இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் லி அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10ஆவது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்றுவந்ததை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்லி யூதர்கள், ‘‘இது மாபெரும் நாள். மூசா (அலை) அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அவர்களைவிட மூசா அவர்களுக்கு மிக நெருக்கமானவன்” என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (கூடுதலான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.76 அத்தியாயம் :
ஹதீஸ் 3398 — Sahih al Bukhari 60:71
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " النَّاسُ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ الْعَرْشِ، فَلاَ أَدْرِي أَفَاقَ قَبْلِي، أَمْ جُوزِيَ بِصَعْقَةِ الطُّورِ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்துவிடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூசா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியணையின் கால்களில் ஒரு காலைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா, அல்லது யிதூர்’ சீனா மலையில் (இறைவனைச் சந்தித்தபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டார்களா என்பது எனக்குத் தெரியாது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.77 அத்தியாயம் :
ஹதீஸ் 3399 — Sahih al Bukhari 60:72
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْلاَ بَنُو إِسْرَائِيلَ لَمْ يَخْنَزِ اللَّحْمُ، وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا الدَّهْرَ ".
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்கள் மட்டும் இருந்திரா விட்டால் இறைச்சி துர்நாற்றமெடுக்காது. ஹவ்வா (ஏவாள்) அவர்கள் மட்டும் இருந்திராவிட்டால் பெண், தன் கணவனை எக்காலத்திலும் (ஆசையூட்டி) ஏமாற்ற மாட்டாள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.78 அத்தியாயம் :
உபைதுல்லாஹ் பின் அப்தில் லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹுர்ரு பின் கைஸ் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களுடன் மூசா (அலை) அவர்களு டைய தோழர் யார் என்பது தொடர்பாக (கருத்து வேறுபாடு கொண்டு) தர்க்கித்தார் கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவர் களிர் (அலை) அவர்கள்தான்” என்று கூறினார்கள். அவர்கள் இருவரை யும் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களை அழைத்து, ‘‘நானும் என்னுடைய இந்தத் தோழரும், தாம் சந்திக்கவிருப்பவரிடம் செல்ல வேண்டிய பாதையை விசாரித்த மூசா (அலை) அவர்களின் (சந்திப்புக்குரிய) தோழரைக் குறித்து (அவர் யார் என்பதில் கருத்து பேதம் கொண்டு) தர்க்கித்துக் கொண்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரைப் பற்றிக் கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று வினவினார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், ‘‘ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டேன்” என்றார்கள்: இஸ்ரவேலர்களின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து, மூசா (அலை) அவர்களிடம், ‘‘உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘‘(அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, ‘‘அப்படியல்ல; நம் அடியார் யிகளிர்’ உங்களைவிட அறிந்தவராயிருக்கிறார்” என்று கூறினான். எனவே, மூசா (அலை) அவர்கள் அவரைச் சென்றடைவதற்கான பாதையை விசாரித்தார்கள். ஆகவே, (களிர் (அலை) அவர்களைச் சந்திக்கும் இடம் வந்துவிட்டது என்பதை) மூசா (அலை) அவர்கள் புரிந்துகொள்ள மீன் அடையாளமாக ஆக்கப்பட்டது. மேலும் அவர்களிடம், ‘‘மீனை நீங்கள் தவறவிட்டுவிட்டால் உடனே (வந்த வழியே) திரும்பி வாருங்கள். அப்போது அவரை நீங்கள் சந்திப்பீர்கள்” என்று சொல்லப்பட்டது. அதன்படி, அவர்கள் கடலில் மீனைப் பின்தொடர்ந்து (சென்று)கொண்டிருந்தார் கள். அப்போது மூசா (அலை) அவர்களி டம் அவர்களின் (உதவியாளரான) இளைஞர், ‘‘நான் அந்தப் பாறையின் பக்கம் ஒதுங்கி ஓய்வெடுத்தபோது மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன். அதை நினைவில் வைத்திருக்க விடாமல் ஷைத்தான்தான் அதை எனக்கு மறக் கடித்துவிட்டான்” என்று சொன்னார். உடனே, மூசா (அலை) அவர்கள், ‘‘(அது நம்மைவிட்டு நழுவிச் செல்லும்) அந்தச் சந்தர்ப்பத்தைத்தான் நாம் எதிர்பார்த்திருந்தோம்” என்று சொன்னார் கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே நடந்து திரும்பிச் சென்றனர். (வழியில்) களிர் (அலை) அவர்களைச் சந்தித்தனர். பிறகு அல்லாஹ் தன் வேதத்தில் எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.80 அத்தியாயம் :
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நவ்ஃப் அல்பிக்காலீ என்பவர், யிகளிர்’ (அலை) அவர்களின் தோழரான மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசா (அலை) அவர்கள் அல்லர்; அவர் வேறொரு மூசாதான் என்று கருதுகிறார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பகைவன் பொய் சொல்லிவிட்டான். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நமக்கு அறிவித்து உள்ளார்கள்: (ஒருமுறை) மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடையே எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்களிடம், ‘‘மக்களிடையே மிகவும் அறிந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நான்தான்” என்று பதிலளித்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ்வே அறிந்தவன்” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ், மூசா (அலை) அவர்களிடம், ‘‘இல்லை. இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உங்களைவிட அதிகமாக அறிந்தவர்” என்று சொன்னான். மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! அவரை நான் சந்திப்பதற்கு யார் (வழி காட்டுவார்?)” என்று கேட்டார். லிஅறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், யிஇறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?› என்று மூசா (அலை) அவர்கள் கேட்டதாகவும் சொல்லியிருக்கலாம்லி அதற்கு அல்லாஹ், ‘‘நீங்கள் ஒரு மீனை எடுத்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக்கொள்ளுங்கள். (அப்படியே கடற்கரையோரமாக நடந்து செல்லுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார்” என்று சொன்னான். அதன்படியே மூசா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளர் யூஷஉ பின் நூன் அவர்களும் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு நடந்தார்கள். அவர்கள் ஒரு பாறையருகே சென்று சேர்ந்தபோது அங்கே படுத்து ஓய்வெடுத்தார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் தூங்கிவிட்டார்கள். மீன் குதித்து வெளி யேறிக் கடலில் விழுந்தது. அது கடலில் (சுரங்கம்போல்) வழியமைத்துக்கொண்டு (செல்லத் தொடங்கி)விட்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட (மீனைச் சுற்றி) ஒரு வளையம்போல் தண்ணீர் ஆகி விட்டது. மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்றுகொண்டே யிருந்தார்கள். இறுதியில், அடுத்த நாள் வந்தபோது தம் உதவியாளரை நோக்கி, ‘‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா! நாம் நமது இந்தப் பயணத்தால் மிகவும் களைப் படைந்துவிட்டோம்” என்று மூசா (அலை) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட இடத்தை மூசா (அலை) அவர்கள் தாண்டிச் செல்லும்வரை அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. அவர்களின் உதவியாளர் அவர்களிடம், ‘‘நாம் அந்தப் பாறையில் ஓய்வெடுக்க தங்கினோமே, பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன். (அதை நினைவில் வைத்திருக்காதபடி) ஷைத்தான்தான் எனக்கு அதை மறக் கடித்துவிட்டான். அது வியப்பான முறையில் கடலில் வழியமைத்துக்கொண்டு (சென்று)விட்டது” என்று சொன்னார். மீனுக்கு அது (தப்பிக்க) வழியாகவும், அவ்விருவருக்கும் அது வியப்பாகவும் அமைந்தது. மூசா (அலை) அவர்கள் அந்த உதவியாளரிடம், ‘‘அதுதான் நாம் தேடிக்கொண்டிருந்த இடம்” என்று சொன்னார்கள். உடனே அவர்கள் இருவரும் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில், அந்தப் பாறையை அடைந்தார்கள். அங்கே ஒரு மனிதர் தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தியவராக (அமர்ந்து) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் கூற, அம்மனிதர் அவர்களுக்குப் பதில் சலாம் சொன்னார். பிறகு, ‘‘உங்களுடைய (இந்தப்) பகுதி யில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எப்படி (வந்தது? நீங்கள் யார்?)” என்று களிர் வினவினார். மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசாவா” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘‘ஆம். உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக நான் உங்களிடம் வந்திருக்கின்றேன்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், ‘‘மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னி டம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர் கள்; அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஒருவகை அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்” என்று சொன்னார். மூசா (அலை) அவர்கள், ‘‘நான் உங்க ளைத் தொடர்ந்து வரட்டுமா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது. நீங்கள் அறியாத விஷயத்தை எப்படிச் சகித்துக்கொண்டிருப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நீங்கள் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்கள். எந்த விவகாரத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்” என்று சொன்னார்கள். பிறகு இருவரும் கடற்கரையோரத்தில் நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அதன் உரிமையாளர்(களான ஏழைத் தொழிலாளர்)களிடம் தங்களை ஏற்றிச்செல்லும்படி பேசினார்கள். அவர்கள் களிர் (அலை) அவர்களை அடையாளம் கண்டு அவர்களை வாடகை கேட்காமல் ஏற்றிச்சென்றார்கள். அவர்கள் இருவரும் மரக்கலம் ஏறியபோது சிட்டுக்குருவி ஒன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்தது. பிறகு அது கடலில் (அலகால்) ஒரு முறை அல்லது இருமுறை கொத்தி (நீர் அருந்தி)யது. உடனே மூசா (அலை) அவர்களிடம் களிர் (அலை), ‘‘மூசாவே! இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் (கொத்தி நீரருந்தியதால்) இந்தக் கடலிலிருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவுதான் என் அறிவும் உங்கள் அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறி னார்கள். அப்போது கிள்ர் ஒரு கோடரியை எடுத்து மரக்கலத்தின் (அடித்தளப்) பலகை ஒன்றைக் கழற்றிவிட்டார்கள். களிர் (அலை) அவர்கள் வாய்ச்சியின் உதவி யால் (மரக்கலத்தின்) பலகையைக் கழற்றிய பின்புதான் மூசா (அலை) அவர்களுக்குத் தெரியவந்தது. உடனே மூசா (அலை) அவர்கள், ‘‘என்ன காரியம் செய்துவிட்டீர் கள்? வாடகை இல்லாமலே நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டு மென்றே ஓட்டையாக்கிவிட்டீர்களே! அதில் சவாரி செய்பவர்களை மூழ்கடிக் கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் மிகப்பெரும் (கொடுஞ்)செயலைச் செய்து விட்டீர்கள்” என்று சொன்னார்கள். களிர் (அலை) அவர்கள், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையோடு இருக்க முடியாது என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்றார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘நான் மறந்துவிட்டதை வைத்து என்னைத் தண்டித்து (போகச் சொல்லி)விடாதீர்கள். என் விஷயத்தில் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். ஆக, மூசா (அலை) அவர்கள் முதல் தடவையாகப் பொறுமை யிழந்தது அவர்கள் மறந்து போனதால்தான். (பிறகு) கடலிலிருந்து அவர்கள் வெளியேறியபோது சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கடந்து சென்றார்கள். களிர் (அலை) அவர்கள் அச்சிறுவனின் தலையைப் பிடித்து, தமது கையால் இப்படிப் பிடுங்கி (தனியே எடுத்து)விட்டார்கள். லிஇந்த இடத்தில் அறிவிப்பாளர் கஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், தம் விரல்நுனிகளை எதையோ பறிப்பதைப்போல் காட்டி சைகை செய்தார்கள்லி அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம், ‘‘ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரை யல்லவா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்க வில்லையே? நீங்கள் மிகவும் தீய செயலைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறி னார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது” என்று நான் (முன்பே) சொல்ல வில்லையா?” என்று சொன்னார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உங்களுடன் வைத்தி ருக்காதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது” என்றார்கள். மீண்டும் இருவரும் நடந்தார்கள். இறுதியில், ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார் கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழலாமா என யோசித்துக்கொண்டிருந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள். (இதைக் கண்ட) உடனே களிர் (அலை) அவர்கள் (இந்தச் சுவரை நிலை நிறுத்துவோம் என்பதற்கு அடையாளமாக) தம் கையால் இப்படிச் சைகை செய்தார்கள். லிஅறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மேலே ஏதோ ஒரு பொருளைத் தடவுவது போல் சைகை காட்டினார்கள்லி லிமேலும், அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள், ‘‘சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் யிசாய்ந்தபடி’ என்னும் வார்த்தையை ஒரேயொரு முறைதான் சொல்லக் கேட்டேன்” என்று கூறுகிறார்.லி மூசா (அலை) அவர்கள், ‘‘இந்த சமுதாயத்தாரிடம் நாம் வந்து (உணவுகேட்டு)ம் அவர்கள் நமக்கு உணவளிக்கவும் இல்லை; விருந்துபசாரம் செய்யவு மில்லை (அவ்வாறிருந்தும்) வேண்டுமென்றே நீங்கள் அவர்களுடைய சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பியிருந்தால் அதற்குக் கூலி வாங்கியிருக்கலாம்” என்றார்கள். களிர் (அலை) அவர்கள், ‘‘இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண் டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக் கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறி வித்துவிடுகிறேன்” என்று கூறினார்கள். லிநபி (ஸல்) அவர்கள், யிமூசா (அலை) அவர்கள் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம். அவ்வாறிருந்தால், அல்லாஹ் அவ்விரு வரின் நிகழ்ச்சிகள் பற்றி (இன்னும் நிறைய) எடுத்துரைத்திருப்பான்’ என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: ‘‘மூசா பொறுமையாக இருந்திருப்பாரே யானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகள்) நமக்கு அறிவிக்கப்பட்டிருக் கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் ஒவ்வொரு பழுதில்லாத ஒழுங்கான மரக்கலத்தையும் நிர்பந்தமாக அபகரித்துக்கொண்டிருந்தான். மேலும், அந்தச் சிறுவனுடைய விஷயம் என்னவெனில், அவன் இறைமறுப்பாள னாக இருந்தான் (கான காஃபிரன்). அவனுடைய தாய் தந்தையர் இறைநம்பிக்கை யாளர்களாக இருந்தனர்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: பிறகு சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் என்னிடம், ‘‘அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் இப்படி ஓதுவதை இரண்டு முறை கேட்டு நான் அதை அவர்களிடமிருந்து ம”ம் செய்திருக்கிறேன். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘‘இதை அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்து நீங்கள் ம”ம் செய்தீர்களா? அல்லது அம்ர் பின் தீனாரிடமிருந்து கேட்பதற்கு முன்பு வெறெந்த மனிதரிடமிருந்தாவது அதை ம”ம் செய்தீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘வேறெவரிட மிருந்து இதை நான் ம”ம் செய்வேன்? அம்ர் பின் தீனாரிடமிருந்து அதை என்னைத் தவிர வேறெவராவது அறிவித் திருக்கிறார்களா? அவரிடமிருந்து இரண்டு அல்லது மூன்று முறை நான் செவியுற்று அதை ம”ம் செய்திருக்கிறேன்” என்று சொன்னார்கள். 81 அத்தியாயம் :
ஹதீஸ் 3402 — Sahih al Bukhari 60:75
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الأَصْبَهَانِيُّ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّمَا سُمِّيَ الْخَضِرُ أَنَّهُ جَلَسَ عَلَى فَرْوَةٍ بَيْضَاءَ فَإِذَا هِيَ تَهْتَزُّ مِنْ خَلْفِهِ خَضْرَاءَ ".
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: களிர் (அலை) அவர்கள் ஒரு காய்ந்த பொட்டல் பூமியின் மீது அமர்ந்தார்கள். உடனே அவர்களுக்குப் பின்னே அது பசுமையான (கதிர்களுடைய)தாக (உயிர் பெற்று) அசையலாயிற்று. அதனால்தான் அவர்களுக்கு யிகளிர்’ (பசுமையானவர்) என்று பெயரிடப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர் களது அறிவிப்பில் முழு ஹதீஸும் இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3403 — Sahih al Bukhari 60:76
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ. فَبَدَّلُوا فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ، وَقَالُوا حَبَّةٌ فِي شَعْرَةٍ ".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களுக்கு, ‘‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் வாசலில், சிரம் தாழ்த்தியவாறும் யிஹித்தத்துன்’ (யிபாவமன்னிப்புக் கோருகிறோம்’) என்று சொல்லியவாறும் நுழையுங்கள்” என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (யிஹித்தத்துன்’ என்னும் சொல்லை யிஹின்தத்துன்’லிகோதுமை என்று) மாற்றி விட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்தபடி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், தீட்டப்படாத ஒரு கோதுமைக்குள் ஒரு தானிய வித்து என்று சொன்னார் கள்.82 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக்கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மேனியிலிருந்து சிறிதளவுகூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால்தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக்கொண்டார்கள். அப்போது, இஸ்ரவேலர்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘‘இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால்தான் இந்த அளவுக்கு இவர் (தமது மேனியை) மறைத்துக்கொள்கிறார். (இவருக்குக்) தொழுநோய் இருக்க வேண்டும்; அல்லது விரை வீக்கம் இருக்க வேண்டும்; அல்லது வேறு ஏதேனும் குறைபாடு இருக்க வேண்டும்” என்று கூறினார்கள். மூசா (அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். ஆகவே, (இறைவனின் திட்டப்படி) ஒருநாள் மூசா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத் திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றி)க் கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக்கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களுடைய துணியுடன் ஓடலாயிற்று. மூசா (அலை) அவர்கள், தம் தடியை எடுத்துக்கொண்டு கல்லை விரட்டிப் பிடிக்க முனைந்தார்கள். ‘‘கல்லே என் துணி! கல்லே என் துணி!” என்று குரல் எழுப்பலானார்கள். (அதை விரட்டிச் சென்றபடி) இறுதியில் இஸ்ர வேலர்களின் பிரமுகர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது இஸ்ரவேலர்கள், மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே மிக அழகானவர்களாக இருப்பதை, அவர்களை ஆடையில்லா கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் சொன்ன குறைபாட்டிலிருந்து மூசா (அலை) அவர்களை அல்லாஹ் தூய்மை யாளராக ஆக்கினான். கல் (ஓடாமல்) நின்றுவிட்டது. உடனே மூசா (அலை) அவர்கள், தமது துணியை எடுத்துக்கொண்டு (கோபத்தில்) தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்க லானார்கள். (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து வடுக்கள் ஏற் பட்டன. இந்த நிகழ்ச்சியைத்தான், ‘‘இறைநம்பிக்கையாளர்களே! மூசாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக்கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்” (33:69) எனும் இறைவசனம் குறிக்கின்றது.83 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹதீஸ் 3405 — Sahih al Bukhari 60:78
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَسْمًا، فَقَالَ رَجُلٌ إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ. فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ، فَغَضِبَ حَتَّى رَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ " يَرْحَمُ اللَّهُ مُوسَى قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ ".
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட் டார்கள். அப்போது ஒருமனிதர், ‘‘நிச்சயம் இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். (அதைக் கேட்டு) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் கோப(த்தின் அடையாள)த்தை நான் அவர்களின் முகத்தில் கண்டேன். பிறகு, ‘‘மூசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதை விட மிக அதிகமாக அவர் புண்படுத்தப் பட்டார்; இருப்பினும் அவர் (பொறுமை யுடன்) சகித்துக்கொண்டார்” என்று சொன் னார்கள்.84 அத்தியாயம் :