّفَرِ وَالْحَضَرِ، مَا قَالَ لِي لِشَىْءٍ صَنَعْتُهُ لِمَ صَنَعْتَ هَذَا هَكَذَا وَلاَ لِشَىْءٍ لَمْ أَصْنَعْهُ لِمَ لَمْ تَصْنَعْ هَذَا هَكَذَا
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள்24 என் கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத் துச் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்” என்று கூறினார்கள். ஆகவே, நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பயணத் திலும் உள்ளூரிலும் பணிவிடைகள் செய்துவந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும், ‘‘இதை ஏன் இப்படிச் செய்தாய்?” என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ‘‘ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?” என்றோ என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள் மதீனா அன்சாரிகளிலேயே நிறையப் பேரீச்சந் தோட்டங்களைச் சொத்துகளாகப் பெற்றிருந் தார். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரே அமைந்திருந்த யிபைருஹா’ தோட்டம்தான் அவருடைய சொத்துக்களிலேயே அவருக்கு மிகவும் விருப்பமான தாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அ(ந்தத் தோட்டத்)தில் நுழைந்து அதிலிருந்த நல்ல (சுவையான) தண்ணீரைப் பருகுவார்கள். ‘‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்) திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் ஒருபோதும் (நிறைவான) பலனை அடைந்துகொள்ளமாட்டீர்கள்” (3:92) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்துவிட முடியாது’ என்று அல்லாஹ் கூறுகின்றான். என் சொத்துகளிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது யிபைருஹா’ தான். அதை அல்லாஹ்வுக்காக நான் தர்மம் செய்துவிடுகிறேன். அல்லாஹ்விடம் அதன் நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக அது இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஆகவே, அல்லாஹ் தங்களுக்குக் கட்டளையிடுகின்ற இனத்தில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘நல்லது! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வமாகிவிட்டதே! அல்லது அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே! லிஇப்படி அறிவிப்பாளர் இப்னு மஸ்லமா (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் கூறியுள்ளார்லி நீர் கூறியதை நான் கேட்டேன். அதை (உம்முடைய) நெருங்கிய உறவினர்களுக்கிடையே நீர் பங்கிட்டுவிடுவதையே நான் (உசிதமானதாகக்) கருதுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘அவ்வாறே நான் செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, தம் நெருங்கிய உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரருடைய மக்களுக்குமிடையே அதைப் பங்கிட்டு விட்டார்கள்.25 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. பிந்திய மூன்று அறிவிப்புகளிலும் யிநன்மை கிடைத்துவிட்ட’ என்றே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 2770 — Sahih al Bukhari 55:33
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ رَجُلاً، قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ أُمَّهُ تُوُفِّيَتْ أَيَنْفَعُهَا إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ " نَعَمْ ". قَالَ فَإِنَّ لِي مِخْرَافًا وَأُشْهِدُكَ أَنِّي قَدْ تَصَدَّقْتُ عَنْهَا.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தம் தாயார் இறந்து விட்டதாகக் கூறிவிட்டு, ‘‘அவர் சார்பாக நான் தர்மம் (ஏதும்) செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (பலனளிக்கும்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், ‘‘என்னிடம் யிமிக்ராஃப்’ எனும் தோட்டம் ஒன்று உள்ளது. அதை நான் அவர் சார்பாகத் தர்மம் செய்துவிட்டேன் என்பதற்குத் தங்களை சாட்சியாக ஆக்கு கிறேன்” என்று கூறினார். அத்தியாயம் :
ஹதீஸ் 2771 — Sahih al Bukhari 55:34
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِبِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ " يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا ". قَالُوا لاَ. وَاللَّهِ لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பனூ நஜ்ஜார் குலத்தார் அளித்த இடத்தில்) பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டபோது, ‘‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘மாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்கள்.26 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் ஒரு சொத்தைப் பெற்றுள்ளேன். அதைவிட உயர்தரமான ஒரு சொத்தை இதுவரை நான் பெற்றதில்லை. நான் அதை என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் விரும் பினால் அதன் அசலை நீங்களே வைத்துக் கொண்டு, அதன் வருவாயை (மட்டும்) தர்மம் செய்துவிடலாம்” என்று கூறினார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள், அதன் அடிமனை விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாகவும் (எவருக்கும்) தரப்படக் கூடாது; அதற்கு எவரும் வாரிசாகவும் முடியாது என்று நிபந்தனைகளிட்டு, ஏழைகளுக்காகவும் உறவினர்களுக்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற் காகவும், அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்குச்) செலவிடுவதற்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் தர்மம் (வக்ஃப்) செய்து விட்டார்கள். அதற்கு நிர்வாகப் பொறுப்பேற்கும் காப்பாளர் அதிலிருந்து நியாயமான முறையில் உண்பதிலும் விரயம் செய்யாமல் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதிலும் தவறில்லை என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட் டார்கள்.27 அத்தியாயம் :
ஹதீஸ் 2773 — Sahih al Bukhari 55:36
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، رضى الله عنه وَجَدَ مَالاً بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ، قَالَ " إِنْ شِئْتَ تَصَدَّقْتَ بِهَا ". فَتَصَدَّقَ بِهَا فِي الْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَذِي الْقُرْبَى وَالضَّيْفِ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு செல்வத்தைப் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால் அதை (அதன் வருவாயை) தர்மம் செய்துவிடுங்கள்” என்று ஆலோசனை கூறினார்கள். ஆகவே, அதை (அதன் வருவாயை) ஏழை எளியவர்களுக்காகவும், வறியவர் களுக்காகவும், உறவினர்களுக்காகவும், விருந்தினர்களுக்காகவும் செலவிடும்படி தர்மம் (வக்ஃப்) செய்துவிட்டார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2774 — Sahih al Bukhari 55:37
حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ أَمَرَ بِالْمَسْجِدِ وَقَالَ " يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا ". قَالُوا لاَ وَاللَّهِ لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகரத்திற்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டும்படி கட்டளையிட்டார்கள். மேலும், ‘‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அக்குலத்தார், ‘‘நாங்கள் விலை கூறமாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 2775 — Sahih al Bukhari 55:38
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ عُمَرَ، حَمَلَ عَلَى فَرَسٍ لَهُ فِي سَبِيلِ اللَّهِ أَعْطَاهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيَحْمِلَ عَلَيْهَا رَجُلاً، فَأُخْبِرَ عُمَرُ أَنَّهُ قَدْ وَقَفَهَا يَبِيعُهَا، فَسَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبْتَاعَهَا فَقَالَ " لاَ تَبْتَعْهَا، وَلاَ تَرْجِعَنَّ فِي صَدَقَتِكَ ".
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது ஒரு மனிதரை ஏற்றி அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக) அனுப்பிவைத்தார்கள். அந்தக் குதிரையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அந்த மனிதர் அதை விற்பதற்காக (சந்தையில்) நிறுத்திவைத்திருப்பதாக உமர் (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்தக் குதிரையைத் தாமே வாங்கிக்கொள்ள (அனுமதி) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதை நீங்கள் வாங்க வேண்டாம்; கொடுத்த தர்மத்தை ஒருபோதும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டாம்” என்று கூறினார்கள்.28 அத்தியாயம் :
ஹதீஸ் 2776 — Sahih al Bukhari 55:39
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقْتَسِمْ وَرَثَتِي دِينَارًا، مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَئُونَةِ عَامِلِي فَهْوَ صَدَقَةٌ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் வாரிசுகள் பொற்காசையோ வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற)மாட்டார் கள்; என் துணைவியரின் செலவுகளையும் என் ஊழியரின் கூலியையும் தவிர நான் விட்டுச்செல்லும் அனைத்தும் தர்மமே யாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் வக்ஃப் செய்தபோது, அதை நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து உண்ணலாம் என்றும் அவர் தம் நண்பருக்கு (அதிலிருந்து) பணத்தை விரயம் செய்யாமல் உண்ணக் கொடுக்கலாம் என்றும் நிபந்தனையிட்டார்கள்.29 அத்தியாயம் :