حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவா! அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்று. இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் பின் அல்வலீதைப் காப்பாற்று. இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்று. இறைவா! யிமுளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் அவர்களுடைய சமுதாயத்தாருக்குக் கொடுத்த (கடும் பஞ்சம் நிறைந்த) ஆண்டு களைப் போன்று முளருக்கும் (கடும் வறட்சி நிறைந்த) சில ஆண்டுகளைக் கொடுப்பாயாக!” என்று பிரார்த்தித்தார் கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.60 அத்தியாயம் :
ஹதீஸ் 3387 — Sahih al Bukhari 60:61
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ ابْنِ أَخِي جُوَيْرِيَةَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَأَبَا، عُبَيْدٍ أَخْبَرَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَرْحَمُ اللَّهُ لُوطًا، لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ، وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ يُوسُفُ ثُمَّ أَتَانِي الدَّاعِي لأَجَبْتُهُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், லூத் (அலை) அவர்களுக் குக் கருணை புரிவானாக! அவர்கள் பலம் வாய்ந்த ஓர் உதவியாளனிடமே தஞ்சம் புகுந்தவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் (அடைபட் டுக்) கிடந்த காலம் நான் சிறையில் (அடைபட்டுக்) கிடக்க நேர்ந்து, பிறகு (அவரிடம் வந்ததைப்போல்) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். (ஆனால், அவர் அவ்வளவு நெடுங்காலம் சிறையில் அடைபட்டுக் கிடந்தும், ‘‘தமது குற்றமற்ற தன்மையை ஏற்று அறிவிக்காத வரை சிறை’லிருந்து வெளியேற மாட்டேன்” என்று கூறிவிட்டார்.)61 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது (நடந்தவை பற்றி அவர்களின் தாயாரான) உம்மு ரூமான் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்:62 நான் ஆயிஷாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், ‘‘இன்னாரை (மிஸ்தஹ் பின் உஸாஸா (ரலி) அவர்களை) அல்லாஹ் நிந்திக்கட்டும்” என்று கூறியபடி வந்தாள். நான், ‘‘ஏன் (இப்படிச் சொல்கிறாய்?)” என்று கேட்டேன். அதற்கு அவள், ‘‘(அவதூறுச்) செய்தியை அவர் (அறியாமையால்) பரப்பிவருகிறார்” என்று பதிலளித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘எந்த (அவ தூறுச்) செய்தியை?” என்று கேட்டார். அவள் அந்த அவதூறுச் செய்தியைத் தெரிவித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இதை (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களும் (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செவியுற்றார்களா?” என்று கேட்டார். நான், ‘‘ஆம் (செவியுற்றார்கள்)” என்று பதில் சொன்னேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார்கள். பிறகு குளிர் காய்ச்சலுடன்தான் மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, ‘‘இவளுக் கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், ‘‘தன்னைப் பற்றிப் பேசப்பட்ட அவதூறுச் செய்தியைக் கேள்விப்பட்ட காரணத்தால் அவருக்குச் காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது” என்று பதிலளித்தேன். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்து கொண்டு, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். நான் (நடந்ததை எடுத்துச் சொல்லி) சமாதானப்படுத்தினாலும் நீங்கள் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் உவமை யஅகூப் (அலை) அவர்களுடையவும் அவர்களின் பிள்ளைகளுடையவும் நிலையாகும். (யஅகூப் (அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே நீங்கள் புனைந்துரைக்கும் விஷயத்தில்) அல்லாஹ்தான் உதவி கோரத் தகுதியானவன் ஆவான்” என்று சொன்னார்கள்.63 உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அதைத் தொடர்ந்து அல்லாஹ், தான் அருளிய (ஆயிஷா (ரலி) அவர்கள் நிரபராதி என்று அறிவிக்கும்) வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் அதை ஆயிஷாவுக்குத் தெரிவித்தார்கள். அதைச் செவியுற்றவுடன் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘(இதற்காக) அல்லாஹ்வுக்கு (மட்டுமே) நான் நன்றி செலுத்துகிறேன். வேறெவருக்கும் நன்றி செலுத்தமாட்டேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இறுதியில், இறைத்தூதர்கள் (மக்கள்மீது) நம்பிக்கை இழந்து, அவர்க(ளின் ஆதரவாளர்க)ளும் தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தொடங்கியபோது, அவர்களுக்கு நமது உதவி வந்தது” (12:110) என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த வசனத்தின் மூலத்தில், (யிதங்களி டம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ’ என்பதைக் குறிப்பதற்கான சொல்லை) யிகுஃத்திபூ’ (இறைத்தூதர்கள் பொய்யர்கள் என மக்களால் கருதப்பட்டார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது யிகுஃதிபூ’ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என இறைத்தூதர்களின் ஆதரவாளர்கள் எண்ணினர்) என்று வாசிக்க வேண்டுமா?” என்று நான் கேட்டேன்.64 ‘‘ யிகுத்திபூ’ (தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோமோ என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள் என்றுதான் ஓத வேண்டும்)” என ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அதாவது இறைத் தூதர்களை அவர்களின் சமுதாயத்தார் ஏற்க மறுத்தனர். உடனே, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களுடைய சமுதாயத்தார் தங்களைப் பொய்ப்பிக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள்? (ஆனால் யிழன்னூ’ லி நபிமார்கள் சந்தேகித்தார்கள் என்றுதானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகின்றவாறு எப்படிப் பொருள் கொள்ள முடியும்?)” என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அன்பு (மகனே) உர்வா! அதை அவர்கள் உறுதியாக நம்பத்தான் செய்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், யிழன்னூ’ என்பதற்கு யிநபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்’ என்றே பொருள் கொள்ள வேண்டும்; சந்தேகித்தார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது)” என்று பதில் கூறினார்கள்.65 அப்போது யிகத் குதிபூ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்று நபி மார்கள் கருதலானார்கள்)› என்று இருக்க லாமோ...? என நான் கேட்டேன்.66 அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் காப்பாற்றட்டும். நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை.67 இந்த வசனத்தின் பொருளாவது: இறைத்தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தார், தங்கள் இறைவனை நம்பி, இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்று, அதன் பிறகு (தாம் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டேபோய், இறை உதவியும் வரத் தாமதமாகிக் கொண்டிருந்த அந்த நிலையில்தான், அந்த இறைத் தூதர்கள் தம் சமுதாயத்தாரில் தமது செய்தியைப் பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டனர். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள்கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும் துன்ப துயரங்கள் நீண்டுகொண்டே போனதாலும்) நமது செய்தியைப் பொய் யென்று கருதுகின்றார்கள் என்றும் அவர்கள் எண்ணலானார்கள். அப்போதுதான் நமது உதவி அவர்களை வந்தடைந் தது.68 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் (தம் சகோதரரான) அவர் (யூசுஃப்) விஷயத்தில் நம்பிக்கை இழந்தபோது (இஸ்தைஅசூ) தனிமையில் ஆலோசனை கலந்தனர் (12:80). யியஇச’ (நம்பிக்கை இழத்தல்) என்பதன் யிஇஸ்தஃப்அல’ வாய் பாடே யிஇஸ்தைஅச’ என்பதாகும். அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கை இழந்துவிடாதீர்கள் (என யஅகூப் கூறினார்). (12:87) அதாவது நம்பிக்கை, எதிர்பார்ப்பைக் கைவிட்டுவிடாதீர்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3390 — Sahih al Bukhari 60:64
أَخْبَرَنِي عَبْدَةُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَرِيمُ ابْنُ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ عَلَيْهِمِ السَّلاَمُ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன்தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3391 — Sahih al Bukhari 60:65
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَمَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا خَرَّ عَلَيْهِ رِجْلُ جَرَادٍ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ يَحْثِي فِي ثَوْبِهِ، فَنَادَى رَبُّهُ يَا أَيُّوبُ، أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى قَالَ بَلَى يَا رَبِّ، وَلَكِنْ لاَ غِنَى لِي عَنْ بَرَكَتِكَ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அய்யூப் (அலை) அவர்கள் தமது ஆடை முழுவதையும் களைந்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளி ஒன்றின் கால் வந்து விழுந்தது. உடனே அவர்கள் அதைத் தமது துணியில் எடுக்கலானார்கள். அப்போது அவர்களின் இறைவன் (அவர்களை) அழைத்து, ‘‘அய்யூபே! நீங்கள் பார்க்கின்ற இந்தச் செல்வத்தைவிட்டு உம்மை நான் தன்னிறைவு பெற்றவராக ஆக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; (உண்மைதான்.) என் இறைவா! ஆயினும், உன் அருள்வளத்திலிருந்து நான் தேவையற்றவன் அல்லவே!” என்று பதிலளித்தார்கள்.70 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (முதன் முதலாக தமக்கு வேத அறிவிப்பு அருளப்பட்ட பின்பு) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம், தமது மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தம் ஒன்றுவிட்ட சகோதரரும் வேதம் கற்றவருமான) வரகா பின் நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறித்தவராக மாறிவிட்டிருந்த ஒரு மனிதராயி ருந்தார். அவர், (நபி ஈசா (அலை) அவர்களுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதிவந்தார். வரகா, நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் விவரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, ‘‘இவர்தான் (இறைத்தூதர்) மூசாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த (வேத அறிவிப்பைக் கொண்டுவரும்) யிநாமூஸ்’ (வானவர்) ஆவார். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப்போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்து கொண்டால், உங்களுக்கு வலிமையுடன் கூடிய உதவியை நான் புரிவேன்” என்று கூறினார்.72 யிநாமூஸ்’ என்பவர், பிறருக்கு அறிவிக் காமல் மறைக்கின்ற விஷயங்களை (இறைக் கட்டளைப்படி) இறைத்தூதருக்கு அறிவிக்கும் வானவர் ஆவார். அத்தியாயம் :
ஹதீஸ் 3393 — Sahih al Bukhari 60:67
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَدَّثَهُمْ عَنْ لَيْلَةِ أُسْرِيَ بِهِ حَتَّى أَتَى السَّمَاءَ الْخَامِسَةَ، فَإِذَا هَارُونُ قَالَ هَذَا هَارُونُ فَسَلِّمْ عَلَيْهِ. فَسَلَّمْتُ عَلَيْهِ، فَرَدَّ ثُمَّ قَالَ مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ. تَابَعَهُ ثَابِتٌ وَعَبَّادُ بْنُ أَبِي عَلِيٍّ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட (மிஃராஜ்) இரவைப் பற்றி(ய செய்திகளை) எங்களுக்கு அறிவித் தார்கள்: நான் ஐந்தாவது வானத்திற்குச் சென்றபோது, அங்கே ஹாரூன் அவர்கள் இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இவர்கள்தான் ஹாரூன் அவர்கள். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் என் சலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு, ‘‘நல்ல சகோதரரே வருக! நல்ல நபியே வருக!” என்று சொன்னார்கள்.73 இதே நபிமொழி அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3394 — Sahih al Bukhari 60:68
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ " رَأَيْتُ مُوسَى وَإِذَا رَجُلٌ ضَرْبٌ رَجِلٌ، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَرَأَيْتُ عِيسَى، فَإِذَا هُوَ رَجُلٌ رَبْعَةٌ أَحْمَرُ كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ، وَأَنَا أَشْبَهُ وَلَدِ إِبْرَاهِيمَ صلى الله عليه وسلم بِهِ، ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ، فِي أَحَدِهِمَا لَبَنٌ، وَفِي الآخَرِ خَمْرٌ فَقَالَ اشْرَبْ أَيَّهُمَا شِئْتَ. فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ فَقِيلَ أَخَذْتَ الْفِطْرَةَ، أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள், ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணெய் தடவிப்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள் நடுத்தர வயதுடைய சிவப்பான மனிதராகவும் (அப்போதுதான்) குளியலறை’லிருந்து வெளியே வந்த வரைப் போன்றும் இருந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததி களிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நான்தான். பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது; மற்றொன்றில் மது இருந்தது. (வானவர்) ஜிப்ரீல் அவர்கள், ‘‘இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர் களோ அதை அருந்துங்கள்” என்று கூறி னார்கள். நான் பாலை எடுத்து அருந்தி னேன். ‘‘நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக்கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும்” என்று சொன் னார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹதீஸ் 3395 — Sahih al Bukhari #3395
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَبَا الْعَالِيَةِ، حَدَّثَنَا ابْنُ عَمِّ، نَبِيِّكُمْ ـ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ". وَنَسَبَهُ إِلَى أَبِيهِ. وَذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ فَقَالَ " مُوسَى آدَمُ طُوَالٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ ". وَقَالَ " عِيسَى جَعْدٌ مَرْبُوعٌ ". وَذَكَرَ مَالِكًا خَازِنَ النَّارِ، وَذَكَرَ الدَّجَّالَ.
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَبَا الْعَالِيَةِ، حَدَّثَنَا ابْنُ عَمِّ، نَبِيِّكُمْ ـ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ". وَنَسَبَهُ إِلَى أَبِيهِ. وَذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ فَقَالَ " مُوسَى آدَمُ طُوَالٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ ". وَقَالَ " عِيسَى جَعْدٌ مَرْبُوعٌ ". وَذَكَرَ مَالِكًا خَازِنَ النَّارِ، وَذَكَرَ الدَّجَّالَ.