حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ شَهِدْتُ الْعِيدَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ ـ رضى الله عنهم ـ فَكُلُّهُمْ كَانُوا يُصَلُّونَ قَبْلَ الْخُطْبَةِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் பெருநாள் தொழுகையில் கலந்துகொண் டுள்ளேன். அவர்கள் அனைவரும் (குத்பா) உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுப வர்களாக இருந்தனர். அத்தியாயம் :
ஹதீஸ் 963 — Sahih al Bukhari 13:12
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ ـ رضى الله عنهما ـ يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இரு பெருநாட்களிலும் (குத்பா) உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுவார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெரு நாளில் இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்போ பின்போ அவர்கள் (கூடுதலாக எதையும்) தொழ வில்லை. (உரை நிகழ்த்திய) பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க, பெண்கள் பகுதிக்கு நபி (ஸல்) அவர்கள் வந்து (அறிவுரை கூறினார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித் தார்கள். உடனே பெண்கள் (தம்மிடம் இருந் ததை பிலால் அவர்களின் கரத்திலிருந்த துணியில்) இடலாயினர். சில பெண்கள் தம் காதணிகளையும் தம் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் இட்டனர். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஈதுல் அள்ஹா பெருநாளின்போது) நபி (ஸல்) அவர்கள், “இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது (யாதெனில்), நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு தொழுகையி-ருந்து திரும்பிவந்து ‘குர்பானி’ பிராணிகளை அறுப்போம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றிவிட்டார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே யார் (குர்பானி பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன் கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று சொன்னார்கள். அப்போது அன்சாரிகளில் அபூபுர்தா பின் நியார் எனப்படும் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (தொழுகைக்கு முன்பே நான் குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது. அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டை விடச் சிறந்தது (அதை நான் அறுக்க லாமா?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “முத-ல் அறுத்த தற்குப் பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் ஒருபோதும் ‘அது நிறைவேறாது’ அல்லது ‘போதுமாகாது’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (வாகனத்தில் அமர்ந்திருந்த) இப்னு உமர் (ரலி) அவர்களின் உள்ளங்கா-ல் (ஹிஜாஸின் ஆளுநர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் ஆட்களில் ஒருவர் பாய்ச்சிய) ஈட்டியின் முனை பாய்ந்தபோது, நானும் அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களின் பாதம் வாகனத்தில் ஒட்டிக் கொண்டது. உடனே நான் (வாகனத்தி-ருந்து) இறங்கி அதைப் பிடுங்கி எடுத்தேன். -இது மினாவில் இருந்தபோது நடந்தது.- இந்தச் செய்தி ஹஜ்ஜாஜுக்கு எட்டி, அவர் இப்னு உமர் (ரலி) அவர் களை உடல் நலம் விசாரிக்க (வர)லானார். அப்போது ஹஜ்ஜாஜ், “உங்களைத் தாக்கியவர் யாரென்று தெரிந்தால் (தக்க நடவடிக்கை எடுப்போம்)” என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீர்தான் என்னைத் தாக்கினீர்” என்றார்கள். “அது எப்படி?” என்று ஹஜ்ஜாஜ் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆயுதம் எடுத்துச் செல்லக் கூடாத (பெரு நாள்) தினத்தில் நீர்தான் ஆயுதம் ஏந்திட உத்தரவிட்டீர். ஹரம் புனித எல்லைக்குள் ஆயுதம் கொண்டுவரக் கூடாது என்றி ருக்க, ஹரமுக்குள் ஆயுதங்களை நடமாட விட்டதும் நீர்தான்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (உடல் நலம் விசாரிக்க) ஹஜ்ஜாஜ் வந்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் அருகில் நானும் இருந்தேன். ஹஜ்ஜாஜ் (இப்னு உமரிடம்) அவர் எப்படி இருக்கிறார்? என்று வினவினார். தாம் நலமுடன் இருப்பதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். பிறகு “உம்மைத் தாக்கியவர் யார்?” என்று கேட்டார் ஹஜ்ஜாஜ். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாத (பெருநாள்) தினத்தில் ஆயுதங்களை எடுத்துச் செல்ல உத்தரவிட்டவரே என்னைத் தாக்கினார்” என்று -ஹஜ்ஜாஜை மனதில் வைத்துக்- குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :