Qurani·قرآني
தமிழ்

மழை வேண்டி துஆ (இஸ்திஸ்கா)

35 ஹதீஸ்கள் · #1005–1039

ஹதீஸ் 1015 — Sahih al Bukhari 15:10
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، قَحَطَ الْمَطَرُ فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا‏.‏ فَدَعَا فَمُطِرْنَا، فَمَا كِدْنَا أَنْ نَصِلَ إِلَى مَنَازِلِنَا فَمَا زِلْنَا نُمْطَرُ إِلَى الْجُمُعَةِ الْمُقْبِلَةِ‏.‏ قَالَ فَقَامَ ذَلِكَ الرَّجُلُ أَوْ غَيْرُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَصْرِفَهُ عَنَّا‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا ‏"‏‏.‏ قَالَ فَلَقَدْ رَأَيْتُ السَّحَابَ يَتَقَطَّعُ يَمِينًا وَشِمَالاً يُمْطَرُونَ وَلاَ يُمْطَرُ أَهْلُ الْمَدِينَةِ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது நின்று) உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மழை பொய்த்துவிட்டது. ஆகவே, எங்களுக்கு மழை பொழியச்செய்யுமாறு அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். எங்களுக்கு மழை பெய்தது. (எந்த அளவுக்கென்றால்) எங்களால் எங்கள் இல்லங்களுக்குச் செல்ல முடியவில்லை. அடுத்த ஜுமுஆவரை எங்களுக்கு மழை நீடித்தது. (அந்த ஜுமுஆவில்) ‘அந்த மனிதரோ’ அல்லது ‘மற்றொரு மனிதரோ’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இ(ந்த மழை மேகத்)தை எங்களைவிட்டு (வேறு பகுதிக் குத்) திருப்பிவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் சுற்றுப் புறங்கள்மீது (இம்மழையைத் திருப்பி விடுவாயாக)! எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!” என்று பிரார்த் தித்தார்கள். உடனே அம்மேகம் வலப் புறமும் இடப் புறமுமாகப் பிரிந்து சென்று அங்கிருந்தவர்களுக்குப் பொழிந்தது. மதீனாவாசிகளுக்கு மழை பொழிய வில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1016 — Sahih al Bukhari 15:11
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ هَلَكَتِ الْمَوَاشِي وَتَقَطَّعَتِ السُّبُلُ‏.‏ فَدَعَا، فَمُطِرْنَا مِنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ، ثُمَّ جَاءَ فَقَالَ تَهَدَّمَتِ الْبُيُوتُ وَتَقَطَّعَتِ السُّبُلُ، وَهَلَكَتِ الْمَوَاشِي فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا‏.‏ فَقَامَ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ ‏"‏‏.‏ فَانْجَابَتْ عَنِ الْمَدِينَةِ انْجِيَابَ الثَّوْبِ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (வெள்ளிக்கிழமை அன்று) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் (மழை வேண்டிப்) பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவி-ருந்து அடுத்த ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. (அடுத்த ஜுமுஆவில்) அதே மனிதர் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப் பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் மழையை நிறுத்துவான்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து, “இறைவா! குன்றுகள், மேடுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியனவற்றின் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!)” என்று பிரார்த்தித் தார்கள். உடனே அம்மேகம் ஆடை விலகுவதைப் போன்று (மதீனாவி-ருந்து) விலகிவிட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 1017 — Sahih al Bukhari 15:12
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ، فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَمُطِرُوا مِنْ جُمُعَةٍ إِلَى جُمُعَةٍ، فَجَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَتِ الْبُيُوتُ وَتَقَطَّعَتِ السُّبُلُ وَهَلَكَتِ الْمَوَاشِي‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ اللَّهُمَّ عَلَى رُءُوسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ ‏"‏‏.‏ فَانْجَابَتْ عَنِ الْمَدِينَةِ انْجِيَابَ الثَّوْبِ‏.‏
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (வெள்ளிக்கிழமை அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத் தால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவி-ருந்து மறு ஜுமுஆவரை மக்களுக்கு மழை பொழிந்தது. (அடுத்த ஜுமுஆவில்) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கன மழையால்) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்துவிட்டன” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! மலை உச்சிகள், குன்றுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!)” என்று பிரார்த்தித் தார்கள். உடனே அம்மேகக் கூட்டம் மதீனாவைவிட்டு ஆடை விலகுவதைப் போன்று விலகிவிட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 1018 — Sahih al Bukhari 15:13
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ، قَالَ حَدَّثَنَا مُعَافَى بْنُ عِمْرَانَ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، شَكَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم هَلاَكَ الْمَالِ وَجَهْدَ الْعِيَالِ، فَدَعَا اللَّهَ يَسْتَسْقِي، وَلَمْ يَذْكُرْ أَنَّهُ حَوَّلَ رِدَاءَهُ وَلاَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ‏.‏
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு வெள்ளிக்கிழமை அன்று) ஒரு மனிதர் (கடும் வறட்சியால் கால்நடைச்) செல்வம் அழிவது பற்றியும் குடும்பங்கள் அல்லலுறுவது பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் மழை பொழிவிக்குமாறு பிரார்த்தித்தார்கள். இதில், நபி (ஸல்) அவர்கள் தமது மேல்துண்டை மாற்றிப்போட்டதாகவோ கிப்லாவை முன்னோக்கியதாகவோ அறிவிப்பாளர் கூறவில்லை. அத்தியாயம் :
ஹதீஸ் 1019 — Sahih al Bukhari 15:14
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتِ الْمَوَاشِي، وَتَقَطَّعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ‏.‏ فَدَعَا اللَّهَ، فَمُطِرْنَا مِنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ، فَجَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، تَهَدَّمَتِ الْبُيُوتُ وَتَقَطَّعَتِ السُّبُلُ وَهَلَكَتِ الْمَوَاشِي‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ اللَّهُمَّ عَلَى ظُهُورِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ ‏"‏‏.‏ فَانْجَابَتْ عَنِ الْمَدِينَةِ انْجِيَابَ الثَّوْبِ‏.‏
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (வெள்ளிக்கிழமை அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியால்) கால்நடைகள் அழிந்து விட்டன; போக்குவரத்து தடைப்பட்டு விட்டது. (மழை வேண்டி) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவி-ருந்து மறு ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. (அடுத்த ஜுமுஆவில்) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ் வின் தூதரே! (கனமழையால்) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப் பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்து விட்டன” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! மலை உச்சிகள், குன்றுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம்மழையைத் திருப்பி விடுவாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே அம்மேகக் கூட்டம் மதீனாவை விட்டு ஆடை விலகுவதைப் போன்று விலகிவிட்டது. அத்தியாயம் :
ஹதீஸ் 1020 — Sahih al Bukhari 15:15
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا مَنْصُورٌ، وَالأَعْمَشُ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ أَتَيْتُ ابْنَ مَسْعُودٍ فَقَالَ إِنَّ قُرَيْشًا أَبْطَئُوا عَنِ الإِسْلاَمِ،، فَدَعَا عَلَيْهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَخَذَتْهُمْ سَنَةٌ حَتَّى هَلَكُوا فِيهَا وَأَكَلُوا الْمَيْتَةَ وَالْعِظَامَ، فَجَاءَهُ أَبُو سُفْيَانَ فَقَالَ يَا مُحَمَّدُ، جِئْتَ تَأْمُرُ بِصِلَةِ الرَّحِمِ، وَإِنَّ قَوْمَكَ هَلَكُوا، فَادْعُ اللَّهَ‏.‏ فَقَرَأَ ‏{‏فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ‏}‏ ثُمَّ عَادُوا إِلَى كُفْرِهِمْ فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى ‏{‏يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَى‏}‏ يَوْمَ بَدْرٍ‏.‏ قَالَ وَزَادَ أَسْبَاطٌ عَنْ مَنْصُورٍ فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَسُقُوا الْغَيْثَ، فَأَطْبَقَتْ عَلَيْهِمْ سَبْعًا، وَشَكَا النَّاسُ كَثْرَةَ الْمَطَرِ فَقَالَ ‏"‏ اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا ‏"‏‏.‏ فَانْحَدَرَتِ السَّحَابَةُ عَنْ رَأْسِهِ، فَسُقُوا النَّاسُ حَوْلَهُمْ‏.‏
மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் கூறினார்கள்: குறைஷி (இணைவைப்பாளர்)கள் இஸ்லாத்தை ஏற்காமல் காலம் தாழ்த்தியபோது, (அவர்களைத் திருத்த) அவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். இதனால் அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு, (பட்டினியால்) அழிவைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் (பட்டினியால்) செத்தவற்றையும் எலும்புகளையும் புசிக்கலாயினர். இந்நிலையில் (குறைஷி இணைவைப் பாளர்களின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! உறவுகளைப் பேணுமாறு உத்தரவிட்டபடி நீர் வந்தீர். உமது சமுதாயமோ அழிந்து கொண்டிருக்கின்றது. எனவே, (பஞ்சம் விலக) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானி-ருந்து வரும் நாளை எதிர்பார்ப்பீர்” (44:10) எனும் வசனத்தை ஓதிக் காட்டி னார்கள். (பஞ்சம் விலகியதும் பழையபடி) குறைஷியர் தம் இறைமறுப்புக்கே திரும் பிச் சென்றுவிட்டனர். இதைத்தான் “(அவர்களை) நாம் பலமாகப் பிடிக்கும் நாளில்” (44:16) எனும் வசனம் குறிப்பிடு கின்றது. (இந்த வசனத்திலுள்ள ‘பலமான பிடி’ என்பது) பத்ர் போர் தினமாகும். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். மக்களுக்கு மழை பொழிந்தது. ஏழு நாட்கள் அடை மழை பெய்தது. கனமழை குறித்து மக்கள் (நபியவர்களிடம்) முறையிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே உச்சியிலிருந்த மேகம் விலகியது. சுற்றுப்புற மக்களுக்கு மழை பொழிந்தது. அத்தியாயம் :
ஹதீஸ் 1021 — Sahih al Bukhari 15:16
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ جُمُعَةٍ، فَقَامَ النَّاسُ فَصَاحُوا فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، قَحَطَ الْمَطَرُ وَاحْمَرَّتِ الشَّجَرُ وَهَلَكَتِ الْبَهَائِمُ، فَادْعُ اللَّهَ يَسْقِينَا‏.‏ فَقَالَ ‏"‏ اللَّهُمَّ اسْقِنَا ‏"‏‏.‏ مَرَّتَيْنِ، وَايْمُ اللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً مِنْ سَحَابٍ، فَنَشَأَتْ سَحَابَةٌ وَأَمْطَرَتْ، وَنَزَلَ عَنِ الْمِنْبَرِ فَصَلَّى، فَلَمَّا انْصَرَفَ لَمْ تَزَلْ تُمْطِرُ إِلَى الْجُمُعَةِ الَّتِي تَلِيهَا، فَلَمَّا قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ صَاحُوا إِلَيْهِ تَهَدَّمَتِ الْبُيُوتُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يَحْبِسُهَا عَنَّا‏.‏ فَتَبَسَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ ‏"‏ اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا ‏"‏‏.‏ فَكُشِطَتِ الْمَدِينَةُ، فَجَعَلَتْ تُمْطِرُ حَوْلَهَا وَلاَ تَمْطُرُ بِالْمَدِينَةِ قَطْرَةً، فَنَظَرْتُ إِلَى الْمَدِينَةِ وَإِنَّهَا لَفِي مِثْلِ الإِكْلِيلِ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது நின்று) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அப்போது மக்கள் எழுந்து உரத்த குர-ல், “அல்லாஹ்வின் தூதரே! மழை பொய்த்துவிட்டது; (பச்சை) மரங்கள் (காய்ந்து) சிவந்துவிட்டன; கால்நடைகள் அழிந்துவிட்டன. எனவே, மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தி யுங்கள்?” என்று கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!” என்று (இரு முறை) கூறி னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அப்போது வானத்தில் ஒரு சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் உருவாகி மழை பொழிந்தது. நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையி-ருந்து இறங்கி (ஜுமுஆ தொழுகை) தொழுவித்தார்கள்; தொழுகையை முடித்தார்கள். அப்போதும் மழை விடாமல் அடுத்த ஜுமுஆவரை நீடித்தது. (அந்த ஜுமுஆவில்) நபி (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது அவர்களை நோக்கி மக்கள் எழுந்து, “(பெரு மழையால்) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் நம்மைவிட்டு மழையை நிறுத்துவான்” என்று உரத்த குர-ல் கூறினர். நபி (ஸல்) அவர்கள் (இதைக் கேட்டு) புன்னகை புரிந்தார்கள். பின்னர் “அல்லாஹும்ம! ஹவாலைனா; வ லா அலைனா” (“இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களுக்கு இதைத் திருப்பிவிடுவாயாக! எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே!”) என்று பிரார்த்தித்தார்கள். உடனே (சூழ்ந்திருந்த மேகம் விலகி) மதீனா தெளிவடைந்தது. அதன் சுற்றுப்புறங்களில் மழை பொழியலாயிற்று. மதீனாவில் ஒரு துளி மழைகூடப் பெய்ய வில்லை. அப்போது நான் மதீனாவை நோக்கினேன். அது கிரீடத்திற்குள் இருப்பதைப் போன்று (அதாவது நகரைச் சுற்றி மேகங்கள் சூழ நடுவில் இருப்பதைப் போன்று) இருந்தது. அத்தியாயம் :
ஹதீஸ் 1022 — Sahih al Bukhari 15:17
وَقَالَ لَنَا أَبُو نُعَيْمٍ عَنْ زُهَيْرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الأَنْصَارِيُّ وَخَرَجَ مَعَهُ الْبَرَاءُ بْنُ عَازِبٍ وَزَيْدُ بْنُ أَرْقَمَ رضى الله عنهم فَاسْتَسْقَى، فَقَامَ بِهِمْ عَلَى رِجْلَيْهِ عَلَى غَيْرِ مِنْبَرٍ فَاسْتَغْفَرَ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ يَجْهَرُ بِالْقِرَاءَةِ وَلَمْ يُؤَذِّنْ، وَلَمْ يُقِمْ‏.‏ قَالَ أَبُو إِسْحَاقَ وَرَأَى عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ النَّبِيَّ صلى الله عليه وسلم‏.‏
அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (மழைத் தொழுகை நடத்த திறந்தவெளிக்குப்) புறப்பட்டுச் சென்றார் கள். அவர்களுடன் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகி யோரும் சென்றனர். அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஏதும் இல்லாமல் தரையில் நின்றுகொண்டே பாவமன்னிப்புக் கோரி னார்கள். பிறகு சப்தமிட்டு ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பாங்கும் சொல்லவில்லை; இகாமத்தும் சொல்லவில்லை.10 அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துள் ளார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 1023 — Sahih al Bukhari 15:18
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَبَّادُ بْنُ تَمِيمٍ، أَنَّ عَمَّهُ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ بِالنَّاسِ يَسْتَسْقِي لَهُمْ، فَقَامَ فَدَعَا اللَّهَ قَائِمًا، ثُمَّ تَوَجَّهَ قِبَلَ الْقِبْلَةِ، وَحَوَّلَ رِدَاءَهُ فَأُسْقُوا‏.‏
நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்களுக்காக மழைவேண்டிப் பிரார்த்திக்க மக்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். நின்றவண்ணமே அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிறகு ‘கிப்லா’ திசை நோக்கித் திரும்பினார்கள். தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார் கள். மக்களுக்கு மழை பொழிந்தது. அத்தியாயம் :
ஹதீஸ் 1024 — Sahih al Bukhari 15:19
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَسْتَسْقِي فَتَوَجَّهَ إِلَى الْقِبْلَةِ يَدْعُو، وَحَوَّلَ رِدَاءَهُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِمَا بِالْقِرَاءَةِ‏.‏
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க (திறந்தவெளி நோக்கிப்) புறப்பட்டுச் சென்றார்கள். (அங்கு) கிப்லாவை நோக்கித் திரும்பி நின்று பிரார்த்திக்கலானார்கள். தமது மேல் துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவற்றில் சப்தமிட்டு (குர்ஆன்) ஓதினார்கள். அத்தியாயம் :
← முந்தையது தொகுப்பிற்குத் திரும்பு அடுத்தது →

ஸஹீஹ் மற்றும் ஹஸன் தரத்திலான அறிவிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றன.